Saturday, August 30, 2014
வெள்ளக்கோவில், காமராஜபுரத்தில் வெள்ளிக்கிழமை இந்து, முஸ்லிம், கிருஸ்தவ சமயத்தினர் ஒன்றிணைந்து விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடினர்.
இங்குள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் 15-ஆவது ஆண்டாக இப்பகுதி இளைஞரணியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. ஆலயத்தில் மஹா கணபதி ஹோமம், தீர்த்த அபிஷேகம், சிறப்பு ஆராதனைகள் செய்து அருகில் மத்தள விநாயகர் சிலை அமைக்கப்பட்டு, பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலையில் கரைக்கப்பட்டது.
இக்கோவிலுக்கு அருகில் உள்ள சர்ச், மசூதிக்கு வந்தவர்களும், இப்பகுதியில் குடியிருக்கும் நூற்றுக்கணக்கான முஸ்லிம், கிருஸ்தவ மதத்தினரும் இவ்விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு உதவிகள் செய்து, பங்கேற்று வாழ்த்துத் தெரிவித்தனர்.
உத்தமபாளையம், அகலரைப்பாளையம்புதூர், புதிய பேருந்து நிலையம், முத்தூர் உள்பட 29 இடங்களில் இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.
இவைதவிர, எல்கேசி நகர், சேரன் நகர், வட்ட மலையார் தோட்டம், குமாரவலசு, மயில்ரங்கம், லக்கமநாயக்கன்பட்டி உள்பட பல்வேறு ஊர்களிலிருக்கும் விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விழாவையொட்டி, அன்னதானம் வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...

0 comments:
Post a Comment