Wednesday, December 17, 2014
தமிழகத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட குடும்ப அட்டைகள் இந்த ஆண்டுடன் முடிவடைவதால், புதிய குடும்ப அட்டைகள் வழங்க வேண்டியிருக்கிறது. எனினும் தற்காலிக ஏற்பாடாக வரக்கூடிய ஆண்டிற்கு உள்தாள் ஒட்டி பயன்படுத்த அரசு அறிவித்துள்ளது. இதன்படி உள்தாள் ஒட்டுதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் டிசம்பர் 16ம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இதில் குடும்ப அட்டைகளில் உள்தாள் ஒட்டுவதற்கு, அந்த குடும்ப அட்டையின் புகைப்படத்தில் உள்ள குடும்பத் தலைவர் /தலைவி மட்டுமே நேரில் வர வேண்டும் என்று விற்பனையாளர்கள் கூறுகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ஏராளமானோர் உள்தாள் ஒட்ட இயலாமல் திரும்பிச் சென்றுள்ளனர்.
குறிப்பாக திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில், குடும்ப அட்டையின் புகைப்படத்தில் உள்ளவர்கள் மட்டுமே நேரில் வந்து உள்தாள் ஒட்டிச் செல்ல வேண்டும் என்ற உத்தரவு ஏராளமானவர்களுக்கு வேலை இழப்பை ஏற்படுத்துகிறது. பலர் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
போலி குடும்ப அட்டைகளை தவிர்ப்பதற்காக இது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குடுமைப்பொருள் வழங்கல் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் புதிதாக குடும்ப அட்டைகள் பெறும்போதே ஊழல் நடைமுறையை களைந்தால்தான் போலி அட்டைகளை ஒழிக்க முடியும். ஏற்கனவே பயன்படுத்தி வரும் குடும்ப அட்டைகளில் உள்தாள் ஒட்டும் நடைமுறையை கடுமையாக்குவதன் மூலம் போலி அட்டைகளை ஒழிக்க முடியாது. மாறாக, சாமானிய மக்களுக்கு வேலை இழப்பையும், அலைக்கழிப்பையும் தான் ஏற்படுத்தும்.
எனவே விதிமுறையை தளர்த்தி குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் வந்தால் உள்தாள் ஒட்டிக் கொள்ளலாம் என்றுஅறிவிக்க வேண்டும். ஏழை, எளிய சாமானிய மக்களின் வேலை இழப்பையும், அவர்கள் அலைக்கழிக்கப்படுவதையும் தவிர்க்க அதிகாரிகளுக்கு தமிழக அரசு உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கேட்டுக் கொள்கிறது.
என,
கே.காமராஜ்
மாவட்டச் செயலாளர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
தூத்துக்குடி மாவட்டம் சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (2.12.2015) வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பல்வேறு பகுதிகளில் இர...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
-
Canara Bank Officers Association as a part of its social commitment to the society. The social service wing CANPAL donated about 1500 ...
0 comments:
Post a Comment