Sunday, December 14, 2014
ஏழைகளின் அரசு என்று சொல்லிக் கொண்டு தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு பால் கட்டண உயர்வைத் தொடர்ந்து மின்சாரக் கட்டண உயர்வையும் சுமத்தி இருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
வெள்ளியன்று மின் கட்டணம் 15 சதவிகிதம் உயர்த்தப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அன்று மாலையே திருப்பூர் புதிய பஸ் நிலையம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநகரக்குழு உறுப்பினர் இ.பி.ஜெயகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் மின் கட்டணம் 15 சதவிகிதத்தை உயர்த்தியிருப்பதற்கு தமிழக அரசிற்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மின் கட்டண உயர்வை கைவிட வலியுறுத்தி கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.கோபாலகிருஷ்ணன், மாநகரக்குழுச் செயலாளர் பி.முருகேசன், மாநகரக்குழு உறுப்பினர் பி.ஆர்.கணேசன் ஆகியோர் உரையாற்றினர்.
ஏழைகளின் அரசு என்று சொல்லிக் கொள்ளும் அதிமுக அரசு அடுத்தடுத்து மக்களின் அடிப்படை தேவைகளின் மீது சுமைகளைச் சுமத்தி வருகிறது. பால் கட்டணத்தை உயர்த்தியது, தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. அதேபோல் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசும் மக்கள் விரோத கொள்கைகளை திணித்து வருகிறது. எனவே இரு அரசுகளின் மக்களுக்கு எதிரான கொள்கைகளை தடுத்து நிறுத்த சாமானிய மக்கள் இடதுசாரிகளின் பின்னால் அணிதிரள வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள் வலியுறுத்தினர். இதில் மாநகரக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உள்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
தினசரி மக்களின் அன்றாட வாழ்க்கை பரபரப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எத்தனை பரபரப்பு களில் மக்கள் வாழ்ந்தாலும், திடீர் திடீரென மூட...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment