Saturday, August 30, 2014
On Saturday, August 30, 2014 by Unknown in பேஸ்புக்
ராப் பகலா கண்முழிச்சி
படிச்சதெல்லாம் வீணாச்சி
பரிட்ச தோல்வி கண்டிடுச்சி
போகட்டும் போடா - இனி
அடுத்த பரிட்ச எப்போன்னு
கேட்டுட்டு வாடா!!
தொரத்தி தொரத்தி காதலிச்சி
வெரட்டினது வெலகிடிச்சி
காதல் தோல்வி கண்டிடுச்சி
போகட்டும் போடா - இனி
அழகு பொண்ணு தேடி வரும்
கவல இல்லடா!!
வரிசையில கால் வலிச்சி
தேர்தலுல ஓட்டுப் போட்டா
எதிர் கட்சி ஜெயிச்சிபுட்டான்
போகட்டும் போடா - யாரும்
பதவியின்னு அமர்ந்துபுட்டா
நல்லவனும் கெட்டவனா மாறிடரான்டா!!
வேலையைத்தான் தேடி திரிஞ்சி
வேல கெடைக்கும் நேரத்துல
பொண்ணு தட்டி பறிச்சி கிட்டா
போகட்டும் போடா - இனி
சொந்த தொழில் செஞ்சி
நானும் பொழச்சிப்பேனடா!!
சேத்து வெச்ச பணத்த எல்லாம்
நோட்டம் பாத்து எடுதுப்புட்டான்
சொல்லியழ தெய்வம் கூட காணலியே
போகட்டும் போடா - காக்கும்
தெய்வத்துக்கே காவல் வேணும்
நானும் கதறி என்னடா???
இளமையத்தான் காக்க வேண்டி
காலத்ததான் கட்டப் போனேன்
முதுமையத்தான் தந்து போச்சு
போகட்டும் போடா - காலம்
தந்து போன அனுபவந்தான்
என்ன கட்டிக் காக்கும்டா!!
அடுத்தவன கெடுப்பவன்தா(ன்)
நாட்டில் அதிகம் ஆச்சுதடா
மோசமான உலகமாச்சு
போகட்டும் போடா - அடுத்து
கெடுப்பவனும் கெட்டழிவான்
நான் கண்ட உண்மைதானடா ...
சோதனைதான் வாழ்க்கையிலே
வரும் போகும் நிற்பதில்லே
அதுக்குப் போயி கலங்குவது
அர்த்தமில்லடா - எதையும்
நேர்மறையா எடுத்துகிட்டா
துன்பம் ஏதடா???
எத்தனையோ துரோகி கண்டேன்
எத்தனையோ துரோகம் கண்டேன்
தன்னபிக்கை பிடி நழுவவில்லை
வெற்றி வசமடா - நாளும்
நேர்மையுடன் இருந்துவிட்டால்
வெற்றியோடு வீர நடையும் தானடா...
- எழுதியவர் : சொ.சாந்தி
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி அருகே பெருகமணி கிராமத்தில் தஞ்சை டாக்டர். எம். எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவி...
-
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூரில் அங்கம்மாள் முத்துசாமி நினைவு அறக்கட்டளை சார்பில் பெண் எழுத்தாளர்களுக்கான 2014ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள் வழங்கப்பட்டன. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
-
குடத்தில் குடிநீர் கொண்டுவர அபாயகரமான கிணற்றில் இறங்கும் பள்ளிச்சிறுமி. பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகள் குடிநீருக்காக கிணற்றில் இறக்கி...
-
திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பு அணையிலிருந்து பிரியும் பெருவளை வாய்க்காலில் பாலம் பகுதியிலிருந்து ஒருபக்க கைப்புறச்சுவர் இடிந...
0 comments:
Post a Comment