Friday, December 04, 2015
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் 10வது நாளாக 3.12.2015 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் முகாமிட்டு நிவாரணப்பணிகள் மற்றும் பொதுப்பணித்துறை மூலம் கால்வாய்கள், ஒடைகள், அடைப்புகளை சீரமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்கள் வீரநாயக்கன்தட்டு மேல்நிலைப்பள்ளி மாநகராட்சி தொடக்கப்பள்ளி நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார்,ஆகியோர் நேரில் சந்தித்து உணவு வழங்கி ஆறுதல் கூறினார்.
பின்னர் கோரம்பள்ளம் மற்றும் காலங்கரை கிராமம் குளத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பை பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைக்கப்படும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து உடனடியாக முடிக்குமாறு உத்தரவிட்டார். மேலும், திருச்செந்தூர் மற்றும் உடன்குடி பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வுகளின் போது மாண்புமிகு மேயர் அ.பா.ரா.அந்தோணி கிரேஸ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், மாவட்ட வருவாய் அலுவலர் சு.முருகையா, திருச்செந்தூர் கோட்டாட்சியர் தியாகராஜன், திருச்செந்தூர் பேரூராட்சித் தலைவர் ராஜநாளா, உடன்குடி பேரூராட்சித்தலைவர் ஆயிஸா உம்மாள், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் .தே.ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகி...
-
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூரில் தேமுதிகவினர் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர்...
-
திருப்பூர், பல்லடம், பொங்கலூர் பகுதியில் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு....
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள கருமாபாளையம் மூலக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் கோணாக்காரர் என்ற சுப்பிரமணியம். இவரது மகன் கிருஷ்ணமூர...
-
திருப்பூர் சாமுண்டிபுரத்திலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, அந்த கடையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும், இந்திய...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...

0 comments:
Post a Comment