Saturday, August 16, 2014
திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளியில், 4 பள்ளிகளை சேர்ந்த 2308 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் ஜெய்வாபாய் பள்ளி, நஞ்சப்பா பள்ளி, அய்யங்க்காளிபாளையம் மேல்நிலைப்பள்ளி, அனுப்பர்பாளையம் அரசுப்பள்ளி ஆகிய பள்ளி மாணவர்களுக்கு, ரூ. 85.31 லட்சம் மதிப்பிலான சைக்கிள்களை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:-
தமிழக முதல்வர் அவர்கள் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்க அயராது பாடுபட்டு வருகிறார். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் கல்விக்காக 17 ஆயிரம் கோடி ஒதுக்கி பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். பள்ளி சேர்ந்தது முதல் வரை அனைத்து உதவிகளையும் அம்மா செய்து வருகிறார்,
விலையில்லா நோட்டுப்புத்தகம், பேனா, பென்சில், என 14 வகை பொருட்களை வழங்கி வருகிறார்.
மேலும் மாணவ-மாணவிகளுக்கு விலையிலா சைக்கிள்கள், மடிக்கணினியும் வழங்கி தமிழகம் கல்வித்துறையில் முதன்மை மாநிலமாக உருவாக தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அம்மா அளித்துள்ள வசதிகளை பயன் படுத்தி நீங்கள் நல்லபடியாக படித்து முன்னேற வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
விழாவில் முதன்மை கல்வி அலுவலர் முருகன் வரவேற்றார். திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் எம். சண்முகம்,துணை தலைவர் ஆனந்த குமார், ஒன்றிய தலைவர் சாமிநாதன்,மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான்,முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம், நிலைக்குழு தலைவ்வர் அன்பகம் திருப்பதி, கவுன்சிலர்கள் கே.என்.விஜயகுமார், கீதா, சுப்பிரமணியம், மாவட்ட கல்வி அலுவலர் கரோலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...






0 comments:
Post a Comment