Friday, December 04, 2015
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் 10வது நாளாக 3.12.2015 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் முகாமிட்டு நிவாரணப்பணிகள் மற்றும் பொதுப்பணித்துறை மூலம் கால்வாய்கள், ஒடைகள், அடைப்புகளை சீரமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்கள் வீரநாயக்கன்தட்டு மேல்நிலைப்பள்ளி மாநகராட்சி தொடக்கப்பள்ளி நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார்,ஆகியோர் நேரில் சந்தித்து உணவு வழங்கி ஆறுதல் கூறினார்.
பின்னர் கோரம்பள்ளம் மற்றும் காலங்கரை கிராமம் குளத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பை பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைக்கப்படும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து உடனடியாக முடிக்குமாறு உத்தரவிட்டார். மேலும், திருச்செந்தூர் மற்றும் உடன்குடி பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வுகளின் போது மாண்புமிகு மேயர் அ.பா.ரா.அந்தோணி கிரேஸ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், மாவட்ட வருவாய் அலுவலர் சு.முருகையா, திருச்செந்தூர் கோட்டாட்சியர் தியாகராஜன், திருச்செந்தூர் பேரூராட்சித் தலைவர் ராஜநாளா, உடன்குடி பேரூராட்சித்தலைவர் ஆயிஸா உம்மாள், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் .தே.ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருப்பூரில், சமையல் கியாஸ் மானியத்திற்கான பதிவு செய்யும் சிறப்பு முகாமை துணை மேயர் குணசேகரன் தொடக்கி வைத்தார்.சமையல் கியாஸ் மானியத்தை பெ...
-
திருச்சி திருவானைக்கோவில் அருகே உள்ள சத்குரு மடம் உள்ளது அதன் தனிச்சிறப்பு அதிசயம் பற்றி கூறியது
0 comments:
Post a Comment