Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts
Saturday, September 06, 2014
நீர்-இது வெறும் ஒரு திரவம் அல்ல.
நம் வாழ்க்கையின் ஓர் அங்கம்.
மழை வடிவில்
நமக்கு சந்தோஷத்தையும்…
நம் துக்கத்தின் போது கண்ணீராகவும்....
உருவகம் வேறாய் இருந்தாலும்
நீர் நம் வாழ்வின் ஓர் அங்கம்....
கடலுக்கு(நீருக்கு) அளப்பறிய ஆற்றல்
உண்டு
என அனைவரும் அறிந்திருப்போம்...
உண்மை தான்...
நம் கவலைகளை சுமந்து அதனிடம்
செல்கையில்
நம்மோடு விளையாடிவிட்டு
நம் கவலைகளை பெற்றுக்கொண்டு
நம்மை சந்தோஷமாக வழியனுப்புகிறதே.......
தண்ணீரை சேமிப்போம்.....
இயற்கையை காப்போம்.....
நம் வாழ்க்கையின் ஓர் அங்கம்.
மழை வடிவில்
நமக்கு சந்தோஷத்தையும்…
நம் துக்கத்தின் போது கண்ணீராகவும்....
உருவகம் வேறாய் இருந்தாலும்
நீர் நம் வாழ்வின் ஓர் அங்கம்....
கடலுக்கு(நீருக்கு) அளப்பறிய ஆற்றல்
உண்டு
என அனைவரும் அறிந்திருப்போம்...
உண்மை தான்...
நம் கவலைகளை சுமந்து அதனிடம்
செல்கையில்
நம்மோடு விளையாடிவிட்டு
நம் கவலைகளை பெற்றுக்கொண்டு
நம்மை சந்தோஷமாக வழியனுப்புகிறதே.......
தண்ணீரை சேமிப்போம்.....
இயற்கையை காப்போம்.....
Saturday, August 30, 2014
முக்கோணக்காதல்

ஒதுங்கி ஒதுங்கி போனது
கடற்கரை..
ஓடி ஓடி வந்து சீண்டியது
காதல் கொண்ட அலை..
அலையின் சீண்டலுக்கு
அஞ்சிய கரையின் மேல்
கவிஞன் கவிதை எழுதினான்..
அவன் விரல் தீண்டலின் மேல்
கரைக்கு காதல்..
அலைக்கு அவன் மேல் பொறாமை..
கவிதைகளை ஓடிவந்து
அழித்தது அலை..
சீண்டலை பொறுத்துக்கொண்டு
மீண்டும் ஒரு தீண்டலுக்கு
காத்திருந்தது கரை..
மீண்டும் தீண்டினான்
மீண்டும் சீண்டியது
மீண்டும் காத்திருந்தது..
மீண்டும் ஒரு தீண்டலில்
கரை கேட்ட கேள்வி
என் மீது இத்தனை காதலா
கவிஞனுக்கு..
கவிஞன் தீண்டியதோ
அலையின் சீண்டலுக்காகத்தான்..
அலை அழகை கண்டு மயங்கியே
கரை கவிதைகள் இயற்றினனாம்..
மீண்டும் ஒரு சீண்டலில்
அழிந்த கவிதை சுவடில்
வழிந்தோடியது கடல் நீர்..
கரையின் கண்ணீராய்...
கடற்கரை..
ஓடி ஓடி வந்து சீண்டியது
காதல் கொண்ட அலை..
அலையின் சீண்டலுக்கு
அஞ்சிய கரையின் மேல்
கவிஞன் கவிதை எழுதினான்..
அவன் விரல் தீண்டலின் மேல்
கரைக்கு காதல்..
அலைக்கு அவன் மேல் பொறாமை..
கவிதைகளை ஓடிவந்து
அழித்தது அலை..
சீண்டலை பொறுத்துக்கொண்டு
மீண்டும் ஒரு தீண்டலுக்கு
காத்திருந்தது கரை..
மீண்டும் தீண்டினான்
மீண்டும் சீண்டியது
மீண்டும் காத்திருந்தது..
மீண்டும் ஒரு தீண்டலில்
கரை கேட்ட கேள்வி
என் மீது இத்தனை காதலா
கவிஞனுக்கு..
கவிஞன் தீண்டியதோ
அலையின் சீண்டலுக்காகத்தான்..
அலை அழகை கண்டு மயங்கியே
கரை கவிதைகள் இயற்றினனாம்..
மீண்டும் ஒரு சீண்டலில்
அழிந்த கவிதை சுவடில்
வழிந்தோடியது கடல் நீர்..
கரையின் கண்ணீராய்...
- எழுதியவர் : மாடசாமி மனோஜ்
On Saturday, August 30, 2014 by Anonymous in கவிதைகள்

வழிப்போக்கன் ஒருவன்
விழிபிதுங்கி திகைத்து
மொழியறியா தேசத்தில்
திசைக்காட்டியை தேடுவதைப்போல
மீசைமுளைத்த உன் குழந்தை
நான் தவிக்கிறேனடி.
ஏன் ஏன் என் செல்லமே
உன் அன்புதேசத்திலிருந்து
என்னை நீ
தொலைத்துவிட
துடியாய் துடிக்கிறாய்.
நீ விலகிப்போ என்கிறாய்
கருகிப்போகிறது என்னிதயம்.
அன்பு அனலில்
உருக்கி செதுக்கியது
நம் உறவுச்சிற்பம்.
.
சிதைத்துவிடவா நினைக்கிறாய்?
சிதைத்தால். சிதைவது
நம் உறவுசிலை மட்டுமா?
சற்று முன்வரையிலான
உன் உயிருக்கு உயிரான
உன் அண்ணனின் உயிரும்தான்.
விழிபிதுங்கி திகைத்து
மொழியறியா தேசத்தில்
திசைக்காட்டியை தேடுவதைப்போல
மீசைமுளைத்த உன் குழந்தை
நான் தவிக்கிறேனடி.
ஏன் ஏன் என் செல்லமே
உன் அன்புதேசத்திலிருந்து
என்னை நீ
தொலைத்துவிட
துடியாய் துடிக்கிறாய்.
நீ விலகிப்போ என்கிறாய்
கருகிப்போகிறது என்னிதயம்.
அன்பு அனலில்
உருக்கி செதுக்கியது
நம் உறவுச்சிற்பம்.
.
சிதைத்துவிடவா நினைக்கிறாய்?
சிதைத்தால். சிதைவது
நம் உறவுசிலை மட்டுமா?
சற்று முன்வரையிலான
உன் உயிருக்கு உயிரான
உன் அண்ணனின் உயிரும்தான்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...