Wednesday, December 02, 2015
தூத்துக்குடி மாவட்டம் சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (2.12.2015) வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பல்வேறு பகுதிகளில் இருக்கும் 21 பள்ளிகளைச் சார்ந்த 1098 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி கல்வித்துறையின் சார்பில் விலையில்லா பாடநூல்கள் மற்றும் பாட குறிப்பேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார், தலைமையில் சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வழங்கினார்.
மேலும், பல்வேறு பகுதிகளைச் சார்ந்த குடிசை வீடுகளை இழந்த 412 நபர்களுக்கு ரூ13.93 இலட்சம் நிவாரண நிதியுதவியை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் வழங்கினார். வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விடுகளை கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதுவரை 452 குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.19.79 இலட்சம் நேற்று வரை வழங்கப்பட்டுள்ளது. இன்று (2.12.2015) பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பாதியளவு வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ரூ.4100/- வீதம் 303 நபர்களுக்கும், முழுமையாக விடுகளை இழந்தவர்களுக்கு ரூ.5000/- வீதம் 111 நபர்களுக்கும் மொத்தம் ரூ.13.93 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் இதுவரை குடிசை வீடுகளை இழந்த 865 நபர்களுக்கு ரூ.33.79 இலட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுகளின் போது மாண்புமிகு மேயர் திருமதி.அ.பா.ரா.அந்தோணி கிரேஸ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் திரு.பி.டி.ஆர்.ராஜகோபால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.இராமகிருஷ்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.கு.தமிழ்செல்வராஜன், வட்டாட்சியர் திரு.சந்திரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.தே.ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் 10வது நாளாக 3.12.2015...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருப்பூர், : திருப்பூர் அரசு மருத்துவமனையில் பூட்டிக் கிடக்கும் மண்டல நோய் கண்டறியும் மையத்தை செயல்படுத்த வலியுறுத்தி போராட்டத்தில...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
திருப்பூர் அரசு மருத்துவமனையை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இணையான தரத்தில் உயர்த்திட ரூ.5.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்...
-
Blossom Kochhar Aroma Magic launches a new range of Professional Facial Kit in Trichy Trichy, August 6, 2015: Designed to remove...
-
திருச்சி 29.09.18 மத்திய மாநில அரசுகள் பெட்ரோல், டீசலுக்கான வரியை பாதியாக குறைக்க வேண்டும்-திருச்சியில் எல்.ஜே.டி. மாநில பொதுச் செ...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment