Sunday, December 14, 2014
ஏழைகளின் அரசு என்று சொல்லிக் கொண்டு தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு பால் கட்டண உயர்வைத் தொடர்ந்து மின்சாரக் கட்டண உயர்வையும் சுமத்தி இருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
வெள்ளியன்று மின் கட்டணம் 15 சதவிகிதம் உயர்த்தப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அன்று மாலையே திருப்பூர் புதிய பஸ் நிலையம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநகரக்குழு உறுப்பினர் இ.பி.ஜெயகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் மின் கட்டணம் 15 சதவிகிதத்தை உயர்த்தியிருப்பதற்கு தமிழக அரசிற்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மின் கட்டண உயர்வை கைவிட வலியுறுத்தி கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.கோபாலகிருஷ்ணன், மாநகரக்குழுச் செயலாளர் பி.முருகேசன், மாநகரக்குழு உறுப்பினர் பி.ஆர்.கணேசன் ஆகியோர் உரையாற்றினர்.
ஏழைகளின் அரசு என்று சொல்லிக் கொள்ளும் அதிமுக அரசு அடுத்தடுத்து மக்களின் அடிப்படை தேவைகளின் மீது சுமைகளைச் சுமத்தி வருகிறது. பால் கட்டணத்தை உயர்த்தியது, தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. அதேபோல் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசும் மக்கள் விரோத கொள்கைகளை திணித்து வருகிறது. எனவே இரு அரசுகளின் மக்களுக்கு எதிரான கொள்கைகளை தடுத்து நிறுத்த சாமானிய மக்கள் இடதுசாரிகளின் பின்னால் அணிதிரள வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள் வலியுறுத்தினர். இதில் மாநகரக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உள்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி 1.1.15 திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வைஃபை இன்டர்நெட் சேவை இன்று துவக்கி வைத்தார். இந்தி...
0 comments:
Post a Comment