Saturday, March 14, 2020

On Saturday, March 14, 2020 by Tamilnewstv in    
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலணி உள்ளது. இந்தப் பகுதி காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. நீர்நிலைகளில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு எவ்வித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள கூடாது என்ற விதி உள்ளது. இந்நிலையில் இந்தக் கரையில் தற்போது தனியார் பிரம்மாண்ட திருமண மண்டபம் கட்டுமானப்பணிகள் முடிவடைந்து திறப்பு விழா காண உள்ளது. இந்நிலையில் காவிரிக்கரையில் கட்டுமான பணிக்கு அனுமதி அளித்ததை கண்டித்து திருவரங்கம் நகர அடிப்படை உரிமைகள் பாதுகாப்பு மக்கள் நலச்சங்கம் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.

பேட்டி:
திருவரங்கம் நகர அடிப்படை உரிமைகள் பாதுகாப்பு மக்கள் நலச் சங்கத் தலைவர் திருவேங்கடம்

0 comments: