Tuesday, September 09, 2014
ஈரோடு, : ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு (கன்ட்ரோல் ரூம்) மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்களிடம் இருந்து வரும் அழைப்புகள் முறையாக சம்மந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு தெரிவிக்கப்படுவதில்லை என்றும், பல அழைப்புகளை அங்கு பணியாற்றும் மைக் ஆப்ரேட்டர்கள் கண்டு கொள்வதில்லை எனவும் ஈரோடு எஸ்.பி., சிபிசக்ரவர்த்திக்கு பல்வேறு புகார்கள் சென்றது.
இதையடுத்து இரு தினங்களுக்கு முன்பு இரவு சுமார் 9 மணியளவில் பவானி அருகிலுள்ள லட்சுமி நகரில் இருந்து கன்ட்ரோல் ரூமிற்கு பொது தொலைபேசி மூலம் எஸ்.பி., சிபிசக்ரவர்த்தி தொடர்பு கொண்டுள்ளார். பொதுமக்களில் ஒருவரை போல குரலை மாற்றி பேசிய அவர், ‘‘சார்... லட்சுமி நகரில் இருந்து பேசுகிறேன். இங்கு ஒரே அடிதடி ரகளையாக இருக்கிறது. தயவு செய்து போலீஸ்காரர்கள் யாரை யாவது அனுப்பி அடிதடியில் ஈடுபடுபவர்களை கைது செய்யுங்கள்‘‘, என்று கூறியுள்ளார்.
அப்போது கன்ட்ரோல் ரூமில் பணியில் இருந்த போலீஸ்காரர், சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் கூறி விடுவதாக கூறி போனை வைத்து விட்டார். லட்சுமி நகரில் சுமார் 15 நிமிடங்கள் போலீசார் யாரேனும் வருகிறார்களா? என்று காத்திருந்த எஸ்.பி., சிபிசக்ரவர்த்தி யாரும் வராததால், மீண்டும் கன்ட்ரோல் ரூமிற்கு தொடர்பு கொண்டு, சார்... எந்த போலீசும் வரவில்லை? இங்கு அடிதடி ரகளை அதிகமாகி, ஒருவரை ஒருவர் மாறி, மாறி அடித்து கொண்டிருக்கிறார்கள்? போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் சொல்லி விட்டீர்களா? போலீஸ்காரர்கள் யாரேனும் வருவார்களா? என்று எஸ்.பி., கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்த கன்ட்ரோல் ரூம் போலீஸ்காரர், ‘‘யோவ்.. இருய்யா! நீ சொன்னால் உடனே ஆள் அனுப்பி விடணுமா? போலீஸ் ஸ்டேசனுக்கு சொல்லியாச்சு; அவங்க வருவாங்க. சும்மா, சும்மா போன் பண்ணி தொந்தரவு பண்ணாதே,‘‘ என்று கூறி விட்டு போனை வைத்து விட்டார். அதன் பிறகும் எந்த போலீசும் அந்த இடத்திற்கு வரவில்லை.
இதையடுத்து நேற்று முன்தினம் காலை அலுவலகம் வந்த எஸ்.பி., சிபிசக்ரவர்த்தி, கன்ட்ரோல் ரூமில் பணியில் உள்ளவர்களின் விபரங்களை சேகரித்தார். பல ஆண்டுகளாக கன்ட்ரோல் ரூமில் சுழற்சி முறையில் 4 போலீஸ்காரர்கள் பணியாற்றி வருவதை அறிந்தார். அந்த 4 போலீஸ்காரர்களையும் எச்சரித்த எஸ்.பி., அவர்கள் நால்வரில் மூவரை சூரம்பட்டி, கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேசனுக்கும், ஒருவரை ஆயுதப்படை பிரிவுக்கும் அதிரடியாக டிரான்ஸ்பர் செய்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறுகையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாறுவேடத்தில் சென்று பார்வையிட்டு எஸ்.பி.,சிபிசக்ரவர்த்தி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாகவே தற்போது கன்ட்ரோல் ரூமில் பணியாற்றி வந்த 4 போலீஸ்காரர்களையும் பணியிட மாறுதல் செய்துள்ளார். இதேபோன்று இனி பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என எதிர்பார்க்கலாம், என்றனர்.
இதையடுத்து இரு தினங்களுக்கு முன்பு இரவு சுமார் 9 மணியளவில் பவானி அருகிலுள்ள லட்சுமி நகரில் இருந்து கன்ட்ரோல் ரூமிற்கு பொது தொலைபேசி மூலம் எஸ்.பி., சிபிசக்ரவர்த்தி தொடர்பு கொண்டுள்ளார். பொதுமக்களில் ஒருவரை போல குரலை மாற்றி பேசிய அவர், ‘‘சார்... லட்சுமி நகரில் இருந்து பேசுகிறேன். இங்கு ஒரே அடிதடி ரகளையாக இருக்கிறது. தயவு செய்து போலீஸ்காரர்கள் யாரை யாவது அனுப்பி அடிதடியில் ஈடுபடுபவர்களை கைது செய்யுங்கள்‘‘, என்று கூறியுள்ளார்.
அப்போது கன்ட்ரோல் ரூமில் பணியில் இருந்த போலீஸ்காரர், சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் கூறி விடுவதாக கூறி போனை வைத்து விட்டார். லட்சுமி நகரில் சுமார் 15 நிமிடங்கள் போலீசார் யாரேனும் வருகிறார்களா? என்று காத்திருந்த எஸ்.பி., சிபிசக்ரவர்த்தி யாரும் வராததால், மீண்டும் கன்ட்ரோல் ரூமிற்கு தொடர்பு கொண்டு, சார்... எந்த போலீசும் வரவில்லை? இங்கு அடிதடி ரகளை அதிகமாகி, ஒருவரை ஒருவர் மாறி, மாறி அடித்து கொண்டிருக்கிறார்கள்? போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் சொல்லி விட்டீர்களா? போலீஸ்காரர்கள் யாரேனும் வருவார்களா? என்று எஸ்.பி., கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்த கன்ட்ரோல் ரூம் போலீஸ்காரர், ‘‘யோவ்.. இருய்யா! நீ சொன்னால் உடனே ஆள் அனுப்பி விடணுமா? போலீஸ் ஸ்டேசனுக்கு சொல்லியாச்சு; அவங்க வருவாங்க. சும்மா, சும்மா போன் பண்ணி தொந்தரவு பண்ணாதே,‘‘ என்று கூறி விட்டு போனை வைத்து விட்டார். அதன் பிறகும் எந்த போலீசும் அந்த இடத்திற்கு வரவில்லை.
இதையடுத்து நேற்று முன்தினம் காலை அலுவலகம் வந்த எஸ்.பி., சிபிசக்ரவர்த்தி, கன்ட்ரோல் ரூமில் பணியில் உள்ளவர்களின் விபரங்களை சேகரித்தார். பல ஆண்டுகளாக கன்ட்ரோல் ரூமில் சுழற்சி முறையில் 4 போலீஸ்காரர்கள் பணியாற்றி வருவதை அறிந்தார். அந்த 4 போலீஸ்காரர்களையும் எச்சரித்த எஸ்.பி., அவர்கள் நால்வரில் மூவரை சூரம்பட்டி, கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேசனுக்கும், ஒருவரை ஆயுதப்படை பிரிவுக்கும் அதிரடியாக டிரான்ஸ்பர் செய்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறுகையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாறுவேடத்தில் சென்று பார்வையிட்டு எஸ்.பி.,சிபிசக்ரவர்த்தி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாகவே தற்போது கன்ட்ரோல் ரூமில் பணியாற்றி வந்த 4 போலீஸ்காரர்களையும் பணியிட மாறுதல் செய்துள்ளார். இதேபோன்று இனி பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என எதிர்பார்க்கலாம், என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...

0 comments:
Post a Comment