Tuesday, December 30, 2014
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பூர்ணிமா(வயது 45) என்பவர் தனது தாயாருடன் மனு கொடுக்க வந்திருந்தார். திடீரென்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கு முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
இது பற்றி பூர்ணிமா கூறுகையில், எனது கணவர் சந்திரசேகர். எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். எனது கணவருக்கு பெண் குழந்தை பிடிக்காது. அதனால் என்னையும், எனது 2 குழந்தைகளையும் கொடுமை செய்தார். அவரிடம் இருந்து தப்பி வந்து திருப்பூரில் வாழ்ந்து வருகிறேன். இங்கு வந்த பிறகும் எனக்கும், எனது குழந்தைகளுக்கும் மிரட்டல் வருகிறது. எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.
மனு கொடுக்காமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தை கேட்டதும், மாவட்ட வருவாய் அதிகாரி பாரிவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) லதா ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இருப்பினும் பூர்ணிமா தொடர்ந்து அதிகாரிகளிடம் சமாதானம் அடையாமலும், மனு கொடுக்காமலும் வாக்குவாதம் செய்து கொண்டே இருந்தார். இதைத்தொடர்ந்து போலீஸ் வேன் வரவழைக்கப்பட்டு பூர்ணிமாவை வேனில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
0 comments:
Post a Comment