Thursday, December 03, 2015

On Thursday, December 03, 2015 by Unknown in , ,    
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியர்களும் தங்களின் ஆதார் எண் மற்றும் அலைபேசி எண் முதலிய விவரங்கள் ஏப்ரல் 2015 மாதத்திலிருந்து நடைபெற்று வந்த நேர்காணலின்போது அந்தந்த கருவூலத்தில் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆதார் எண் ஒப்படைக்காதவர்கள் ஏராளமானோர் இருப்பதாக தெரியவந்துள்ளது. 

ஆகையால் ஆதார் எண் ஒப்படைக்காத அனைத்து ஓய்வூதியர்களும் தங்களுடைய ஆதார் அடையாள அட்டையின் நகல், ஓய்வூதியபுத்தகத்தின் முதல் பக்க நகல், மற்றும் வங்கி பாஸ்புத்தகத்தின் முதல் பக்க நகல் இணைத்து டிசம்பர் மாதம் 15-ம் தேதிக்குள் தங்கள் ஓய்வூதியம் பெறும் கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

0 comments: