Monday, July 21, 2014
பல்லடம் ஜூலை. 21–
பல்லடம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றுபவர் ஸ்டால்பின் (வயது 29). இளைஞர் காவல் படையை சேர்ந்தவர் சரவணன் (24). இவர்கள் நேற்று இரவு 4 ரோடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி வாகன தணிக்கை செய்தனர்.
அந்த மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் போலீஸ்காரர் ஸ்டால்பின், இளைஞர் காவல் படையை சேர்ந்த சரவணன் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென்று மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து போலீஸ்காரர் ஸ்டால்பினின் தோள் பட்டை மற்றும் கையில் குத்தினான்.
வலி தாங்க முடியாமல் ஸ்டால்பின் அலறினார். இதை அறிந்த பல்லடம் போலீசார் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீஸ்காரரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓட முயன்ற வாலிபர்களை விரட்டி சென்று பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த பஷீர் (25), சேகர் (24) என்பது தெரிய வந்தது. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...

0 comments:
Post a Comment