Saturday, August 30, 2014
வெள்ளக்கோவில், காமராஜபுரத்தில் வெள்ளிக்கிழமை இந்து, முஸ்லிம், கிருஸ்தவ சமயத்தினர் ஒன்றிணைந்து விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடினர்.
இங்குள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் 15-ஆவது ஆண்டாக இப்பகுதி இளைஞரணியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. ஆலயத்தில் மஹா கணபதி ஹோமம், தீர்த்த அபிஷேகம், சிறப்பு ஆராதனைகள் செய்து அருகில் மத்தள விநாயகர் சிலை அமைக்கப்பட்டு, பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலையில் கரைக்கப்பட்டது.
இக்கோவிலுக்கு அருகில் உள்ள சர்ச், மசூதிக்கு வந்தவர்களும், இப்பகுதியில் குடியிருக்கும் நூற்றுக்கணக்கான முஸ்லிம், கிருஸ்தவ மதத்தினரும் இவ்விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு உதவிகள் செய்து, பங்கேற்று வாழ்த்துத் தெரிவித்தனர்.
உத்தமபாளையம், அகலரைப்பாளையம்புதூர், புதிய பேருந்து நிலையம், முத்தூர் உள்பட 29 இடங்களில் இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.
இவைதவிர, எல்கேசி நகர், சேரன் நகர், வட்ட மலையார் தோட்டம், குமாரவலசு, மயில்ரங்கம், லக்கமநாயக்கன்பட்டி உள்பட பல்வேறு ஊர்களிலிருக்கும் விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விழாவையொட்டி, அன்னதானம் வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
0 comments:
Post a Comment