Saturday, August 30, 2014
On Saturday, August 30, 2014 by Unknown in பேஸ்புக்

ராப் பகலா கண்முழிச்சி
படிச்சதெல்லாம் வீணாச்சி
பரிட்ச தோல்வி கண்டிடுச்சி
போகட்டும் போடா - இனி
அடுத்த பரிட்ச எப்போன்னு
கேட்டுட்டு வாடா!!
தொரத்தி தொரத்தி காதலிச்சி
வெரட்டினது வெலகிடிச்சி
காதல் தோல்வி கண்டிடுச்சி
போகட்டும் போடா - இனி
அழகு பொண்ணு தேடி வரும்
கவல இல்லடா!!
வரிசையில கால் வலிச்சி
தேர்தலுல ஓட்டுப் போட்டா
எதிர் கட்சி ஜெயிச்சிபுட்டான்
போகட்டும் போடா - யாரும்
பதவியின்னு அமர்ந்துபுட்டா
நல்லவனும் கெட்டவனா மாறிடரான்டா!!
வேலையைத்தான் தேடி திரிஞ்சி
வேல கெடைக்கும் நேரத்துல
பொண்ணு தட்டி பறிச்சி கிட்டா
போகட்டும் போடா - இனி
சொந்த தொழில் செஞ்சி
நானும் பொழச்சிப்பேனடா!!
சேத்து வெச்ச பணத்த எல்லாம்
நோட்டம் பாத்து எடுதுப்புட்டான்
சொல்லியழ தெய்வம் கூட காணலியே
போகட்டும் போடா - காக்கும்
தெய்வத்துக்கே காவல் வேணும்
நானும் கதறி என்னடா???
இளமையத்தான் காக்க வேண்டி
காலத்ததான் கட்டப் போனேன்
முதுமையத்தான் தந்து போச்சு
போகட்டும் போடா - காலம்
தந்து போன அனுபவந்தான்
என்ன கட்டிக் காக்கும்டா!!
அடுத்தவன கெடுப்பவன்தா(ன்)
நாட்டில் அதிகம் ஆச்சுதடா
மோசமான உலகமாச்சு
போகட்டும் போடா - அடுத்து
கெடுப்பவனும் கெட்டழிவான்
நான் கண்ட உண்மைதானடா ...
சோதனைதான் வாழ்க்கையிலே
வரும் போகும் நிற்பதில்லே
அதுக்குப் போயி கலங்குவது
அர்த்தமில்லடா - எதையும்
நேர்மறையா எடுத்துகிட்டா
துன்பம் ஏதடா???
எத்தனையோ துரோகி கண்டேன்
எத்தனையோ துரோகம் கண்டேன்
தன்னபிக்கை பிடி நழுவவில்லை
வெற்றி வசமடா - நாளும்
நேர்மையுடன் இருந்துவிட்டால்
வெற்றியோடு வீர நடையும் தானடா...
- எழுதியவர் : சொ.சாந்தி
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
0 comments:
Post a Comment