Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in Sports

சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து தென் ஆப்ரிக்காவின் ஆல்ரவுண்டர் ஜேக்ஸ் காலிஸ் ஓய்வு பெற்றுள்ளார்.
தென் ஆப்ரிக்கா அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் காலிஸ். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கும் உலக கோப்பையில் அணிக்கு வெற்றி தேடித்தருவதே தனது லட்சியமாக காலிஸ் கூறியிருந்தார். இதனால், ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடி வந்தார். இந்நிலையில், சமீபத்தில் இலங்கை சுற்றுப்பயணத்தில் காலிஸ் மோசமாக விளையாடினார்.
3 போட்டியில் 0, 1, 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். பந்துவீசவில்லை. இதன் காரணமாக, சர்வதேச போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக நேற்று திடீர் அறிவிப்பை அவர் வெளியிட்டார். இத்துடன் எனது ஆட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது என அவர் சோகத்துடன் தனது முடிவு அறிவித்துள்ளார். தனது 19 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் 166 டெஸ்டில் விளையாடியுள்ள காலிஸ் 13,289 ரன்கள் எடுத்துள்ளார். 45 சதம், 58 அரைசதம். 328 ஒருநாள் போட்டியில் விளையாடி 11,579 ரன் எடுத்துள்ளார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...