Thursday, December 03, 2015
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக எட்டயபுரத்தில் 60மிமீ மழை பெய்துள்ளது
இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்): கோவில்பட்டி 56, விளாத்திகுளம் 47, குலசேகரன்பட்டினம் 45, காடல்குடி 34, காயல்பட்டினம் 25, திருச்செந்தூர் 23, சூரங்குடி 23, கழுகுமலை 23, தூத்துக்குடி 14, என மாவட்டத்தில் மொத்தம் 396 மிமீ மழை பெய்துள்ளது.
தற்போது பெய்த பலத்த மழையால் கோவில்பட்டி பகுதிகளில் விளை நிலத்துக்குள் தண்ணீர் தேங்கி பயிர்கள் சேதமடைந்தன. கழுகுமலை அருகே கரடிகுளத்தில் மானாவாரி பயிர்கள் சேதமடைந்துள்ளன. இப்பகுதியில் 4 விவசாயிகளுக்குச் சொந்தமான 2.16 ஹெக்டரில் பயிரிடப்பட்டிருந்த பாசி, உளுந்து பயிர்கள் நீரில் மூழ்கின.
கடம்பூர் அருகே குருமலை பகுதியில் ராஜன்குளம் கண்மாய் தென்புறம் கரை உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதன் அருகேயுள்ள புஞ்சை மற்றும் நஞ்சை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. அரசங்குளம் அயன்குளம் கண்மாய் அருகேயுள்ள 7 விவசாயிகளுக்குச் சொந்தமான 4.50 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களும் சேதமடைந்துள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
திருப்பூர் சாமுண்டிபுரத்திலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, அந்த கடையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும், இந்திய...
-
திருப்பூர் அரசு போக்குவரத்து பணிமனைகளில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆய்வு .திருப்பூரில் இருந்து கோவை .உடுமலை.பழனி.மதுரை உட்பட அனை...
-
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பூர்...
-
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகி...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
தமிழகத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட குடும்ப அட்டைகள் இந்த ஆண்டுடன் முடிவடைவதால் , புதிய குடும்ப அட்டைகள் வழங்க வேண்டியிருக்கிறது . எனினும் த...
-
வடகொரியத் தலைவரைக் கொல்வதைக் கற்பனைக் கதையாகக் கொண்ட சர்ச்சைக்குரிய திரைப்படம் அமெரிக்காவில் சில திரையரங்...
0 comments:
Post a Comment