Saturday, August 16, 2014
திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளியில், 4 பள்ளிகளை சேர்ந்த 2308 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் ஜெய்வாபாய் பள்ளி, நஞ்சப்பா பள்ளி, அய்யங்க்காளிபாளையம் மேல்நிலைப்பள்ளி, அனுப்பர்பாளையம் அரசுப்பள்ளி ஆகிய பள்ளி மாணவர்களுக்கு, ரூ. 85.31 லட்சம் மதிப்பிலான சைக்கிள்களை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:-
தமிழக முதல்வர் அவர்கள் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்க அயராது பாடுபட்டு வருகிறார். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் கல்விக்காக 17 ஆயிரம் கோடி ஒதுக்கி பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். பள்ளி சேர்ந்தது முதல் வரை அனைத்து உதவிகளையும் அம்மா செய்து வருகிறார்,
விலையில்லா நோட்டுப்புத்தகம், பேனா, பென்சில், என 14 வகை பொருட்களை வழங்கி வருகிறார்.
மேலும் மாணவ-மாணவிகளுக்கு விலையிலா சைக்கிள்கள், மடிக்கணினியும் வழங்கி தமிழகம் கல்வித்துறையில் முதன்மை மாநிலமாக உருவாக தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அம்மா அளித்துள்ள வசதிகளை பயன் படுத்தி நீங்கள் நல்லபடியாக படித்து முன்னேற வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
விழாவில் முதன்மை கல்வி அலுவலர் முருகன் வரவேற்றார். திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் எம். சண்முகம்,துணை தலைவர் ஆனந்த குமார், ஒன்றிய தலைவர் சாமிநாதன்,மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான்,முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம், நிலைக்குழு தலைவ்வர் அன்பகம் திருப்பதி, கவுன்சிலர்கள் கே.என்.விஜயகுமார், கீதா, சுப்பிரமணியம், மாவட்ட கல்வி அலுவலர் கரோலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...






0 comments:
Post a Comment