Tuesday, September 09, 2014
பொள்ளாச்சி, : பொள்ளாச்சி சரகத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த எஸ்.ஐ. க்கள் மற்றும் போலீசார் உட்பட 29ம் பேர் திடீர் என வேறு ஸ்டேஷன்களுக்கு இடமாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
பொள்ளாச்சி சரகத்தில், தாலுகா, மேற்கு, கிழக்கு, வடக்கிபாளையம், நெகமம், கோமங்கலம், மகாலிங்கபுரம் மற்றும் மகளிர் போலீஸ் நிலையங்கள் உள்ளன. இங்கு சுமார் 180க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், இச்சரகத்திற்குட்பட்ட ஸ்டேஷன்களில் பல ஆண்டுகளாக பணியாற்றிய போலீசாரை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி உயர் அதிகாரிகள் பரிந்துரையின்பேரில், இடமாறுதல் தொடர்பான உத்தரவை மாவட்ட எஸ்பி.,சுதாகர் வெளியிட்டுள்ளார். அதில் பொள்ளாச்சி சரகத்திற்குட்பட்ட ஸ்டேஷன்களில் பணிபுரிந்து வந்த எஸ்ஐ., எஸ்எஸ்ஐ., தலைமை காவலர் மற்றும் தனிப்பிரிவு போலீசார் என மொத்தம் 29 பேர் கோவை மாவட்டத்திற்குட்பட்ட பெரியநாயக்கன்பாளையம், பேரூர் மற்றும் கருமத்தம்பட்டி சரகத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கோவை மாவட்டத்தில் பேரூர், கருமத்தம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம் சரகத்திற்குட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில், போலீசாரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால். பொள்ளாச்சி சரக ஸ்டேஷன்களில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி திருவானைக்கோவில் அருகே உள்ள சத்குரு மடம் உள்ளது அதன் தனிச்சிறப்பு அதிசயம் பற்றி கூறியது
0 comments:
Post a Comment