Saturday, March 14, 2020

On Saturday, March 14, 2020 by Tamilnewstv in    
திருச்சி-    

புதுகை சத்தியமூர்த்தி எல்பின் நிறுவனம் குறித்து அளித்த  புதிய தகவல்கள்




 நேற்று சென்னையில்
பெரிய அளவில் கூட்டம் நடைபெற்றது


 அதில் எல்ஃபின்  நிறுவனத் தலைவர் ராஜா அவர்கள் மதுரை குற்ற பொருளாதாரப் பிரிவில் நேற்று ஆஜராக வேண்டும் என்று காவல்துறை அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தது ஆனால்

காவல்துறையை மதிக்காமல்  காவல்துறை அனுப்பிய சம்மனுக்கு ஆஜராகாமல் நேற்று  சென்னையில் பெரிய அளவில்பண  பரிமாற்றங்கள் மற்றும் அதன் விபரம் குறித்தும் கூட்டம் நடத்தியுள்ளனர் வருகின்ற


மே 15 அன்று  அழகர்சாமி என்கிற ராஜாவிற்கு பிறந்தநாள் வருகிறது அதனை முன்னிட்டு புதிய கட்சி ஒன்று ஆரம்பிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன மேலும் அன்று தபால்தலை வெளியிடவும் ஏற்பாடு செய்து வருகின்றனர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வழக்குகள் இவர்கள் மீது உள்ள நிலையில் இவர்கள் தபால் தலை வெளியிடுவது என்பது வருத்தமாக உள்ளது ஏனெனில் தபால் தலை என்பது மதிக்கத்தக்க ஒருவருக்கு அரசால் அறிவிக்கப்படும் கவுரவமாக கருதப்படுகிறது

  இவர்களுக்கு இவர்களே பணம் கொடுத்து டாக்டர் பட்டம் கொடுத்துக் கொள்வதும் தபால் தலை வெளியிட்டு கொள்வதும் நினைக்கையில்   நகைச்சுவையாகவும் உள்ளது .


ஒன்றுக்கு 3 பங்கு தருவது ஒரு லட்சம் என்றால் மூன்று லட்சம் தரப்படும் என்று அழகர்சாமி என்கிற ராஜா அறிவிப்பு கொடுத்துள்ளார்
மத்தியஅரசு இப்படிப்பட்டஅறிவிப்புகளை நம்ப வேண்டாம் என்று  கூறினாலும்  ஒன்றுக்கு மூன்று தருவதாகக் கூறி தொடர்ச்சியாக அறிவிப்புகள் அறிவித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் பல்வேறு வழக்குகள் இவர்கள்  மீது நிலுவையில் உள்ள நிலையில் தனிமனிதன் இப்படிப்பட்ட அறிவிப்பு கொடுப்பது என்பது சட்டத்திற்குப் புறம்பானது  என்பது  எல்லோரும் அறிந்தது இவர்கள் நிறுவனத்தில் சேரும் ஒவ்வொரு மனிதருக்கும் இவர்களால் ஒன்றுக்கு 3 என்ற விகிதத்தில் பணம் தர முடியும் என்பது சாத்தியமானால் தமிழ்நாட்டு மக்கள் முழுவதும் இத்திட்டத்தில் சேர்ந்தால் இவர்களால் பணம் தர இயலுமா அரசாங்கத்திற்கு  இல்லாத அக்கறையும் பணமும்  இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது    தற்போது ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளை வைத்து காவல்துறையை சமாளிக்கலாம் என்றும் மோசடி வழியில் ஒவ்வொரு நாளும் புதிய வழியில் பணம் சம்பாதிக்க ஏதேனும் ஒரு வழியை கையாண்டு கொண்டே உள்ளனர் உண்மை தன்மை அறியாத மக்களே இறுதியில் ஏமாந்து போகிறார்கள்  மேலும் இவர்கள்
புதிய கம்பெனி ஒன்று தொடங்குவதாக கூறிவருகின்றனர்  
மைக்ரோ பைனான்ஸ் திட்டம் வகுத்துள்ளனர் அதாவது ஒவ்வொரு கிராம வாரியாக பெண்களிடையே இத்திட்டம் சென்றடைய வேண்டும் அதாவது மாடு வளர்ப்பு திட்டம் இப்படியெல்லாம் பல்வேறு அறிவிப்புகள் கொடுத்து மக்களிடையே கொண்டு செல்கிறோம் என்று மக்களை ஏமாற்றி தான் வருகின்றனர்   தற்போது ஷோரூம் திறப்பதற்கான  முயற்சிகள் முடிவடைந்துள்ளன இதிலும் பெரிய அளவில் பணம் பரிமாற்றம் நடந்துள்ளது
மக்களை திசைதிருப்பி கொள்ளையடிக்கும் நோக்கத்துடனே செயல்பட்டு வருகின்றனர் காவல்துறையில்  அதிகாரிகள் இன்றைக்கும் நேர்மையான முறையில் செயல்பட்டு தான் வருகிறார்கள் இவர்களை அரசும் காவல்துறையும் உற்றுநோக்கி தான் வருகிறது விரைவில் இவர்கள் சிக்குவார்களா படித்த மக்களும் பாமர மக்களும் ஏமாற்றப்படக் கூடாது என்பதே என் நோக்கமாகும் என்று சத்தியமூர்த்தி தெரிவித்தார் மேலும் பொதுநலன் கருதி எல்பின் நிறுவனம் குறித்த மோசடி உண்மைகளை பொதுநலன் கருதி நான் வெளியிடும் தகவல்களை செய்தியாக வெளியிடும் செய்தியாளர் சபரிநாதன் அவர்களும் இவர்களால் இன்றளவும் பல்வேறு இன்னல்களை சந்தித்து தான் வருகிறோம் இவர்கள்  இருவர் மட்டும் தானே என்று எதேதோ வழியில் எங்களுக்கு பொய் வழக்குகள் கொலை மிரட்டல்கள் போன்றவற்றை செய்திதான் வருகின்றனர் தமிழகம் முழுவதும்  எங்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட  பல்வேறு வழக்குகள் உள்ளன இதில் இவர்கள் 101வது கொலை வழக்காக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று எல்பின் நிறுவனத்தை நம்பி இருக்கும் புதிய பத்திரிக்கையாளர்  சங்கத்தினர் இடம்  எல்பின் சகோதரர்கள் கூறியுள்ளனர்   இருந்தபோதிலும் எங்களுக்கு கட்டாயம் நம்பிக்கை இருக்கிறது  காவல்துறையின் உதவியுடன் ஒரு சிறிய  உண்மைதான் பெரிய மோசடி கும்பலுக்கு முடிவு கட்டும்

0 comments: