Saturday, March 14, 2020

On Saturday, March 14, 2020 by Tamilnewstv in    
*திருச்சியில் கல்லூரி மாணவர் உட்பட 3 பேருக்கு கொரோனா அறிகுறி

கேரளாவுக்கு சென்று வீடு திரும்பிய போது அவருக்கு  காய்ச்சல் ஏற்பட்டதால் ,  கல்லூரி விடுதியில் இருந்து உடனே  அவர் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்.

கொரோனா வைரஸ்  அறிகுறியுடன் திருச்சி அரசு மருத்துவமனையில்  கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது .  தனது சொந்த ஊரான கேரளாவுக்கு சென்று திரும்பிய நிலையில் அம்மாணவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது .  இந்தியாவிலும்  இந்த வைரஸ் பரவி வருகிறது .  இந்நிலையில் திருச்சி  புத்தூரில் உள்ள தலைமை அரசு மருத்துவமனையில்,  கொரோனா நோய் பாதித்தவருகளுக்கு  சிகிச்சைக்காக சிறப்பு வார்டு  ஏற்படுத்தப்பட்டுள்ளது .  இந்நிலையில்  திருச்சியில்  விமான நிலையம் உள்ளதால் மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான நிலையத்திலேயே  மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த படுகின்றனர்

அதில் யாருக்காவது கொரோனா வைரஸ் அறிகுறிகள் ,  அதாவது,   சளி ,  இருமல் ,  மூச்சுத் திணறல் ,  இருப்பது தென்பட்டால் அவர்கள் உடனே தனி வாகனத்தில் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள் .  கடந்த 30 நாட்களில் 12 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வீடு  திரும்பியுள்ளனர் .  இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு மலேசியாவில் இருந்து திருச்சி வந்த புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் ஆருகே உள்ள பரம்பூர் என கிராமத்தை சேர்ந்த ஈஷா அனிபா என்ற இரண்டு வயது  குழந்தை சளி காய்ச்சல் தொற்றுஅறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

0 comments: