Monday, December 15, 2014
மதுரை மாவட்டத்தில் உரிமம் வழங்கப்பட்ட 195 குவாரிகளில், 83 குவாரிகளில் விதிமீறல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த குவாரிகளால் ஏறத்தாழ ரூ.13 ஆயிரம் கோடிக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில், ஒவ்வொரு குவாரிக்கும் அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விளக்கம் அளிக்க குவாரி உரிமதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, கடந்த ஆண்டில் விசாரணை நடைபெற்றது. அதையடுத்து, நீதிமன்றத் தடை உத்தரவு காரணமாக விசாரணை நிறுத்தப்பட்டது. தடையாணை விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து, 70 குவாரிகளுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதன்படி, டிசம்பர் 3 ஆம் தேதி முதல் மாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் முன்பு, குவாரி உரிமதாரர்கள் சார்பில் அவர்களது வழக்குரைஞர்கள் ஆஜராயினர். சனிக்கிழமை வரை, 70 குவாரிகளின் தரப்பிலும் ஆஜராகி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அப்போது, அபராதம் விதிப்பு முறைப்படி கணக்கிடப்படவில்லை.
விற்பனைக்குரிய கற்களைக் கணக்கிட்டால், அனுமதிக்கப்பட்ட அளவுக்குத்தான் குவாரிகள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன என, குவாரி உரிமதாரர்களின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விரிவான விளக்கம் அளிக்க காலஅவகாசம் கோரியுள்ளனர்.
முதல்கட்ட விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த விசாரணை டிசம்பர் 18, 19ஆம் தேதிகளில் மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்கான இரண்டாவது நோட்டீஸ், 70 உரிமதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் உரிமதாரர்கள் நேரடியாக கண்டிப்பாக ஆஜராக வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விசாரணைக்குப் பிறகு, அபராதம் இறுதி செய்யப்பட்டு, அத்தொகையை வசூலிப்பதற்கு மூன்றாவது நோட்டீஸ் அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி 1.1.15 திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வைஃபை இன்டர்நெட் சேவை இன்று துவக்கி வைத்தார். இந்தி...
0 comments:
Post a Comment