Wednesday, December 02, 2015
தூத்துக்குடி மாவட்டம் சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (2.12.2015) வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பல்வேறு பகுதிகளில் இருக்கும் 21 பள்ளிகளைச் சார்ந்த 1098 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி கல்வித்துறையின் சார்பில் விலையில்லா பாடநூல்கள் மற்றும் பாட குறிப்பேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார், தலைமையில் சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வழங்கினார்.
மேலும், பல்வேறு பகுதிகளைச் சார்ந்த குடிசை வீடுகளை இழந்த 412 நபர்களுக்கு ரூ13.93 இலட்சம் நிவாரண நிதியுதவியை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் வழங்கினார். வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விடுகளை கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதுவரை 452 குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.19.79 இலட்சம் நேற்று வரை வழங்கப்பட்டுள்ளது. இன்று (2.12.2015) பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பாதியளவு வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ரூ.4100/- வீதம் 303 நபர்களுக்கும், முழுமையாக விடுகளை இழந்தவர்களுக்கு ரூ.5000/- வீதம் 111 நபர்களுக்கும் மொத்தம் ரூ.13.93 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் இதுவரை குடிசை வீடுகளை இழந்த 865 நபர்களுக்கு ரூ.33.79 இலட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுகளின் போது மாண்புமிகு மேயர் திருமதி.அ.பா.ரா.அந்தோணி கிரேஸ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் திரு.பி.டி.ஆர்.ராஜகோபால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.இராமகிருஷ்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.கு.தமிழ்செல்வராஜன், வட்டாட்சியர் திரு.சந்திரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.தே.ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருப்பூரில், சமையல் கியாஸ் மானியத்திற்கான பதிவு செய்யும் சிறப்பு முகாமை துணை மேயர் குணசேகரன் தொடக்கி வைத்தார்.சமையல் கியாஸ் மானியத்தை பெ...
-
திருச்சி திருவானைக்கோவில் அருகே உள்ள சத்குரு மடம் உள்ளது அதன் தனிச்சிறப்பு அதிசயம் பற்றி கூறியது
0 comments:
Post a Comment