Thursday, August 07, 2014

On Thursday, August 07, 2014 by Anonymous in
kalavadiya pozhuthugal
தங்கர்பச்சான் தமிழ் சினிமாவை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அவரது களவாடிய பொழுதுகள் படம் இன்னும் வெளியாகாமலே உள்ளது. பிரபுதேவா, பூமிகா, பிரகாஷ்ராஜ் நடித்துள்ள இப்படம் கத்தியால் விமோசனம் பெற்றுள்ளது.
 
கத்தி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐங்கரன் கருணாதான் களவாடிய பொழுதுகளை தயாரித்தார். விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டாததால் அவரும் படத்தை வெளியிடுவதில் ஆர்வம் காட்டவில்லை.
 
இந்நிலையில் ஐங்கரனின் கத்தி வெளியாகவிருக்கும் நிலையில் அதற்கு முன் களவாடிய பொழுதுகளை வெளியிட திட்டமிட்டுள்ளனர். களவாடிய பொழுதுகளை வாங்குகிறவர்களுக்கே கத்தி என்பது டீல். கத்தி லாபத்தை சம்பாதிக்கும் என்பதால் களவாடிய பொழுதுகள் சின்ன சேதாரத்தை ஏற்படுத்தினாலும் பரவாயில்லை என்று விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் டீலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்களாம்.