Monday, August 11, 2014
On Monday, August 11, 2014 by Anonymous in ஈழம்
தமிழீழக் கனவுடன் தமிழ் மக்களின் விடுதலைக்காய் தம் இன்னுயிரை தியாகம் செய்து சாவினை தழுவிக்கொண்ட மாவீரக் குழந்தைகளுக்கு இராணுவக் கெடுப்பிடிகளுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணத்தில் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்று மாலை 6.01 இற்கு யாழ்ப்பாணத்தில் ஜப்பானின் ஜெயக்கா நிறுவனத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட நவீன சத்திரசிகிச்சைக் கட்டிடத்தின் மேல்தளத்தில் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கட்டிடத்தின் மேல் தளத்தில் தீபம் சுடர் விட்டு எரிவதைக் கண்ட இராணுவத்தினர் வைத்தியசாலை வளாகத்தினுள்ளே ஓடி வந்ததால் வைத்தியசாலை வளாகம் போர்க்களமாக சில மணித்தியாலம் மாறியிருந்தது.
இதேவேளை யாழ்ப்பாணத்தின் சகல பகுதிகளிலும் இன்று மாலை இராணுவத்தினர் கடும் ரோந்துப் பணிகளை மேற்கொண்டனர். ஆனாலும் இராணுவத்தின் நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் மக்கள் தமது வீடுகளில் சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இதேவேளை நேற்று இன்றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் இராணுவத்தினரது அடாவடித் தனங்கள் அதிகரித்துக் காணப்பட்டது.
குறிப்பாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினீர்களா என கேட்டு இன்று மாலை இரண்டு இளைஞர்கள் இராணுவத்தினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
இதை விட பல இடங்களில் இராணுவத்தினர் மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சூழலில் இராணுவம் குவிக்கப்பட்டு மக்கள் கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் சுடர் ஏற்றப்பட்டததைத் தொடர்ந்து கடும் பதற்றம் யாழ்.நகர் பகுதியில் நிலவி வருகின்றது.
யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு
அச்சுறுத்தல்கள் அனைத்தையும் தாண்டி யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவுத்தூபிக்கு மாணவர்களால் சுடர் ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் மௌனப் பிரார்த்தனை மூலம் மாவீரர்களுக்கான தமது அஞ்சலியை இன்றையதினம் அமைதியான முறையில் செலுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் யாழ்.பல்கலைக்கழக சூழலில் இராணுவம் ,பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு பதட்டம் நிலவுகின்ற நிலையிலும் எமது மண்ணுக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் யாழ்ப்பாணத்தில் பிரத்தியேகமாக பல இடங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...





