Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by Unknown in ,    
Displaying IMG_9252.JPG
திருப்பூர் மாநகராட்சி 45 வது வார்டு இடைத்தேர்தலில் போட்டியிடும் அண்ணா தி.மு.,க. வேட்பாளர் எம்.கண்ணப்பனுக்கு ஆதரவாக  திருப்பூர் மாநகர் மாவட்ட செயலளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனநதன் தலைமையில் அ.தி.மு.க., வினர், பொதுமக்கள் இரு சக்கர வாகன பேரணியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு வேட்டையாடினர். திருப்பூர் பார்க் ரோடு எம்.ஜி. ஆர் சிலை அருகில் துவங்கிய இந்த பேரணியை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்து இரு சக்கர வாகனத்தில் சென்றார். திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், வேட்பாளர் எம்.கண்ணப்பன் உள்ளிட்டோர் பேரணியில் வாகனம் ஒட்டி சென்றனர். திருப்பூர் காமாட்சியம்மன் கோவில் வீதி, புதுமார்க்கட் வீதி, காமராஜர் ரோடு, உள்ளிட்ட பகுதிகளில் இந்த பேரணி சென்றது. இதில் மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம், தம்பி மனோகரன், எஸ்.ஆர்.ஜெயக்குமார், மார்க்கெட் சக்திவேல், ஏ.எஸ்.கண்ணன், கண்ணபிரான், சடையப்பன், ராஜேஷ் கண்ணா, கோகுல், புலவர் சக்திவேல், கேபிள் பாலு, ராஜ்குமார், ஈஸ்வரமூத்தி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 comments: