Tuesday, December 30, 2014
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பூர்ணிமா(வயது 45) என்பவர் தனது தாயாருடன் மனு கொடுக்க வந்திருந்தார். திடீரென்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கு முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
இது பற்றி பூர்ணிமா கூறுகையில், எனது கணவர் சந்திரசேகர். எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். எனது கணவருக்கு பெண் குழந்தை பிடிக்காது. அதனால் என்னையும், எனது 2 குழந்தைகளையும் கொடுமை செய்தார். அவரிடம் இருந்து தப்பி வந்து திருப்பூரில் வாழ்ந்து வருகிறேன். இங்கு வந்த பிறகும் எனக்கும், எனது குழந்தைகளுக்கும் மிரட்டல் வருகிறது. எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.
மனு கொடுக்காமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தை கேட்டதும், மாவட்ட வருவாய் அதிகாரி பாரிவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) லதா ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இருப்பினும் பூர்ணிமா தொடர்ந்து அதிகாரிகளிடம் சமாதானம் அடையாமலும், மனு கொடுக்காமலும் வாக்குவாதம் செய்து கொண்டே இருந்தார். இதைத்தொடர்ந்து போலீஸ் வேன் வரவழைக்கப்பட்டு பூர்ணிமாவை வேனில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...

0 comments:
Post a Comment