Thursday, August 07, 2014

On Thursday, August 07, 2014 by Anonymous in
சிப்பாய் தாமதம் ஏன்...?
கடல் படத்துக்குப் பிறகு கௌதம் கார்த்திக் நடிக்க ஆரம்பித்த படம் சிப்பாய். சிலம்பாட்டம் சரவணனின் இரண்டாவது படம்.

லட்சுமி மேனன் நாயகியாக நடித்துள்ள இப்படம் எப்போதோ திரைக்கு வந்திருக்க வேண்டியது. ஆனால் வரவில்லை. பெட்டிக்குள் முடங்கியுள்ள இது எப்போது வெளியாகும் என்றும் தெரியவில்லை.

சிப்பாய்க்கு ஏனிந்த பதுங்குக்குழி நிலைமை?

சிப்பாய் படத்தின் கதை சட்டக்கல்லூரி கலவரத்தை பின்னணியாகக் கொண்டது என கூறப்படுகிறது. இதே பின்னணியில் தயாரான படம்தான் விக்ரம் பிரபுவின் இவன் வேற மாதிரி.

விக்ரம் பிரபுவின் படம் முந்திக் கொண்டதால் அதன் கதை ரசிகர்களின் மனதிலிருந்து மாயட்டும் என்று சிப்பாய் காத்திருப்பதாக கூறுகிறார்கள்.

உண்மையா சரவணன் சார்...?