Thursday, August 07, 2014

On Thursday, August 07, 2014 by Anonymous in
anupama_kumar001








இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் நடித்து வருபவர் அனுபமா குமார். இவர் தற்போது தமிழில் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் வரும் கதாபாத்திரம் குறித்து இயக்குனர் கூறிய தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்து விட்டதாக அவர் கூறினார்.
இது பற்றி அனுபமா கூறுகையில், முதன்முறையாக வேறுபட்ட கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நான் நடிக்கிறேன். இது மோசமான தன்மையை வெளிப்படுத்தும் கதாபாத்திரம்.
இப்படிபட்ட தன்மை கொண்ட மக்கள் இருப்பதை அறிந்து நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன். ஏனென்றால் இப்படம் உண்மையாக நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு கதாபாத்திரத்தை இயக்குநர் உருவாக்கியுள்ளார் என தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் என்னுடைய வேடத்தில் நடிக்க மிகவும் சிரமப்பட்டேன். இப்படம் என் சினிமா பயணத்தில் மிகவும் முக்கியமான படமாக அமையும் என்று கூறினார்.