Sunday, September 21, 2014
உத்தவ் தாக்கரே | படம்: பிடிஐ
மகாராஷ்டிர தேர்தல் கூட்டணியில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், 'சிவசேனாவுக்கு 151 இடங்கள்; பாஜகவுக்கு 119 இடங்கள்' என புது கூட்டணி கணக்கு ஒன்றை உத்தவ் தாக்கரே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளார்.
பாஜக, சிவசேனா கட்சிகளிடையே கடந்த சில நாட்களாக தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையால் இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் அதிகரிக்கவே வகை செய்யப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 288 தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 135 தொகுதிகளில் போட்டியிடலாம், எஞ்சிய 18 தொகுதிகளை சிறிய கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கலாம் என்று பாஜக கூறி வருகிறது. இதனை ஏற்க மறுத்துள்ள சிவசேனா, 155 தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுவோம் என்று தெரிவித்து வந்தது.
இந்த நிலையில், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே ஞாயிற்றுக்கிழமை புது கூட்டணி கணக்கு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதன்படி, சிவசேனாவுக்கு 151 இடங்கள்; பாஜகவுக்கு 119 இடங்கள் (2009-ல் வழங்கப்பட்ட எண்ணிக்கை) மற்றும் இதர கட்சிகளுக்கு 19 இடங்கள் ஒதுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். இதுவே தமது இறுதி முடிவு என்று பாஜகவுக்கு அவர் தகவல் அளித்துள்ளார்.
இம்முறை தொகுதிப் பங்கீட்டில் கடுமையான சிக்கல் ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ள உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர மாநில நலனைக் கருத்தில்கொண்டே இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குஜராத் கலவரத்துக்குப் பின், நரேந்திர மோடிக்கு மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரே அதரவு அளித்ததை உத்தவ் நினைவுகூர்ந்துள்ளார்.
முன்னதாக, மகாராஷ்டிர பாஜக மூத்த தலைவர் வினோத் தவ்டே கூறியபோது, சிவசேனாவுடனான கூட்டணி தொடரவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அந்தக் கட்சியின் தொகுதிப் பங்கீட்டை ஏற்க முடியாது என்று தெரிவித்தது கவனிக்கத்தக்கது.
இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் அதிகரித்து வரும் நிலையில், நேற்றுமுன்தினம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே, மகாராஷ்டிர மாநில பாஜக பொறுப்பாளர் ஓ.பி.மாத் தூரை சந்தித்துப் பேசினார். நேற்றும் இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தைகளில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேசியவாத காங்கிரஸ் கெடு
இதனிடையே, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இடையிலும் கூட்டணிச் சிக்கல் நீடித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் தற்போது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. இந்த கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டிலும் குழப்பம் நீடிக்கிறது.
மொத்தமுள்ள 288 தொகுதிகளில் தேசியவாத காங்கிரஸுக்கு 124 தொகுதிகளை ஒதுக்க காங்கிரஸ் முன்வந்துள்ளது. இதனை தேசியவாத காங்கிரஸ் ஏற்க மறுத்துவிட்டது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் கூறும்போது, "50:50 என்ற அடிப்படையில் தொகுதிப் பங்கீடு அமைய வேண்டும் என்பதை காங்கிரஸிடம் பலமுறை தெரியப்படுத்தி விட்டோம். ஆனால் அந்தக் கட்சி தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறது.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக இன்னும் 2 நாள்களில் காங்கிரஸ் முடிவு எடுக்க வேண்டும். இல்லையெனில் தேசியவாத காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment