Monday, December 15, 2014
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.
தமாகா உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிக்காக கன்னியாகுமரி செல்ல விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை மதுரைக்கு வந்த ஜி.கே.வாசன் இங்கு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்கள் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் த.மா.காவினர் செயல்படுவர். தென்மாவட்டங்களில் ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தமிழரின் பாரம்பரிய விளையாட்டு. இதை வெளி மாநிலத்தவரும், வெளிநாட்டவரும் விரும்பிப் பார்க்க வருகிறார்கள். தற்போது ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே, ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அனுமதியைப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றார்.
ஜி.கே.வாசனுடன் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், பீட்டர்அல்போன்ஸ், யுவராஜா உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
விருதுநகர்: விருதுநகர் வந்த வாசனை, ஐ.என்.டி.யு.சி. பாலசுப்பிரமணியம், நகராட்சி உறுப்பினர் பழனிவேல் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் காமராஜரின் நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு வாசன் மாலை அணிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காமராஜரின் வழியில் த.மா.கா.வை ஏற்படுத்தி தமிழகத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்குவோம். கட்சியில் 50 லட்சம் பேரை உறுப்பினர்களாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு அனைத்து தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனால் அரசு அதை உடனே திரும்ப பெற வேண்டும் என்றார். முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் விஸ்வநாதன், சித்தன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகோபால், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தமாகா உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிக்காக கன்னியாகுமரி செல்ல விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை மதுரைக்கு வந்த ஜி.கே.வாசன் இங்கு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்கள் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் த.மா.காவினர் செயல்படுவர். தென்மாவட்டங்களில் ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தமிழரின் பாரம்பரிய விளையாட்டு. இதை வெளி மாநிலத்தவரும், வெளிநாட்டவரும் விரும்பிப் பார்க்க வருகிறார்கள். தற்போது ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே, ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அனுமதியைப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றார்.
ஜி.கே.வாசனுடன் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், பீட்டர்அல்போன்ஸ், யுவராஜா உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
விருதுநகர்: விருதுநகர் வந்த வாசனை, ஐ.என்.டி.யு.சி. பாலசுப்பிரமணியம், நகராட்சி உறுப்பினர் பழனிவேல் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் காமராஜரின் நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு வாசன் மாலை அணிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காமராஜரின் வழியில் த.மா.கா.வை ஏற்படுத்தி தமிழகத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்குவோம். கட்சியில் 50 லட்சம் பேரை உறுப்பினர்களாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு அனைத்து தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனால் அரசு அதை உடனே திரும்ப பெற வேண்டும் என்றார். முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் விஸ்வநாதன், சித்தன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகோபால், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
தூத்துக்குடி மாவட்டம் சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (2.12.2015) வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பல்வேறு பகுதிகளில் இர...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
-
Canara Bank Officers Association as a part of its social commitment to the society. The social service wing CANPAL donated about 1500 ...
0 comments:
Post a Comment