Tuesday, September 09, 2014
பொள்ளாச்சி, : பொள்ளாச்சி சரகத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த எஸ்.ஐ. க்கள் மற்றும் போலீசார் உட்பட 29ம் பேர் திடீர் என வேறு ஸ்டேஷன்களுக்கு இடமாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
பொள்ளாச்சி சரகத்தில், தாலுகா, மேற்கு, கிழக்கு, வடக்கிபாளையம், நெகமம், கோமங்கலம், மகாலிங்கபுரம் மற்றும் மகளிர் போலீஸ் நிலையங்கள் உள்ளன. இங்கு சுமார் 180க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், இச்சரகத்திற்குட்பட்ட ஸ்டேஷன்களில் பல ஆண்டுகளாக பணியாற்றிய போலீசாரை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி உயர் அதிகாரிகள் பரிந்துரையின்பேரில், இடமாறுதல் தொடர்பான உத்தரவை மாவட்ட எஸ்பி.,சுதாகர் வெளியிட்டுள்ளார். அதில் பொள்ளாச்சி சரகத்திற்குட்பட்ட ஸ்டேஷன்களில் பணிபுரிந்து வந்த எஸ்ஐ., எஸ்எஸ்ஐ., தலைமை காவலர் மற்றும் தனிப்பிரிவு போலீசார் என மொத்தம் 29 பேர் கோவை மாவட்டத்திற்குட்பட்ட பெரியநாயக்கன்பாளையம், பேரூர் மற்றும் கருமத்தம்பட்டி சரகத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கோவை மாவட்டத்தில் பேரூர், கருமத்தம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம் சரகத்திற்குட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில், போலீசாரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால். பொள்ளாச்சி சரக ஸ்டேஷன்களில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment