Saturday, August 30, 2014
On Saturday, August 30, 2014 by Unknown in பேஸ்புக்

ராப் பகலா கண்முழிச்சி
படிச்சதெல்லாம் வீணாச்சி
பரிட்ச தோல்வி கண்டிடுச்சி
போகட்டும் போடா - இனி
அடுத்த பரிட்ச எப்போன்னு
கேட்டுட்டு வாடா!!
தொரத்தி தொரத்தி காதலிச்சி
வெரட்டினது வெலகிடிச்சி
காதல் தோல்வி கண்டிடுச்சி
போகட்டும் போடா - இனி
அழகு பொண்ணு தேடி வரும்
கவல இல்லடா!!
வரிசையில கால் வலிச்சி
தேர்தலுல ஓட்டுப் போட்டா
எதிர் கட்சி ஜெயிச்சிபுட்டான்
போகட்டும் போடா - யாரும்
பதவியின்னு அமர்ந்துபுட்டா
நல்லவனும் கெட்டவனா மாறிடரான்டா!!
வேலையைத்தான் தேடி திரிஞ்சி
வேல கெடைக்கும் நேரத்துல
பொண்ணு தட்டி பறிச்சி கிட்டா
போகட்டும் போடா - இனி
சொந்த தொழில் செஞ்சி
நானும் பொழச்சிப்பேனடா!!
சேத்து வெச்ச பணத்த எல்லாம்
நோட்டம் பாத்து எடுதுப்புட்டான்
சொல்லியழ தெய்வம் கூட காணலியே
போகட்டும் போடா - காக்கும்
தெய்வத்துக்கே காவல் வேணும்
நானும் கதறி என்னடா???
இளமையத்தான் காக்க வேண்டி
காலத்ததான் கட்டப் போனேன்
முதுமையத்தான் தந்து போச்சு
போகட்டும் போடா - காலம்
தந்து போன அனுபவந்தான்
என்ன கட்டிக் காக்கும்டா!!
அடுத்தவன கெடுப்பவன்தா(ன்)
நாட்டில் அதிகம் ஆச்சுதடா
மோசமான உலகமாச்சு
போகட்டும் போடா - அடுத்து
கெடுப்பவனும் கெட்டழிவான்
நான் கண்ட உண்மைதானடா ...
சோதனைதான் வாழ்க்கையிலே
வரும் போகும் நிற்பதில்லே
அதுக்குப் போயி கலங்குவது
அர்த்தமில்லடா - எதையும்
நேர்மறையா எடுத்துகிட்டா
துன்பம் ஏதடா???
எத்தனையோ துரோகி கண்டேன்
எத்தனையோ துரோகம் கண்டேன்
தன்னபிக்கை பிடி நழுவவில்லை
வெற்றி வசமடா - நாளும்
நேர்மையுடன் இருந்துவிட்டால்
வெற்றியோடு வீர நடையும் தானடா...
- எழுதியவர் : சொ.சாந்தி
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...
0 comments:
Post a Comment