Showing posts with label பேஸ்புக். Show all posts
Showing posts with label பேஸ்புக். Show all posts
Friday, October 03, 2014
மரணம் நோக்கி ஒரு பயணம்-
உலகிலேயே இறப்பை கொண்டாடும் நகரம் காசி
மட்டுமே..இங்கு தான் மரணம் போற்றப்படுகிறது.
ஆஸ்பத்திரிகளில் கூட்டம். ஆலயங்களில் கூட்டம். ஜோதிடர்களிடமும் கூட்டம்.
எல்லா கூட்டத்தினரின் நோக்கமும், மரணத்தை தள்ளிவைத்துவிட்டு, நிம்மதியாக
நீண்ட நாள் வாழ வேண்டும் என்பது.
ஆனால் நிம்மதியாக மரணம் அடைய வேண்டும் என்பதற்காக மக்கள் ஒரே ஒரு இடத்தில் கூடுகிறார்கள். அந்த இடம்,தான் காசி நகரம். இங்கே மக்கள் இறப்பை கொண்டாடுகிறார்கள். துளி அளவும் இறப்பின் சோகம் யாரையும் வாட்டுவதில்லை. அங்கே உள்ள கோவில்களில் இசையும், மந்திரமும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மனிதர்களின் இறுதி மூச்சும் அதோடு கலந்து காற்றோடு, மண்ணோடு, நீரோடு சங்கமித்துக் கொண்டிருக்கிறது.
,‘இறப்பு யார் கையிலும் இல்லை, இறப்பு அவ்வளவு எளிதான காரியம் ஒன்றும் இல்லை’ என்பதையும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக இலட்சங்களை ஆஸ்பத்திரிகளில் செலவிடுபவர்கள் திடீரென்று இறந்து போகிறார்கள். ஆனால் காசியில் இறப்புக்காக காத்திரு ப்பவர்கள், அதைத்தேடி வருடக்கணக்கில் காத்துக்கிடக்கிறார்கள். அதுதான் கிடைத்த பாடில்லை.
காசி, பூமி தோன்றிய போதே உருவான தாக கருதப்படும் புண்ணிய நகரம். உத்தரபிரதேச மாநிலம், வாரணாசி மாவட்டம், கங்கை நதிக்கரையில் உள்ளது. 1800 கோவில்களுடன் அது, இந்தியாவிலேயே அதிகமான கோவில்களைக் கொண்ட நகரம் எந்நேரமும் பக்தர்கள் கோவில் களை நோக்கி நடந்து சென்று கொண்டே இருப்பதால் இரவுக்கும், பகலுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. எந்நேரமும் வெளிச்சம்! (காசி என்றால் ஒளி தரும் இடம் என்பது புராண அர்த்தம்)
இந்து மதத்தை தழைக்க வைத்த ஞானிகள் பலரின் மூச்சு காற்றோடு கலந்து, அவர்கள் ஒவ்வொருவரின் பாதப் பதிவுகளும் அங்கே மண்ணோடு விரவிக்கிடக்கிறது. இந்த ஞானபூமியின் ஒவ்வொரு தெருவிற்கும் ஒரு கதை! அங்கிருக்கும் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு புராணம்.
காசியைத் தொட்டு ஓடும் புண்ணிய நதி கங்கை! வருணை நதியும், அஸி நதியும் இதன் எல்லைகள். அஸி கங்கையில் சங்கமம் ஆகும் இடம் அஸி கட்டம். காசியின் நீளம் கங்கைக்கரை ஓரமாக 4 மைல்!
அங்கு புகழ் பெற்றிருப்பது விஸ்வநாதர் ஆலயம். இந்த கோவில் ஒரு குறுகிய தெருவில் அமைந்திருக்கிறது. உள் பிரகாரம் வளவளப்பான சலவைக் கல்லில் ஜொலிக்கிறது. மையத்தில் கருவறை, கங்கை நீர், பால், வில்வ இலைகளால் அபிஷேகம் நடந்தேறிக் கொண்டே இருக்கிறது.
ஆலயத்தைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடிசைகள்! இந்தியாவில் பல பகுதிகளில் இருந்தும், நேபாளம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் முதிய வயதில் வாழ்க்கையில் முழுமையைத் தேடி வந்து இந்த குடிசைகளில் தங்கியிருக்கிறார்கள், மரணத்தை தேடி!
அவர்கள் அதிகாலையிலே எழுந்து கிழக்கில் சூரியன் விழிக்கும் போது கூட்டம், கூட்டமாக வெளியேறி, காசியில் அமைந்திருக்கும் முக்கியமான வழிபாட்டுத் தலங்களை நோக்கி நகர்கிறார்கள். தினமும் கங்கையில் குளித்து, ‘இறைவா எங்களை ஏற்றுக் கொள்’ என்று கோரிக்கை வைக்கிறார்கள். இவர்கள் காசியைத் தேடிச் சென்று காத்திருப்பதன் நோக்கம், அங்கு கடைசி மூச்சை விட்டால் மோட்சம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை.
இறப்பை மகிழ்ச்சியோடு எதிர்நோக்க காத்திருக்கும் முதியோர்களால் சூழப்பட்டி ருக்கும் இடங்களில் ஒன்று ‘கங்கா லாப் பவன்’! இது மணிகர்ணிகா பகுதி யில் உள்ளது.
அவர்கள் மூச்சு முடிவுக்கு வந்த பின்பு தொடர்ந்து அங்கு வந்து தங்கி உயிரைவிட 12 ஆயிரம் முதியோர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து விட்டு, எப்போது அழைப்பு வரும் என்று காத்துக்கிடக்கிறார்கள். கியூவில் நிற்கும் அளவுக்கு இறப்பு மீது எவ்வளவு ஏக்கம் பாருங்கள்.
இன்னொன்று ‘காசி லாப் முக்தி பவன்’ ஜெய்டால் டால்மியா என்ற செல்வந்தர், தன்தாய் காசியில் மரணமடைந்த பிறகு தாயார் நினைவாக இந்த கட்டட த்தை விலைக்கு வாங்கினார். முதலில் வேத மந்திரம் ஓதவும், பகவத் கீதை சொற்பொழிவுகள் நிகழ்த்தவும், ஜதீக இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் அந்த இடத்தை பயன்படுத்தினார்.
ஆனால் இறப்பை எதிர்நோக்கும் முதியோர்கள் அந்த மையத்தில் வந்து குவிய, இறுதிக்குரிய இடமாக அது உறுதி செய்யப்பட்டுவிட்டது. இங்கு கூடி இருக்கும் முதியோர்களின் மனம் எப் போதும் இறைவனை நாடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக வேத மந்திரங்களின் முழக்கம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
நேபாள நாட்டு அரசுக்கும் இந்த மோட்ச நம்பிக்கை இருக்கிறது. அதனால் 30 பேர் தங்கி இருக்கும் இடத்தை நேபாள அரசு பராமரிக்கிறது. அங்கிருப்பவர்களுக்கு உணவு, உடை கொடுத்து இறுதி வழி யனுப்பி வைப்பது வரை நேபாள அரசால் நியமிக்கப்பட்டிருப்பவர்களின் பொறுப்பு.
இந்த மோட்ச பூமி 1891 மற்றும் 1921ம் ஆண்டுகளில் நோயால் துவண்டு மயான பூமியாக மாறி ஒரு இலட்சம் பேரை பலிவாங்கியிருக்கிறது. அப்போது மரணத்தை எதிர்நோக்கி நிறைய பேர் அங்கு செல்ல, அவர்களை கட்டுப்படுத்த ஆங்கிலேயே அரசு தீர்மானித்து நடவடிக்கை எடுத்தது, உடனே மனித ரீதியான சர்ச்சைகள் தொடங்கியது, ஆங்கிலேயே அரசு பின்வாங்கி, ‘நமக்கு என்னப்பா...’ என்று விட்டுவிட்டது.
இப்போதும் முடிவைத் தேடி நிறைய மக்கள் அங்கு செல்வதால், அவர்கள் கடைசி காலம் வரை தங்கி இருக்க இடம் கிடைப்பது அரிதாகி விட்டது. அதனால் அங்கு வாழும் மக்கள் தங்கள் வீடுகளை அத்தகைய முதியோர்களுக்காக வாடகைக்கு விடுகிறார்கள். சிலர் தங்கள் பெற்றோர்களை ஒப்பந்தக்காரர்களிடம் விட்டு விட்டு பணத்தைக் கட்டிவிட்டுச் சென்று விடுகிறார்கள்.
இறுதிக் காலம் வரை பராமரிக்கவும், இறப்புக்குப் பின்புள்ள சடங்குகளை செய்யவும் ஒப்பந்தக்காரர்கள் அந்தப் பபணத்தை பபயன்படுத்துகிறார்கள். எல்லாத்தையும் கடவுள் பார்த்துக் கொள் வார் என்ற நம்பிக்கைத்தான் அவர்களுக்கு!
காசியில் 9 ஆயிரம் ஆண்டுகளாக ‘அணையாத தீபம்’ எரிந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து தீயை எடுத்துத்தான் அங்கு இறப்பவர்களின் சடலங்களில் வைத்து உடலை எரிக்கிறார்கள். தினமும் அங்கு 350 சடலங்கள் வரை எரிக்கப்படுகின்றனவாம். இங்கு உடல் எரிக்கப்படும் போது, உறவினர்களை அழ அனுமதிப்பதில்லை. யாராவது அழுதால் இறந்தவர் ஆன்மா மோட்சத்திற்கு சொல்லாது என்று கூறி அழுகைக்கு அணை போட்டு விடுகிறார்கள்.
விஸ்வநாதர் ஆலயத்திலிருந்து எட்டிப் பார்த்தால், அதே தெருவில் சற்று தூரத்தில் அமைந்திருக்கிறது அன்னபூரணி ஆலயம். தமிழ்நாட்டு கலைப்பாணி அதன் தனிச்சிப்பு. தமிழகத்து நாதஸ்வரம் எப்போதும் அங்கு இசையருவியாய் கொட்டிக் கொண்டிருக்கிறது.
அங்கு நிகழும் மரணம், எரிப்பு எல்லாவற்றிலும் இசை கலந்து மனித மனங்களில் துக்கம் ஏற்படாமல் இதமாய் வருடிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதனால் இறந்தவரை முழு மனதோடு முழுமையாக வழியனுப்பி விட்டுச் செல்கிறார்கள்.
கங்கை நதி தனது கரைக் கரங்களால் காசி நகரை கிழக்கு- மேற்காக பிரிக்கிறது. மேற்கு கரையில் ‘மணிகர்ணிகா கட்’ உள்ளது. இது தான் பூமியில் முதலில் தோன்றியதாகவும் பூமி முடியும் வரை (இறந்த உடல்கள்) அங்கு எரிந்து கொண்டே இருக்கும் என்பதும் ஐதீகம். வருடத்தின் 365 நாட்களும், முழு நேரமும் ஓயாத தீயுடன் உடல்கள் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருக்கின்றன.
இயந்திரமயமான உலகில் அங்கேயும், அதிலும் சுறுசுறுப்பு, உடலை கங்கையில் முக்கிவிட்டு ஈரம் சற்று வடிவதற்காக தரையில் கிடத்துகிறார்கள். அதற்குள் உரிமையானவர் மொட்டை அடித்துக் கொள்கிறார். தகனம் செய்பவர் ‘ரெடி’ என்றதும் உடல், தகன மேடைக்கு எடு த்துச் செல்லப்படுகிறது.
அணையா தீப மாய் எரியும் தீயில் இருந்து, தீயை எடுத்து சடலத்திற்கு ‘பொட்டு’ வைக்கிறார்கள். ஒரு மணி நேரத்தில் பிடி சாம்பல். அது அப்படியே கங்கையில் கரைக்கப்படுகிறது. அவ்வளவுதான் வாழ்க்கை என்று உணர்த்தப்படுகிறது. அந்த ஜென்மத்திற்கு அங்கே விழுகிறது முற்றுப்புள்ளி.
அரிச்சந்திரனின் மனைவி சந்திரமதி இறந்து போன தன் மகன் லோகிதாசனின் உடலை தூக்கிக் கொண்டு மயானத்திற்கு வருவாள். அரிச்சந்திரன் அங்கே வெட்டியான்.
அவன் தன் மனைவியையும், மகனையும் அடை யாளம் காண்கிறான். ஆயினும் எரிப்பதற்குத் தேவையான பணத்தைக் கொடுத்தால்தான் காரியம் நடக்கும் என்று பொதுநிலை தவறாமல் உண்மை பேசுகிறான். மரணத் தில் கூட மனசாட்சிக்கு பயப்படாமல் உண்மை பேசியதால் அரிச்சந்திரனின் உண்மை, உலகிற்கே உன்னதம் ஆனது.
இந்த அரிச்சந்திரன் வெட்டியானாக இருந்து மகன் உடலை எரித்த ‘அரிச்சந்திர கட்’ கங்கை ஓரத்தில் உடல்களுக்காக காத்திருக்கிறது. இங்கு உடலை எரிப்பதை இந்துக்கள் பெரும் புண்ணியமாகக் கருதுகிறார்கள்.
ஆனால் இறப்பு என்பது உண்மை’ என்று கருதுகிறவர்களில் ஒரு பகுதியினர் மறுபிறப்பு என்பதை நம்புகிறார்கள். ஒரு மனிதன் முக்தி அடையும் வரை அவன் மீண்டும், மீண்டும் பிறப்பான் என்ற நம்பிக்கை மக்களிடம் மேலோங்கி யுள்ளது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ‘காசியில் மரணம் முக்தியைத் தரும். அவர்கள் மீண்டும் பிறக்க மாட்டார்கள்’ என்பது நம்பிக்கையாக்கப்பட்டிருக்கி றது.
காசியில் எல்லாமுமே நம்பிக்கைதான்! நம்பிக்கையின்றி வேறு எதுவும் இல்லை
ஆனால் நிம்மதியாக மரணம் அடைய வேண்டும் என்பதற்காக மக்கள் ஒரே ஒரு இடத்தில் கூடுகிறார்கள். அந்த இடம்,தான் காசி நகரம். இங்கே மக்கள் இறப்பை கொண்டாடுகிறார்கள். துளி அளவும் இறப்பின் சோகம் யாரையும் வாட்டுவதில்லை. அங்கே உள்ள கோவில்களில் இசையும், மந்திரமும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மனிதர்களின் இறுதி மூச்சும் அதோடு கலந்து காற்றோடு, மண்ணோடு, நீரோடு சங்கமித்துக் கொண்டிருக்கிறது.
,‘இறப்பு யார் கையிலும் இல்லை, இறப்பு அவ்வளவு எளிதான காரியம் ஒன்றும் இல்லை’ என்பதையும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக இலட்சங்களை ஆஸ்பத்திரிகளில் செலவிடுபவர்கள் திடீரென்று இறந்து போகிறார்கள். ஆனால் காசியில் இறப்புக்காக காத்திரு ப்பவர்கள், அதைத்தேடி வருடக்கணக்கில் காத்துக்கிடக்கிறார்கள். அதுதான் கிடைத்த பாடில்லை.
காசி, பூமி தோன்றிய போதே உருவான தாக கருதப்படும் புண்ணிய நகரம். உத்தரபிரதேச மாநிலம், வாரணாசி மாவட்டம், கங்கை நதிக்கரையில் உள்ளது. 1800 கோவில்களுடன் அது, இந்தியாவிலேயே அதிகமான கோவில்களைக் கொண்ட நகரம் எந்நேரமும் பக்தர்கள் கோவில் களை நோக்கி நடந்து சென்று கொண்டே இருப்பதால் இரவுக்கும், பகலுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. எந்நேரமும் வெளிச்சம்! (காசி என்றால் ஒளி தரும் இடம் என்பது புராண அர்த்தம்)
இந்து மதத்தை தழைக்க வைத்த ஞானிகள் பலரின் மூச்சு காற்றோடு கலந்து, அவர்கள் ஒவ்வொருவரின் பாதப் பதிவுகளும் அங்கே மண்ணோடு விரவிக்கிடக்கிறது. இந்த ஞானபூமியின் ஒவ்வொரு தெருவிற்கும் ஒரு கதை! அங்கிருக்கும் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு புராணம்.
காசியைத் தொட்டு ஓடும் புண்ணிய நதி கங்கை! வருணை நதியும், அஸி நதியும் இதன் எல்லைகள். அஸி கங்கையில் சங்கமம் ஆகும் இடம் அஸி கட்டம். காசியின் நீளம் கங்கைக்கரை ஓரமாக 4 மைல்!
அங்கு புகழ் பெற்றிருப்பது விஸ்வநாதர் ஆலயம். இந்த கோவில் ஒரு குறுகிய தெருவில் அமைந்திருக்கிறது. உள் பிரகாரம் வளவளப்பான சலவைக் கல்லில் ஜொலிக்கிறது. மையத்தில் கருவறை, கங்கை நீர், பால், வில்வ இலைகளால் அபிஷேகம் நடந்தேறிக் கொண்டே இருக்கிறது.
ஆலயத்தைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடிசைகள்! இந்தியாவில் பல பகுதிகளில் இருந்தும், நேபாளம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் முதிய வயதில் வாழ்க்கையில் முழுமையைத் தேடி வந்து இந்த குடிசைகளில் தங்கியிருக்கிறார்கள், மரணத்தை தேடி!
அவர்கள் அதிகாலையிலே எழுந்து கிழக்கில் சூரியன் விழிக்கும் போது கூட்டம், கூட்டமாக வெளியேறி, காசியில் அமைந்திருக்கும் முக்கியமான வழிபாட்டுத் தலங்களை நோக்கி நகர்கிறார்கள். தினமும் கங்கையில் குளித்து, ‘இறைவா எங்களை ஏற்றுக் கொள்’ என்று கோரிக்கை வைக்கிறார்கள். இவர்கள் காசியைத் தேடிச் சென்று காத்திருப்பதன் நோக்கம், அங்கு கடைசி மூச்சை விட்டால் மோட்சம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை.
இறப்பை மகிழ்ச்சியோடு எதிர்நோக்க காத்திருக்கும் முதியோர்களால் சூழப்பட்டி ருக்கும் இடங்களில் ஒன்று ‘கங்கா லாப் பவன்’! இது மணிகர்ணிகா பகுதி யில் உள்ளது.
அவர்கள் மூச்சு முடிவுக்கு வந்த பின்பு தொடர்ந்து அங்கு வந்து தங்கி உயிரைவிட 12 ஆயிரம் முதியோர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து விட்டு, எப்போது அழைப்பு வரும் என்று காத்துக்கிடக்கிறார்கள். கியூவில் நிற்கும் அளவுக்கு இறப்பு மீது எவ்வளவு ஏக்கம் பாருங்கள்.
இன்னொன்று ‘காசி லாப் முக்தி பவன்’ ஜெய்டால் டால்மியா என்ற செல்வந்தர், தன்தாய் காசியில் மரணமடைந்த பிறகு தாயார் நினைவாக இந்த கட்டட த்தை விலைக்கு வாங்கினார். முதலில் வேத மந்திரம் ஓதவும், பகவத் கீதை சொற்பொழிவுகள் நிகழ்த்தவும், ஜதீக இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் அந்த இடத்தை பயன்படுத்தினார்.
ஆனால் இறப்பை எதிர்நோக்கும் முதியோர்கள் அந்த மையத்தில் வந்து குவிய, இறுதிக்குரிய இடமாக அது உறுதி செய்யப்பட்டுவிட்டது. இங்கு கூடி இருக்கும் முதியோர்களின் மனம் எப் போதும் இறைவனை நாடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக வேத மந்திரங்களின் முழக்கம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
நேபாள நாட்டு அரசுக்கும் இந்த மோட்ச நம்பிக்கை இருக்கிறது. அதனால் 30 பேர் தங்கி இருக்கும் இடத்தை நேபாள அரசு பராமரிக்கிறது. அங்கிருப்பவர்களுக்கு உணவு, உடை கொடுத்து இறுதி வழி யனுப்பி வைப்பது வரை நேபாள அரசால் நியமிக்கப்பட்டிருப்பவர்களின் பொறுப்பு.
இந்த மோட்ச பூமி 1891 மற்றும் 1921ம் ஆண்டுகளில் நோயால் துவண்டு மயான பூமியாக மாறி ஒரு இலட்சம் பேரை பலிவாங்கியிருக்கிறது. அப்போது மரணத்தை எதிர்நோக்கி நிறைய பேர் அங்கு செல்ல, அவர்களை கட்டுப்படுத்த ஆங்கிலேயே அரசு தீர்மானித்து நடவடிக்கை எடுத்தது, உடனே மனித ரீதியான சர்ச்சைகள் தொடங்கியது, ஆங்கிலேயே அரசு பின்வாங்கி, ‘நமக்கு என்னப்பா...’ என்று விட்டுவிட்டது.
இப்போதும் முடிவைத் தேடி நிறைய மக்கள் அங்கு செல்வதால், அவர்கள் கடைசி காலம் வரை தங்கி இருக்க இடம் கிடைப்பது அரிதாகி விட்டது. அதனால் அங்கு வாழும் மக்கள் தங்கள் வீடுகளை அத்தகைய முதியோர்களுக்காக வாடகைக்கு விடுகிறார்கள். சிலர் தங்கள் பெற்றோர்களை ஒப்பந்தக்காரர்களிடம் விட்டு விட்டு பணத்தைக் கட்டிவிட்டுச் சென்று விடுகிறார்கள்.
இறுதிக் காலம் வரை பராமரிக்கவும், இறப்புக்குப் பின்புள்ள சடங்குகளை செய்யவும் ஒப்பந்தக்காரர்கள் அந்தப் பபணத்தை பபயன்படுத்துகிறார்கள். எல்லாத்தையும் கடவுள் பார்த்துக் கொள் வார் என்ற நம்பிக்கைத்தான் அவர்களுக்கு!
காசியில் 9 ஆயிரம் ஆண்டுகளாக ‘அணையாத தீபம்’ எரிந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து தீயை எடுத்துத்தான் அங்கு இறப்பவர்களின் சடலங்களில் வைத்து உடலை எரிக்கிறார்கள். தினமும் அங்கு 350 சடலங்கள் வரை எரிக்கப்படுகின்றனவாம். இங்கு உடல் எரிக்கப்படும் போது, உறவினர்களை அழ அனுமதிப்பதில்லை. யாராவது அழுதால் இறந்தவர் ஆன்மா மோட்சத்திற்கு சொல்லாது என்று கூறி அழுகைக்கு அணை போட்டு விடுகிறார்கள்.
விஸ்வநாதர் ஆலயத்திலிருந்து எட்டிப் பார்த்தால், அதே தெருவில் சற்று தூரத்தில் அமைந்திருக்கிறது அன்னபூரணி ஆலயம். தமிழ்நாட்டு கலைப்பாணி அதன் தனிச்சிப்பு. தமிழகத்து நாதஸ்வரம் எப்போதும் அங்கு இசையருவியாய் கொட்டிக் கொண்டிருக்கிறது.
அங்கு நிகழும் மரணம், எரிப்பு எல்லாவற்றிலும் இசை கலந்து மனித மனங்களில் துக்கம் ஏற்படாமல் இதமாய் வருடிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதனால் இறந்தவரை முழு மனதோடு முழுமையாக வழியனுப்பி விட்டுச் செல்கிறார்கள்.
கங்கை நதி தனது கரைக் கரங்களால் காசி நகரை கிழக்கு- மேற்காக பிரிக்கிறது. மேற்கு கரையில் ‘மணிகர்ணிகா கட்’ உள்ளது. இது தான் பூமியில் முதலில் தோன்றியதாகவும் பூமி முடியும் வரை (இறந்த உடல்கள்) அங்கு எரிந்து கொண்டே இருக்கும் என்பதும் ஐதீகம். வருடத்தின் 365 நாட்களும், முழு நேரமும் ஓயாத தீயுடன் உடல்கள் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருக்கின்றன.
இயந்திரமயமான உலகில் அங்கேயும், அதிலும் சுறுசுறுப்பு, உடலை கங்கையில் முக்கிவிட்டு ஈரம் சற்று வடிவதற்காக தரையில் கிடத்துகிறார்கள். அதற்குள் உரிமையானவர் மொட்டை அடித்துக் கொள்கிறார். தகனம் செய்பவர் ‘ரெடி’ என்றதும் உடல், தகன மேடைக்கு எடு த்துச் செல்லப்படுகிறது.
அணையா தீப மாய் எரியும் தீயில் இருந்து, தீயை எடுத்து சடலத்திற்கு ‘பொட்டு’ வைக்கிறார்கள். ஒரு மணி நேரத்தில் பிடி சாம்பல். அது அப்படியே கங்கையில் கரைக்கப்படுகிறது. அவ்வளவுதான் வாழ்க்கை என்று உணர்த்தப்படுகிறது. அந்த ஜென்மத்திற்கு அங்கே விழுகிறது முற்றுப்புள்ளி.
அரிச்சந்திரனின் மனைவி சந்திரமதி இறந்து போன தன் மகன் லோகிதாசனின் உடலை தூக்கிக் கொண்டு மயானத்திற்கு வருவாள். அரிச்சந்திரன் அங்கே வெட்டியான்.
அவன் தன் மனைவியையும், மகனையும் அடை யாளம் காண்கிறான். ஆயினும் எரிப்பதற்குத் தேவையான பணத்தைக் கொடுத்தால்தான் காரியம் நடக்கும் என்று பொதுநிலை தவறாமல் உண்மை பேசுகிறான். மரணத் தில் கூட மனசாட்சிக்கு பயப்படாமல் உண்மை பேசியதால் அரிச்சந்திரனின் உண்மை, உலகிற்கே உன்னதம் ஆனது.
இந்த அரிச்சந்திரன் வெட்டியானாக இருந்து மகன் உடலை எரித்த ‘அரிச்சந்திர கட்’ கங்கை ஓரத்தில் உடல்களுக்காக காத்திருக்கிறது. இங்கு உடலை எரிப்பதை இந்துக்கள் பெரும் புண்ணியமாகக் கருதுகிறார்கள்.
ஆனால் இறப்பு என்பது உண்மை’ என்று கருதுகிறவர்களில் ஒரு பகுதியினர் மறுபிறப்பு என்பதை நம்புகிறார்கள். ஒரு மனிதன் முக்தி அடையும் வரை அவன் மீண்டும், மீண்டும் பிறப்பான் என்ற நம்பிக்கை மக்களிடம் மேலோங்கி யுள்ளது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ‘காசியில் மரணம் முக்தியைத் தரும். அவர்கள் மீண்டும் பிறக்க மாட்டார்கள்’ என்பது நம்பிக்கையாக்கப்பட்டிருக்கி றது.
காசியில் எல்லாமுமே நம்பிக்கைதான்! நம்பிக்கையின்றி வேறு எதுவும் இல்லை
Wednesday, September 24, 2014
பூக்களைக் கொடுத்து எண்ணத்தை வெளிப்படுத்தும் வழக்கத்தை முதன்முதலில் ஏற்படுத்தியவர்கள் பாரசீகர்கள். 18–ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுவீடன் நாட்டு அரசரான பனிரெண்டாம் சார்லஸ் (1682– 1718) அவருடைய இளம் வயதில் நாடு கடத்தப்பட்டு துருக்கியில் வசித்தார். அவர் பூங்கொத்து கொடுக்கும் வழக்கத்தை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தினார்.
பாரசீகத்தில் ஒவ்வொரு மலருக்கும் ஓர் அர்த்தமுண்டு. இந்தக் கருத்தை ஐரோப்பியர்கள் வரவேற்றனர். அதனால், சில நேரங்களில் முழு பேச்சுவார்த்தையையும் விதவிதமான மலர்களை மாற்றிக்கொள்வதன் மூலமே நடத்தினர். மலர் களின் மொழியில், காதலையும் நேசத்தையும் ரோஜா மலர் வெளிப்படுத்துகிறது. அதனால் 1 டஜன் ரோஜா மலர்களைக் கொடுப்பது, அன்பை உரக்கச் சொல்வது போல ஆகும்.
‘வேலன்டைன் டே’ எனப்படும் காதலர் தினத்தில் ரோஜா மலர்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால் அன்றைய தினத்துக்கான மலராக வயலட் இருந்திருக்க வேண்டும் என்று கருதப் படுகிறது. காரணம், காதலர் தினத்தின் காரணகர்த்தாவான செயின்ட் வேலன்டைன் மரண தண்டனை விதிக்கப்படுவதற்கு முன் தங்கியிருந்த சிறை அறைக்கு வெளியே வயலெட் மலர்கள் பூத்துக் குலுங்கின. அவர், கடிதம் எழுதுவதற்கான மையைக் கூட வயலெட் மலர் களைப் பிழிந்து தயாரித்ததாகக் கூறப்படுகிறது.
பூக்களின் வண்ணங்களும் அர்த்தங்களும்
காலம்காலமாக அன்பின் அடையாளமாகவும், மரியாதை நிமித்தமாகவும் கொடுக்கப்படும் மலர்கள், அவற்றின் வண்ணத்துக்கு ஏற்ப ஒவ்வொரு அர்த்தத்தை வெளிப்படுத்துகின்றன.
உதாரணமாக சிவப்பு மலர்கள் காதல், மரியாதை, நேசம், தைரியம் ஆகியவற்றையும், இளஞ்சிவப்பு மலர்கள் முழுமையான மகிழ்ச்சி, நளினம், நன்றியுணர்வு அல்லது பாராட்டையும் வெளிப்படுத்துகின்றன. அதோடு, நேசத்துக்கான விண்ணப்பமாகவும் இளஞ்சிவப்பு மலர்கள் கருதப்படுகின்றன.
வெண்மை நிறப் பூக்கள் கள்ளங்கபடமற்ற தன்மை, தூய்மை, ரகசியம், மவுனம் ஆகியவற்றையும், ‘பீச்’ அல்லது பவள வண்ண மலர்கள் உற்சாகம், ஆசை, மகிழ்ச்சியான அடக்கம், வெட்கம் ஆகியவற்றையும் வெளிப்படுத்துகின்றன. கருஞ்சிவப்பு வண்ணப் பூக்கள் நேசத்தோடு கூடிய நம்பிக்கை, கற்பு ஆகியவற்றைக் குறிக்கின்றன.
பூக்கள் சொல்லும் செய்திகள்
விதவிதமான பூக்கள், அவற்றைப் பெறுபவர்களுக்கு மட்டுமேயான பிரத்தியேக செய்தியையும் வெளிப்படுத்துகின்றன. மேலைநாட்டு வழக்கப்படி ரோஜா மலர்கள், ‘நான் உன்னை விரும்பு கிறேன் என்பதைத் தெரிந்துகொள்’ என்றும், கார்னேஷன் மலர்கள், ‘நீ அழகாக இருக்கிறாய், உன்னைப் பார்த்து நான் பெருமிதம் அடைகிறேன்’ என்றும், டபோடில் மலர்கள், ‘நீ நல்லவன் என்பதோடு தைரியசாலி’ என்றும், சாமந்தி, ‘நான் உனக்கு உண்மையாக இருப்பேன்’ என்பதையும், கிளாடியோலி, ‘உன் குணத்தைக் கண்டு நான் பெருமிதம் அடைகிறேன்’ என்பதையும், ஐரிஸ் மலர்கள், ‘என் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அனுப்புகிறேன்’ என்றும், ஆர்க்கிட் மலர்கள், ‘நீ என் இதயத்தில் இருக்கிறாய்’ என்றும், ஸ்னேப் டிராகன்ஸ் பூக்கள், ‘நான் உன்னை விரும்புகிறேன்’ என்றும், சூரியகாந்திப் பூக்கள், ‘என் எண்ணங்கள் தூய்மையானவை’ என்றும், டூலிப் மலர்கள் ‘நான் உன்னை விரும்புவதை அறிவிக்கிறேன்’ என்றும் சொல்கின்றன.
பொதுவாக பூக்கள் என்றாலே புத்துணர்ச்சி, மகிழ்ச்சி, உற்சாகம்தான். அதனால்தான் எல்லா நாடுகளிலும், எல்லா கலாசாரங்களிலும் முக்கிய நிகழ்வுகளில், மங்கள வைபவங்களில் பூக்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன. மனிதர்களை, குறிப்பாக பெண்களை பெரிதும் கவர்ந்திருக்கிற பூக்கள் இல்லாத உலகை கற்பனை செய்வது கூட கடினம்தான்!
ஐ'
படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில்
நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, ரஜினி, கன்னட
நடிகர் புனித் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், ஏ.ஆர்.ரகுமான்,
இயக்குநர் சங்கர், படத்தின் நாயகன் விக்ரம் கலந்து கொண்டனர். இப்படத்தை
ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார்.
'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கலந்துகொண்டு படத்தின் நாயகன் விக்ரமை பாராட்டினார். விழாவில் அவர் பேசியதாவது,“நிச்சயமாக இந்தவிழா ஒரு இசை வெளிட்டு விழாவைப் போல இல்லாமல், ஒரு வெள்ளிவிழா போல நடந்து கொண்டிருக்கிறது. படத்தின் டிரெய்லரைப் பார்க்கும் போது படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்படுகிறது.
'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கலந்துகொண்டு படத்தின் நாயகன் விக்ரமை பாராட்டினார். விழாவில் அவர் பேசியதாவது,“நிச்சயமாக இந்தவிழா ஒரு இசை வெளிட்டு விழாவைப் போல இல்லாமல், ஒரு வெள்ளிவிழா போல நடந்து கொண்டிருக்கிறது. படத்தின் டிரெய்லரைப் பார்க்கும் போது படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்படுகிறது.
ஷங்கர்
சினிமாவில் 20 ஆண்டுகளாக பயணம் செய்கிறார். அவரின் முதல் படத்திலிருந்து
அவர் இயக்கிய அடுத்தடுத்த படங்களில் மேலே மேலே தான்
சென்றுகொண்டிருக்கிறார். இந்த ஐ
படம், அவர் இதுவரை இயக்கிய படங்களில் உச்சகட்டமாக அமைந்திருக்கிறது. இதற்கு
மேல் அடுத்த படியாக அவர் என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லை. இன்னும் அவரிடம் நிறைய இருக்கிறது. அவர் விரைவில் இந்தப் படத்தை வெளியிட கேட்டுக்கொள்கிறேன்.
ஹாலிவுட்டில்
பல விஷயங்கள் செய்கிறார்கள், நம்மிடம் திறமைசாலிகள் இல்லையா? ஏன் நாம்
தமிழ் சினிமாவில் அதை செய்யக்கூடாது என்று நினைத்து, பல
முயற்சிகளை செய்கிறார். தமிழ் சினிமாவை, இந்திய சினிமாவை ஹாலிவுட்
உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளார் ஷங்கர். பணம், நேரம் இதை எல்லாம் பார்க்காமல் உழைக்கும் உண்மையான சினிமா இந்தியன் அவர் தான்.
அவருக்கு
பக்கபலமாக நம் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இருக்கிறார். ரகுமான் அவர்
தாயாரிடம் சென்று,‘எந்த ட்யூன் போட்டாலும் ஷங்கர் வேண்டாம் என்கிறார்’ என்று சொல்லி அழுததாக நான் கேள்விப்பட்டேன். அந்த அளவுக்கு ஷங்கர் அவரிடம் வேலை வாங்குவார் என்று எனக்கு தெரியும்.
இந்த
படத்தின் நாயகன் சீயான் விக்ரம். ‘ஓ போடு’ சீயான், இனி ‘ஐ’ சீயான் என
அழைக்கப்படுவார். தன் உடலை வருத்திக்கொள்ளும் ஒரு நடிகர் அவர். விக்ரமைப்
போல கதைக்காக தன்னையே தியாகம் செய்யும் நடிகர், தமிழில் இல்லை,
இந்தியாவில் இல்லை, ஹாலிவுட்டில் இல்லை, ஏன் இந்த உலகத்திலேயே இல்லை. ஒரு சீனியர் நடிகன் என்ற முறையில் விக்ரமை என் இதயத்தில் இருந்து பாராட்டுகிறேன்.
‘ஷங்கர் - விக்ரம்’ இந்த காம்பினேஷன் தொடர்ந்து பல படங்களைக் கொடுக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” இவ்வாறு ரஜினி பேசினார்.
பலு தூக்கும் வீரர்கள் சாகசங்களை செய்யும் நிகழ்ச்சி நடந்தது முடிந்ததும், இருக்கையை விட்டு எழுந்து உற்சாகமாய் வந்த ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, அவர்களை வாழ்த்தினார். அவர்களுடன் மேடைக்கு வந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், இந்த இளைஞர்களைப் பார்க்கும்போது என் இளமைக்காலங்கள் எனக்கு ஞாபகம் வருகிறது. இங்கு வந்ததில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இயக்குனர் ஷங்கர் என்னை வியக்க வைக்கிறார். அவரது அடுத்த படத்தில் நான் ஹீரோவாக நடிக்க ஆசைப்படுகிறேன்.
ரசிகர்கள் இல்லாமல் சினிமா இல்லை. ஆகவே ரசிகர்கள் தான் முக்கியம், என் படங்களை இந்தியா முழுக்க ஆஸ்கர் ரவிசந்திரன் இந்தியா முழுக்க வெளியிடுகிறார், அவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். நடிகர் விக்ரம் என்னை ஆச்சரியப்படுத்துகிறார். அவரது உழைப்பு அபாரமானது, வெற்றிக்கு வாழ்த்துகள் என்றார். பேசிமுடித்தவர், விழா தாமதமாக தொடங்கிய காரணத்தாலோ என்னவோ, இசை வெளியிட்டு நிகழ்வுக்கு முன்பாகவே அரங்கை விட்டு வெளியேறினார்.
பலுதூக்கும் இளைஞராக காட்டுமஸ்தான உடலைக் கொண்டு நடித்திருக்கும் விக்ரம், இப்படத்தில் வரும் இன்னொரு வயதான கதாபாத்திரத்திரற்கு 25 முதல் 30 கிலோ வரை தன் எடையை குறைத்திருக்கிறார். இது எப்படி சாத்தியமானது என விக்ரமிடம் கேட்டபோது, “பசி ஒரு பிரச்சையே இல்லை, சினிமாவுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறேன்.
கனவு கதாபாத்திரமாக எல்லா நடிகர்களுக்கும் ஒரு விஷயம் இருக்கும். ஆனால் ‘ஐ’ படத்தில் நான் கனவில் கூட நினைத்து பார்க்காத ஒரு கேரக்டரை ஷங்கர் எனக்கு கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் நடிக்க முடியவில்லையே என படம் பார்க்கிற நடிகர்கள் வருத்தப்பட கூடும். அப்படி ஒரு கதாபாத்திரம். அந்நியன் படத்திலேயே என்னை வித்தியாசமாக காண்பித்தவர் அவர். என் உயிர் நண்பன் பாலா கூட அந்நியன் படம் பார்த்துவிட்டு,“நான் கூட உன்னை இந்த அளவுக்கு பயன்படுத்தவில்லை” என்று சொன்னார்.
நான் மெலிந்து இருந்த நாட்களில் யாரையும் சந்திகாமல், வீட்டை விட்டு வெளியே போகாமல் தான் இருந்தேன். பல விழாக்களை தவிர்ந்துவிட்டேன். என் ரசிகர்கள் என்னை சந்திக்க வந்தபோது கூட புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். என் ரசிகர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்” என்றார்.
இயக்குனர் ஷங்கர் பேசும் போது, “இந்தப் படத்திற்கு அழகன் என்றோ அல்லது ஆணழகன் என்றோ தான் டைட்டில் வைத்திருக்க வேண்டும். இது இரண்டுமே ஏற்கெனவே வந்துவிட்ட காரணத்தால் வேறு டைட்டில் தேடினோம். எனக்கு ‘ஐ’ என்ற எழுத்து மேல் ஒரு ஈர்ப்பு இருந்து கொண்டே இருந்தது. ‘ஐ’ என்றால் என்ன என்று தேடினால், அதற்கு அழகு என்று பொருள் இருப்பதை தெரிந்துகொண்டோம். அதனால் தான் இந்த டைட்டிலை வைத்தோம்” என்றார்.
படத்தில் ஏமி ஜாக்சனின் அழகைப்பார்த்து ‘மெரசலாகிட்டேன்...’ என்று பாடுகிறார் விக்ரம். ’ஐ’ படத்தின் டிரெய்லரைப் பார்ப்பவர்கள் சொல்லப்போவதும் அதே வார்த்தையைத் தான்...
“மெரசலாகிட்டேன்!”
ஷங்கரிடம் வாய்ப்பு கேட்ட அர்னால்டு!
பலு தூக்கும் வீரர்கள் சாகசங்களை செய்யும் நிகழ்ச்சி நடந்தது முடிந்ததும், இருக்கையை விட்டு எழுந்து உற்சாகமாய் வந்த ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, அவர்களை வாழ்த்தினார். அவர்களுடன் மேடைக்கு வந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், இந்த இளைஞர்களைப் பார்க்கும்போது என் இளமைக்காலங்கள் எனக்கு ஞாபகம் வருகிறது. இங்கு வந்ததில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இயக்குனர் ஷங்கர் என்னை வியக்க வைக்கிறார். அவரது அடுத்த படத்தில் நான் ஹீரோவாக நடிக்க ஆசைப்படுகிறேன்.
ரசிகர்கள் இல்லாமல் சினிமா இல்லை. ஆகவே ரசிகர்கள் தான் முக்கியம், என் படங்களை இந்தியா முழுக்க ஆஸ்கர் ரவிசந்திரன் இந்தியா முழுக்க வெளியிடுகிறார், அவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். நடிகர் விக்ரம் என்னை ஆச்சரியப்படுத்துகிறார். அவரது உழைப்பு அபாரமானது, வெற்றிக்கு வாழ்த்துகள் என்றார். பேசிமுடித்தவர், விழா தாமதமாக தொடங்கிய காரணத்தாலோ என்னவோ, இசை வெளியிட்டு நிகழ்வுக்கு முன்பாகவே அரங்கை விட்டு வெளியேறினார்.
பசி ஒரு பிரச்சனை இல்லை - வியக்க வைத்த விக்ரம்
பலுதூக்கும் இளைஞராக காட்டுமஸ்தான உடலைக் கொண்டு நடித்திருக்கும் விக்ரம், இப்படத்தில் வரும் இன்னொரு வயதான கதாபாத்திரத்திரற்கு 25 முதல் 30 கிலோ வரை தன் எடையை குறைத்திருக்கிறார். இது எப்படி சாத்தியமானது என விக்ரமிடம் கேட்டபோது, “பசி ஒரு பிரச்சையே இல்லை, சினிமாவுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறேன்.
கனவு கதாபாத்திரமாக எல்லா நடிகர்களுக்கும் ஒரு விஷயம் இருக்கும். ஆனால் ‘ஐ’ படத்தில் நான் கனவில் கூட நினைத்து பார்க்காத ஒரு கேரக்டரை ஷங்கர் எனக்கு கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் நடிக்க முடியவில்லையே என படம் பார்க்கிற நடிகர்கள் வருத்தப்பட கூடும். அப்படி ஒரு கதாபாத்திரம். அந்நியன் படத்திலேயே என்னை வித்தியாசமாக காண்பித்தவர் அவர். என் உயிர் நண்பன் பாலா கூட அந்நியன் படம் பார்த்துவிட்டு,“நான் கூட உன்னை இந்த அளவுக்கு பயன்படுத்தவில்லை” என்று சொன்னார்.
நான் மெலிந்து இருந்த நாட்களில் யாரையும் சந்திகாமல், வீட்டை விட்டு வெளியே போகாமல் தான் இருந்தேன். பல விழாக்களை தவிர்ந்துவிட்டேன். என் ரசிகர்கள் என்னை சந்திக்க வந்தபோது கூட புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். என் ரசிகர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்” என்றார்.
‘ஐ’ டைட்டில் காரணம் சொன்ன ஷங்கர்
இயக்குனர் ஷங்கர் பேசும் போது, “இந்தப் படத்திற்கு அழகன் என்றோ அல்லது ஆணழகன் என்றோ தான் டைட்டில் வைத்திருக்க வேண்டும். இது இரண்டுமே ஏற்கெனவே வந்துவிட்ட காரணத்தால் வேறு டைட்டில் தேடினோம். எனக்கு ‘ஐ’ என்ற எழுத்து மேல் ஒரு ஈர்ப்பு இருந்து கொண்டே இருந்தது. ‘ஐ’ என்றால் என்ன என்று தேடினால், அதற்கு அழகு என்று பொருள் இருப்பதை தெரிந்துகொண்டோம். அதனால் தான் இந்த டைட்டிலை வைத்தோம்” என்றார்.
படத்தில் ஏமி ஜாக்சனின் அழகைப்பார்த்து ‘மெரசலாகிட்டேன்...’ என்று பாடுகிறார் விக்ரம். ’ஐ’ படத்தின் டிரெய்லரைப் பார்ப்பவர்கள் சொல்லப்போவதும் அதே வார்த்தையைத் தான்...
“மெரசலாகிட்டேன்!”
Saturday, September 06, 2014
சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப்போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப்பயந்து ஓடி ஒழிந்து விடவும் மாட்டார்கள். அதிலும் யாழ்ப்பாணத்தமிழர்களை வெல்லவே முடியாது. அதனால்தான் சிங்களவர்கள், தமிழர்களை நசுக்கி ஒடுக்க முனைகின்றார்கள் எனக்குறிப்பிட்டுள்ள சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ, தமிழர்களுக்குத்தனி நாடே தீர்வாகும்! எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“லீ குவான் யூவுடனான உரையாடல்கள்” என்ற தலைப்பில் லொஸ் ஏஞ்சல்ஸைச்சேர்ந்த பேராசிரியர் ரொம் பிளேட் நூல் ஒன்றை எழுதியுள்ளார். இந்த நூலிலேயே “சிங்கப்பூரின் நவீன சிற்பி” என்று அழைக்கப்படும் சிங்கப்பூரின் முதல் பிரதமரும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யூ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
சிங்களவர்கள் இலங்கையில் இருந்த காலம் முதல் தமிழர்களும் இருந்து வருகின்றனர். இருப்பினும் தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் அங்கு இல்லை. இலங்கை ஒரே நாடாக இருக்கும் வரையில் மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது. இலங்கையில் தமிழர்களுக்காகப்போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இலங்கையில் இன பிரச்சினைக்குத்தீர்வு காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த குறிப்பிட்டு வருகின்றார். இதனையே எல்லோரும் ஏற்கவும், நம்பவும் வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கின்றார்.
வீழ்ந்து விடா வீரம்! மண்டியிடா மானம்!
ஈழத்தமிழர்கள் அடங்கிப்போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப்பயந்து ஓடவும் மாட்டார்கள். தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்திருந்தாலும் சிறுபான்மையினராகிய தமிழர்களை வெல்லும் தகுதியும் துணிச்சலும் சிங்களவர்களுக்கு நிச்சயம் இல்லை. எல்லாவற்றையும் விட யாழ்ப்பாணத்தமிழர்களை சிங்களவர்களால் நிச்சயம் ஒரு போதும் வெல்லவே முடியாது. அதனால் தான் தமிழர்களை எல்லா வழிகளிலும் நசுக்கி ஒடுக்க முனைகின்றார்கள்.
சிங்களவர்கள் முன்பும் இப்படித்தான் செய்தார்கள். இதுதான் மிகப்பெரும் ஆயுதப்போராட்டமாக வெடித்தது. இப்போதும் அதையே செய்ய முனைகின்றார்கள். ஆனால் ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் அழித்து விட முடியும் என்ற சிங்களவர்களின் எண்ணம் நிச்சயம் நிறைவேறாது.
நடந்ததும், நடப்பதும் இன அழிப்பே!
இலங்கையில் தற்போது நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான இன அழிப்புத்தான். இதனால் தமிழர்கள் மீண்டும் ஆயுதப்பேராட்டத்தை தொடங்குவார்களா? என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்ட காலம் காத்திருக்க மாட்டார்கள். சிங்களவர்களை விட தமிழர்களுக்கே அதிகளவான மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்றார்.
Saturday, August 30, 2014
On Saturday, August 30, 2014 by Unknown in பேஸ்புக்
ராப் பகலா கண்முழிச்சி
படிச்சதெல்லாம் வீணாச்சி
பரிட்ச தோல்வி கண்டிடுச்சி
போகட்டும் போடா - இனி
அடுத்த பரிட்ச எப்போன்னு
கேட்டுட்டு வாடா!!
தொரத்தி தொரத்தி காதலிச்சி
வெரட்டினது வெலகிடிச்சி
காதல் தோல்வி கண்டிடுச்சி
போகட்டும் போடா - இனி
அழகு பொண்ணு தேடி வரும்
கவல இல்லடா!!
வரிசையில கால் வலிச்சி
தேர்தலுல ஓட்டுப் போட்டா
எதிர் கட்சி ஜெயிச்சிபுட்டான்
போகட்டும் போடா - யாரும்
பதவியின்னு அமர்ந்துபுட்டா
நல்லவனும் கெட்டவனா மாறிடரான்டா!!
வேலையைத்தான் தேடி திரிஞ்சி
வேல கெடைக்கும் நேரத்துல
பொண்ணு தட்டி பறிச்சி கிட்டா
போகட்டும் போடா - இனி
சொந்த தொழில் செஞ்சி
நானும் பொழச்சிப்பேனடா!!
சேத்து வெச்ச பணத்த எல்லாம்
நோட்டம் பாத்து எடுதுப்புட்டான்
சொல்லியழ தெய்வம் கூட காணலியே
போகட்டும் போடா - காக்கும்
தெய்வத்துக்கே காவல் வேணும்
நானும் கதறி என்னடா???
இளமையத்தான் காக்க வேண்டி
காலத்ததான் கட்டப் போனேன்
முதுமையத்தான் தந்து போச்சு
போகட்டும் போடா - காலம்
தந்து போன அனுபவந்தான்
என்ன கட்டிக் காக்கும்டா!!
அடுத்தவன கெடுப்பவன்தா(ன்)
நாட்டில் அதிகம் ஆச்சுதடா
மோசமான உலகமாச்சு
போகட்டும் போடா - அடுத்து
கெடுப்பவனும் கெட்டழிவான்
நான் கண்ட உண்மைதானடா ...
சோதனைதான் வாழ்க்கையிலே
வரும் போகும் நிற்பதில்லே
அதுக்குப் போயி கலங்குவது
அர்த்தமில்லடா - எதையும்
நேர்மறையா எடுத்துகிட்டா
துன்பம் ஏதடா???
எத்தனையோ துரோகி கண்டேன்
எத்தனையோ துரோகம் கண்டேன்
தன்னபிக்கை பிடி நழுவவில்லை
வெற்றி வசமடா - நாளும்
நேர்மையுடன் இருந்துவிட்டால்
வெற்றியோடு வீர நடையும் தானடா...
- எழுதியவர் : சொ.சாந்தி
முக்கோணக்காதல்
ஒதுங்கி ஒதுங்கி போனது
கடற்கரை..
ஓடி ஓடி வந்து சீண்டியது
காதல் கொண்ட அலை..
அலையின் சீண்டலுக்கு
அஞ்சிய கரையின் மேல்
கவிஞன் கவிதை எழுதினான்..
அவன் விரல் தீண்டலின் மேல்
கரைக்கு காதல்..
அலைக்கு அவன் மேல் பொறாமை..
கவிதைகளை ஓடிவந்து
அழித்தது அலை..
சீண்டலை பொறுத்துக்கொண்டு
மீண்டும் ஒரு தீண்டலுக்கு
காத்திருந்தது கரை..
மீண்டும் தீண்டினான்
மீண்டும் சீண்டியது
மீண்டும் காத்திருந்தது..
மீண்டும் ஒரு தீண்டலில்
கரை கேட்ட கேள்வி
என் மீது இத்தனை காதலா
கவிஞனுக்கு..
கவிஞன் தீண்டியதோ
அலையின் சீண்டலுக்காகத்தான்..
அலை அழகை கண்டு மயங்கியே
கரை கவிதைகள் இயற்றினனாம்..
மீண்டும் ஒரு சீண்டலில்
அழிந்த கவிதை சுவடில்
வழிந்தோடியது கடல் நீர்..
கரையின் கண்ணீராய்...
கடற்கரை..
ஓடி ஓடி வந்து சீண்டியது
காதல் கொண்ட அலை..
அலையின் சீண்டலுக்கு
அஞ்சிய கரையின் மேல்
கவிஞன் கவிதை எழுதினான்..
அவன் விரல் தீண்டலின் மேல்
கரைக்கு காதல்..
அலைக்கு அவன் மேல் பொறாமை..
கவிதைகளை ஓடிவந்து
அழித்தது அலை..
சீண்டலை பொறுத்துக்கொண்டு
மீண்டும் ஒரு தீண்டலுக்கு
காத்திருந்தது கரை..
மீண்டும் தீண்டினான்
மீண்டும் சீண்டியது
மீண்டும் காத்திருந்தது..
மீண்டும் ஒரு தீண்டலில்
கரை கேட்ட கேள்வி
என் மீது இத்தனை காதலா
கவிஞனுக்கு..
கவிஞன் தீண்டியதோ
அலையின் சீண்டலுக்காகத்தான்..
அலை அழகை கண்டு மயங்கியே
கரை கவிதைகள் இயற்றினனாம்..
மீண்டும் ஒரு சீண்டலில்
அழிந்த கவிதை சுவடில்
வழிந்தோடியது கடல் நீர்..
கரையின் கண்ணீராய்...
- எழுதியவர் : மாடசாமி மனோஜ்
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி அருகே பெருகமணி கிராமத்தில் தஞ்சை டாக்டர். எம். எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவி...
-
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூரில் அங்கம்மாள் முத்துசாமி நினைவு அறக்கட்டளை சார்பில் பெண் எழுத்தாளர்களுக்கான 2014ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள் வழங்கப்பட்டன. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
-
குடத்தில் குடிநீர் கொண்டுவர அபாயகரமான கிணற்றில் இறங்கும் பள்ளிச்சிறுமி. பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகள் குடிநீருக்காக கிணற்றில் இறக்கி...
-
திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பு அணையிலிருந்து பிரியும் பெருவளை வாய்க்காலில் பாலம் பகுதியிலிருந்து ஒருபக்க கைப்புறச்சுவர் இடிந...