Monday, December 15, 2014

On Monday, December 15, 2014 by Unknown in ,    
அவனியாபுரத்தை அடுத்த வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில், பெண் சடலமாகக் கிடந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அவனியாபுரத்தை அடுத்த வெள்ளக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி வெயிலாயி (28), வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில் இரும்புக் கம்பிகளை பெருக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், வேலைக்குச் சென்ற வெயிலாயி வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பவில்லையாம். அவரைத் தேடியுள்ளனர். பின்னர், சனிக்கிழமை மதியம் அவர் குப்பைகளுக்கு மத்தியில் சடலமாகக் கிடந்துள்ளார்.
இது குறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சடலத்தை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக அவனியாபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்

0 comments: