Wednesday, September 17, 2014
தாம்பரம்,
தாம்பரத்தில் நகை பாலீஷ் போடுவது போல நடித்து 10 பவுன் தங்க நகைகளை அபேஸ் செய்த வடநாட்டு வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நகை பாலீஷ்
சென்னையை அடுத்த தாம்பரம் ரங்கநாதபுரம் 4–வது தெருவைச் சேர்ந்தவர் பஷீரா (வயது 45). இவரது உறவினர் ரெஜினாபேகம் (48). 2 பேரும் கடப்பேரி எம்.இ.எஸ் சாலையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். அப்போது அங்கு வந்த வடநாட்டு வாலிபர்கள் 2 பேர் நகைகளுக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறினர்.
இருவரும் கொலுசுகளை கழற்றி பாலீஷ் போட கொடுத்தபோது அதை பாலீஷ் போட்டு புதிது போல மாற்றி கொடுத்தனர். உடனே அவர்கள் தங்க நகைகளுக்கும் பாலீஷ் போடுவோம் என கூறினர். இதைத் தொடர்ந்து இருவரும் 10 பவுன் தங்கச் சங்கிலிகளை பாலீஷ் போட கொடுத்தனர். நகைகளை வாங்கி பாலீஷ் போடுவது போல ஒரு சட்டியில் போட்டு நீண்ட நேரம் மஞ்சள்நிற பொடியை போட்டு கிளறினர்.
10 பவுன் நகை மோசடி
இதன் பின்னர் தங்கச்சங்கிலிகளை கண்இமைக்கும் நேரத்தில் எடுத்துக்கொண்ட அவர்கள், ‘சட்டியில் நகைகள் உள்ளன. சிறிது சூடுபடுத்தி அதன் பின்னர் குளிர்ந்தவுடன் எடுத்து விடுங்கள் நகை புதிதாக இருக்கும்’ என கூறி கூலியாக ரூ.600 வாங்கிக் கொண்டு வடநாட்டு ஆசாமிகள் கம்பி நீட்டி விட்டனர்.
அவர்கள் சென்றபின்னர் சட்டியை சூடுபடுத்தி குளிரவைத்து சட்டிக்குள் கைவிட்டு பார்த்தபோது அதில் நகைகள் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் இது தொடர்பாக தாம்பரம் போலீசில் புகார் செய்தனர். தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
0 comments:
Post a Comment