Wednesday, December 17, 2014
தமிழகத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட குடும்ப அட்டைகள் இந்த ஆண்டுடன் முடிவடைவதால், புதிய குடும்ப அட்டைகள் வழங்க வேண்டியிருக்கிறது. எனினும் தற்காலிக ஏற்பாடாக வரக்கூடிய ஆண்டிற்கு உள்தாள் ஒட்டி பயன்படுத்த அரசு அறிவித்துள்ளது. இதன்படி உள்தாள் ஒட்டுதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் டிசம்பர் 16ம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இதில் குடும்ப அட்டைகளில் உள்தாள் ஒட்டுவதற்கு, அந்த குடும்ப அட்டையின் புகைப்படத்தில் உள்ள குடும்பத் தலைவர் /தலைவி மட்டுமே நேரில் வர வேண்டும் என்று விற்பனையாளர்கள் கூறுகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ஏராளமானோர் உள்தாள் ஒட்ட இயலாமல் திரும்பிச் சென்றுள்ளனர்.
குறிப்பாக திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில், குடும்ப அட்டையின் புகைப்படத்தில் உள்ளவர்கள் மட்டுமே நேரில் வந்து உள்தாள் ஒட்டிச் செல்ல வேண்டும் என்ற உத்தரவு ஏராளமானவர்களுக்கு வேலை இழப்பை ஏற்படுத்துகிறது. பலர் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
போலி குடும்ப அட்டைகளை தவிர்ப்பதற்காக இது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குடுமைப்பொருள் வழங்கல் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் புதிதாக குடும்ப அட்டைகள் பெறும்போதே ஊழல் நடைமுறையை களைந்தால்தான் போலி அட்டைகளை ஒழிக்க முடியும். ஏற்கனவே பயன்படுத்தி வரும் குடும்ப அட்டைகளில் உள்தாள் ஒட்டும் நடைமுறையை கடுமையாக்குவதன் மூலம் போலி அட்டைகளை ஒழிக்க முடியாது. மாறாக, சாமானிய மக்களுக்கு வேலை இழப்பையும், அலைக்கழிப்பையும் தான் ஏற்படுத்தும்.
எனவே விதிமுறையை தளர்த்தி குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் வந்தால் உள்தாள் ஒட்டிக் கொள்ளலாம் என்றுஅறிவிக்க வேண்டும். ஏழை, எளிய சாமானிய மக்களின் வேலை இழப்பையும், அவர்கள் அலைக்கழிக்கப்படுவதையும் தவிர்க்க அதிகாரிகளுக்கு தமிழக அரசு உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கேட்டுக் கொள்கிறது.
என,
கே.காமராஜ்
மாவட்டச் செயலாளர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி 1.1.15 திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வைஃபை இன்டர்நெட் சேவை இன்று துவக்கி வைத்தார். இந்தி...

0 comments:
Post a Comment