Tuesday, September 09, 2014
ஈரோடு, : ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு (கன்ட்ரோல் ரூம்) மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்களிடம் இருந்து வரும் அழைப்புகள் முறையாக சம்மந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு தெரிவிக்கப்படுவதில்லை என்றும், பல அழைப்புகளை அங்கு பணியாற்றும் மைக் ஆப்ரேட்டர்கள் கண்டு கொள்வதில்லை எனவும் ஈரோடு எஸ்.பி., சிபிசக்ரவர்த்திக்கு பல்வேறு புகார்கள் சென்றது.
இதையடுத்து இரு தினங்களுக்கு முன்பு இரவு சுமார் 9 மணியளவில் பவானி அருகிலுள்ள லட்சுமி நகரில் இருந்து கன்ட்ரோல் ரூமிற்கு பொது தொலைபேசி மூலம் எஸ்.பி., சிபிசக்ரவர்த்தி தொடர்பு கொண்டுள்ளார். பொதுமக்களில் ஒருவரை போல குரலை மாற்றி பேசிய அவர், ‘‘சார்... லட்சுமி நகரில் இருந்து பேசுகிறேன். இங்கு ஒரே அடிதடி ரகளையாக இருக்கிறது. தயவு செய்து போலீஸ்காரர்கள் யாரை யாவது அனுப்பி அடிதடியில் ஈடுபடுபவர்களை கைது செய்யுங்கள்‘‘, என்று கூறியுள்ளார்.
அப்போது கன்ட்ரோல் ரூமில் பணியில் இருந்த போலீஸ்காரர், சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் கூறி விடுவதாக கூறி போனை வைத்து விட்டார். லட்சுமி நகரில் சுமார் 15 நிமிடங்கள் போலீசார் யாரேனும் வருகிறார்களா? என்று காத்திருந்த எஸ்.பி., சிபிசக்ரவர்த்தி யாரும் வராததால், மீண்டும் கன்ட்ரோல் ரூமிற்கு தொடர்பு கொண்டு, சார்... எந்த போலீசும் வரவில்லை? இங்கு அடிதடி ரகளை அதிகமாகி, ஒருவரை ஒருவர் மாறி, மாறி அடித்து கொண்டிருக்கிறார்கள்? போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் சொல்லி விட்டீர்களா? போலீஸ்காரர்கள் யாரேனும் வருவார்களா? என்று எஸ்.பி., கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்த கன்ட்ரோல் ரூம் போலீஸ்காரர், ‘‘யோவ்.. இருய்யா! நீ சொன்னால் உடனே ஆள் அனுப்பி விடணுமா? போலீஸ் ஸ்டேசனுக்கு சொல்லியாச்சு; அவங்க வருவாங்க. சும்மா, சும்மா போன் பண்ணி தொந்தரவு பண்ணாதே,‘‘ என்று கூறி விட்டு போனை வைத்து விட்டார். அதன் பிறகும் எந்த போலீசும் அந்த இடத்திற்கு வரவில்லை.
இதையடுத்து நேற்று முன்தினம் காலை அலுவலகம் வந்த எஸ்.பி., சிபிசக்ரவர்த்தி, கன்ட்ரோல் ரூமில் பணியில் உள்ளவர்களின் விபரங்களை சேகரித்தார். பல ஆண்டுகளாக கன்ட்ரோல் ரூமில் சுழற்சி முறையில் 4 போலீஸ்காரர்கள் பணியாற்றி வருவதை அறிந்தார். அந்த 4 போலீஸ்காரர்களையும் எச்சரித்த எஸ்.பி., அவர்கள் நால்வரில் மூவரை சூரம்பட்டி, கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேசனுக்கும், ஒருவரை ஆயுதப்படை பிரிவுக்கும் அதிரடியாக டிரான்ஸ்பர் செய்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறுகையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாறுவேடத்தில் சென்று பார்வையிட்டு எஸ்.பி.,சிபிசக்ரவர்த்தி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாகவே தற்போது கன்ட்ரோல் ரூமில் பணியாற்றி வந்த 4 போலீஸ்காரர்களையும் பணியிட மாறுதல் செய்துள்ளார். இதேபோன்று இனி பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என எதிர்பார்க்கலாம், என்றனர்.
இதையடுத்து இரு தினங்களுக்கு முன்பு இரவு சுமார் 9 மணியளவில் பவானி அருகிலுள்ள லட்சுமி நகரில் இருந்து கன்ட்ரோல் ரூமிற்கு பொது தொலைபேசி மூலம் எஸ்.பி., சிபிசக்ரவர்த்தி தொடர்பு கொண்டுள்ளார். பொதுமக்களில் ஒருவரை போல குரலை மாற்றி பேசிய அவர், ‘‘சார்... லட்சுமி நகரில் இருந்து பேசுகிறேன். இங்கு ஒரே அடிதடி ரகளையாக இருக்கிறது. தயவு செய்து போலீஸ்காரர்கள் யாரை யாவது அனுப்பி அடிதடியில் ஈடுபடுபவர்களை கைது செய்யுங்கள்‘‘, என்று கூறியுள்ளார்.
அப்போது கன்ட்ரோல் ரூமில் பணியில் இருந்த போலீஸ்காரர், சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் கூறி விடுவதாக கூறி போனை வைத்து விட்டார். லட்சுமி நகரில் சுமார் 15 நிமிடங்கள் போலீசார் யாரேனும் வருகிறார்களா? என்று காத்திருந்த எஸ்.பி., சிபிசக்ரவர்த்தி யாரும் வராததால், மீண்டும் கன்ட்ரோல் ரூமிற்கு தொடர்பு கொண்டு, சார்... எந்த போலீசும் வரவில்லை? இங்கு அடிதடி ரகளை அதிகமாகி, ஒருவரை ஒருவர் மாறி, மாறி அடித்து கொண்டிருக்கிறார்கள்? போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் சொல்லி விட்டீர்களா? போலீஸ்காரர்கள் யாரேனும் வருவார்களா? என்று எஸ்.பி., கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்த கன்ட்ரோல் ரூம் போலீஸ்காரர், ‘‘யோவ்.. இருய்யா! நீ சொன்னால் உடனே ஆள் அனுப்பி விடணுமா? போலீஸ் ஸ்டேசனுக்கு சொல்லியாச்சு; அவங்க வருவாங்க. சும்மா, சும்மா போன் பண்ணி தொந்தரவு பண்ணாதே,‘‘ என்று கூறி விட்டு போனை வைத்து விட்டார். அதன் பிறகும் எந்த போலீசும் அந்த இடத்திற்கு வரவில்லை.
இதையடுத்து நேற்று முன்தினம் காலை அலுவலகம் வந்த எஸ்.பி., சிபிசக்ரவர்த்தி, கன்ட்ரோல் ரூமில் பணியில் உள்ளவர்களின் விபரங்களை சேகரித்தார். பல ஆண்டுகளாக கன்ட்ரோல் ரூமில் சுழற்சி முறையில் 4 போலீஸ்காரர்கள் பணியாற்றி வருவதை அறிந்தார். அந்த 4 போலீஸ்காரர்களையும் எச்சரித்த எஸ்.பி., அவர்கள் நால்வரில் மூவரை சூரம்பட்டி, கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேசனுக்கும், ஒருவரை ஆயுதப்படை பிரிவுக்கும் அதிரடியாக டிரான்ஸ்பர் செய்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறுகையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாறுவேடத்தில் சென்று பார்வையிட்டு எஸ்.பி.,சிபிசக்ரவர்த்தி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாகவே தற்போது கன்ட்ரோல் ரூமில் பணியாற்றி வந்த 4 போலீஸ்காரர்களையும் பணியிட மாறுதல் செய்துள்ளார். இதேபோன்று இனி பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என எதிர்பார்க்கலாம், என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment