Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News
தமிழ் திரையுலகையும், தமிழக அரசியலையும் என்றும் பிரிக்க முடியாது. இந்நிலையில் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களை அவதூறாக பேசி இலங்கை இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டதால் தமிழகமே கொதித்து போய் உள்ளது.
இதற்கு தங்கள் எதிர்ப்பை காட்டும் விதத்தில் தமிழ் திரையுலகத்தினர் நேற்று இலங்கை தூதரகத்தை மூடக்கோரி போராட்டம் நடத்தினர். இதில் நடிகர்கள் விஜய், சூர்யா, ஜீவா மற்றும் இயக்குனர்களில் கே.எஸ்.ரவிக்குமார், முருகதாஸ், பார்த்திபன், சீமான் போன்று பலர் கலந்து கொண்டனர்.
பெரிதும் எதிர்பார்த்த ரஜினிகாந்த் வராதது அனைவருக்கும் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது, இதேபோல் கமலும் வரவில்லை, அஜித் பற்றி சொல்லவே தேவையில்லை. ஆனால் இதற்கு என்ன காரணம் என்பது யாருக்கும் தெரியாமலே இருந்து வருகிறது.
இது பற்றி நெருங்கிய வட்டாரங்களை விசாரித்தால் ரஜினி லிங்கா படத்திலும், கமல் உத்தம் வில்லன் படத்திலும் பிஸியாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதே போல் சென்ற வருடம் இலங்கைக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, அவர்களுக்கு ஆதரவு தரும் நோக்கத்தில் தமிழ் திரையுலகம் உண்ணாவிரத போராட்டம் நடத்தியது.
இதில் அஜித் காலையிலிருந்து போராட்டம் முடியும் வரை கலந்து கொண்டார், ஆனால் நேற்றைய போராட்டத்தில் இவர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று தெரியவில்லை.
பெரும்பாலும் ஈழத்து மக்கள் பிரச்சனை என்றால் கண்டிப்பாக அனைவரும் கலந்து கொள்வார்கள், ஆனால் இது தனி மனிதருக்கான நிகழ்வு என்பதால் தவிர்த்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
உடுமலை நகரமன்ற துணைத்தலைவர் M கண்ணாயிரம் தலைமையில் அ. இ. அ. தி. மு .க வினர் பழனி முருகன் கோவிலில் தங்கத்தேர் வடம் பிடித்து சிறப்பு பிரார்த்...
-
தூத்துக்குடி மாவட்டம் சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (2.12.2015) வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பல்வேறு பகுதிகளில் இர...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...