Saturday, August 30, 2014
வெள்ளக்கோவில், காமராஜபுரத்தில் வெள்ளிக்கிழமை இந்து, முஸ்லிம், கிருஸ்தவ சமயத்தினர் ஒன்றிணைந்து விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடினர்.
இங்குள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் 15-ஆவது ஆண்டாக இப்பகுதி இளைஞரணியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. ஆலயத்தில் மஹா கணபதி ஹோமம், தீர்த்த அபிஷேகம், சிறப்பு ஆராதனைகள் செய்து அருகில் மத்தள விநாயகர் சிலை அமைக்கப்பட்டு, பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலையில் கரைக்கப்பட்டது.
இக்கோவிலுக்கு அருகில் உள்ள சர்ச், மசூதிக்கு வந்தவர்களும், இப்பகுதியில் குடியிருக்கும் நூற்றுக்கணக்கான முஸ்லிம், கிருஸ்தவ மதத்தினரும் இவ்விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு உதவிகள் செய்து, பங்கேற்று வாழ்த்துத் தெரிவித்தனர்.
உத்தமபாளையம், அகலரைப்பாளையம்புதூர், புதிய பேருந்து நிலையம், முத்தூர் உள்பட 29 இடங்களில் இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.
இவைதவிர, எல்கேசி நகர், சேரன் நகர், வட்ட மலையார் தோட்டம், குமாரவலசு, மயில்ரங்கம், லக்கமநாயக்கன்பட்டி உள்பட பல்வேறு ஊர்களிலிருக்கும் விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விழாவையொட்டி, அன்னதானம் வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment