Tuesday, September 09, 2014
உடுமலை, : கோவை, திருப்பூர் மாவட்ட பிஏபி 2ம் மண்டல பாசனத்துக்காக திருமூர்த்தி அணையில் இருந்து பிரதான கால்வாயில் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 94 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் இருந்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3.75 லட்சத்துக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி அடிப்படையில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது 2ம் மண்டல பாசனம் நடைபெற உள்ளது. இதற்கு கடந்த ஆகஸ்ட் மாதமே தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால், பருவமழை பொய்த்து பிஏபி அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததாலும், கான்டூர் கால்வாயில் பராமரிப்பு பணிகள் நடந்ததாலும் குறித்த காலத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
தற்போது, பருவமழை பொழிந்து அணைகள் நிரம்பி விட்டன. கான்டூர் கால்வாய் பராமரிப்பு பணியும் முடிந்தது. இதை தொடர்ந்து, பரம்பிக்குளம் அணையில் இருந்து கான்டூர் கால்வாயில் கடந்த 20ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. 60 அடி நீர்மட்டம் கொண்ட அணையில் தற்போது 56 அடி தண்ணீர் உள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில், திருமூர்த்தி அணையில் இருந்து பிரதான கால்வாயில் நேற்று காலை 9 மணிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் கலந்து கொண்டு அணை மதகுகளை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், கண்காணிப்பு பொறியாளர் இளங்கோவன், பொள்ளாச்சி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர்கள் ஜெயசீலன், செல்லமுத்து, ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் பாபு மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதன் மூலம் சுமார் 94 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment