Tuesday, December 30, 2014
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பூர்ணிமா(வயது 45) என்பவர் தனது தாயாருடன் மனு கொடுக்க வந்திருந்தார். திடீரென்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கு முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
இது பற்றி பூர்ணிமா கூறுகையில், எனது கணவர் சந்திரசேகர். எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். எனது கணவருக்கு பெண் குழந்தை பிடிக்காது. அதனால் என்னையும், எனது 2 குழந்தைகளையும் கொடுமை செய்தார். அவரிடம் இருந்து தப்பி வந்து திருப்பூரில் வாழ்ந்து வருகிறேன். இங்கு வந்த பிறகும் எனக்கும், எனது குழந்தைகளுக்கும் மிரட்டல் வருகிறது. எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.
மனு கொடுக்காமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தை கேட்டதும், மாவட்ட வருவாய் அதிகாரி பாரிவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) லதா ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இருப்பினும் பூர்ணிமா தொடர்ந்து அதிகாரிகளிடம் சமாதானம் அடையாமலும், மனு கொடுக்காமலும் வாக்குவாதம் செய்து கொண்டே இருந்தார். இதைத்தொடர்ந்து போலீஸ் வேன் வரவழைக்கப்பட்டு பூர்ணிமாவை வேனில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
'ஐ' பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...

0 comments:
Post a Comment