Sunday, March 15, 2020

On Sunday, March 15, 2020 by Tamilnewstv in    
சீனா உட்பட பல நாடுகளை கொரோனா வைரஸ் தாக்குதல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.


இந்த வகையில் இந்தியாவும் இந்த நோய் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மிகுந்த சோதனைக்கு பின்னரே நாட்டிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் பல்வேறு நாடுகளுக்கு செல்லக்கூடிய விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆங்காங்கே இதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனை நடைபெறுகிறது. ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை, ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் இணைந்து இந்த சோதனையை நடத்துகிறது. சோதனையின்போது பயன்படுத்தப்படும் கருவி மூலம் வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கோவில் வளாகத்தில் உள்ள கைகழுவும் இடங்களிலும் திரவ வடிவிலான சோப்பு வைத்து பக்தர்கள் கைகழுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

0 comments: