Saturday, August 30, 2014
வெள்ளக்கோவில், காமராஜபுரத்தில் வெள்ளிக்கிழமை இந்து, முஸ்லிம், கிருஸ்தவ சமயத்தினர் ஒன்றிணைந்து விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடினர்.
இங்குள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் 15-ஆவது ஆண்டாக இப்பகுதி இளைஞரணியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. ஆலயத்தில் மஹா கணபதி ஹோமம், தீர்த்த அபிஷேகம், சிறப்பு ஆராதனைகள் செய்து அருகில் மத்தள விநாயகர் சிலை அமைக்கப்பட்டு, பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலையில் கரைக்கப்பட்டது.
இக்கோவிலுக்கு அருகில் உள்ள சர்ச், மசூதிக்கு வந்தவர்களும், இப்பகுதியில் குடியிருக்கும் நூற்றுக்கணக்கான முஸ்லிம், கிருஸ்தவ மதத்தினரும் இவ்விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு உதவிகள் செய்து, பங்கேற்று வாழ்த்துத் தெரிவித்தனர்.
உத்தமபாளையம், அகலரைப்பாளையம்புதூர், புதிய பேருந்து நிலையம், முத்தூர் உள்பட 29 இடங்களில் இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.
இவைதவிர, எல்கேசி நகர், சேரன் நகர், வட்ட மலையார் தோட்டம், குமாரவலசு, மயில்ரங்கம், லக்கமநாயக்கன்பட்டி உள்பட பல்வேறு ஊர்களிலிருக்கும் விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விழாவையொட்டி, அன்னதானம் வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...

0 comments:
Post a Comment