Monday, July 21, 2014
பல்லடம் ஜூலை. 21–
பல்லடம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றுபவர் ஸ்டால்பின் (வயது 29). இளைஞர் காவல் படையை சேர்ந்தவர் சரவணன் (24). இவர்கள் நேற்று இரவு 4 ரோடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி வாகன தணிக்கை செய்தனர்.
அந்த மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் போலீஸ்காரர் ஸ்டால்பின், இளைஞர் காவல் படையை சேர்ந்த சரவணன் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென்று மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து போலீஸ்காரர் ஸ்டால்பினின் தோள் பட்டை மற்றும் கையில் குத்தினான்.
வலி தாங்க முடியாமல் ஸ்டால்பின் அலறினார். இதை அறிந்த பல்லடம் போலீசார் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீஸ்காரரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓட முயன்ற வாலிபர்களை விரட்டி சென்று பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த பஷீர் (25), சேகர் (24) என்பது தெரிய வந்தது. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...

0 comments:
Post a Comment