Thursday, December 03, 2015
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக எட்டயபுரத்தில் 60மிமீ மழை பெய்துள்ளது
இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்): கோவில்பட்டி 56, விளாத்திகுளம் 47, குலசேகரன்பட்டினம் 45, காடல்குடி 34, காயல்பட்டினம் 25, திருச்செந்தூர் 23, சூரங்குடி 23, கழுகுமலை 23, தூத்துக்குடி 14, என மாவட்டத்தில் மொத்தம் 396 மிமீ மழை பெய்துள்ளது.
தற்போது பெய்த பலத்த மழையால் கோவில்பட்டி பகுதிகளில் விளை நிலத்துக்குள் தண்ணீர் தேங்கி பயிர்கள் சேதமடைந்தன. கழுகுமலை அருகே கரடிகுளத்தில் மானாவாரி பயிர்கள் சேதமடைந்துள்ளன. இப்பகுதியில் 4 விவசாயிகளுக்குச் சொந்தமான 2.16 ஹெக்டரில் பயிரிடப்பட்டிருந்த பாசி, உளுந்து பயிர்கள் நீரில் மூழ்கின.
கடம்பூர் அருகே குருமலை பகுதியில் ராஜன்குளம் கண்மாய் தென்புறம் கரை உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதன் அருகேயுள்ள புஞ்சை மற்றும் நஞ்சை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. அரசங்குளம் அயன்குளம் கண்மாய் அருகேயுள்ள 7 விவசாயிகளுக்குச் சொந்தமான 4.50 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களும் சேதமடைந்துள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment