Sunday, December 14, 2014
ஏழைகளின் அரசு என்று சொல்லிக் கொண்டு தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு பால் கட்டண உயர்வைத் தொடர்ந்து மின்சாரக் கட்டண உயர்வையும் சுமத்தி இருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
வெள்ளியன்று மின் கட்டணம் 15 சதவிகிதம் உயர்த்தப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அன்று மாலையே திருப்பூர் புதிய பஸ் நிலையம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநகரக்குழு உறுப்பினர் இ.பி.ஜெயகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் மின் கட்டணம் 15 சதவிகிதத்தை உயர்த்தியிருப்பதற்கு தமிழக அரசிற்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மின் கட்டண உயர்வை கைவிட வலியுறுத்தி கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.கோபாலகிருஷ்ணன், மாநகரக்குழுச் செயலாளர் பி.முருகேசன், மாநகரக்குழு உறுப்பினர் பி.ஆர்.கணேசன் ஆகியோர் உரையாற்றினர்.
ஏழைகளின் அரசு என்று சொல்லிக் கொள்ளும் அதிமுக அரசு அடுத்தடுத்து மக்களின் அடிப்படை தேவைகளின் மீது சுமைகளைச் சுமத்தி வருகிறது. பால் கட்டணத்தை உயர்த்தியது, தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. அதேபோல் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசும் மக்கள் விரோத கொள்கைகளை திணித்து வருகிறது. எனவே இரு அரசுகளின் மக்களுக்கு எதிரான கொள்கைகளை தடுத்து நிறுத்த சாமானிய மக்கள் இடதுசாரிகளின் பின்னால் அணிதிரள வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள் வலியுறுத்தினர். இதில் மாநகரக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உள்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு உடுமலை காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்யப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ.2 ...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...
0 comments:
Post a Comment