Wednesday, September 17, 2014
தாம்பரம்,
தாம்பரத்தில் நகை பாலீஷ் போடுவது போல நடித்து 10 பவுன் தங்க நகைகளை அபேஸ் செய்த வடநாட்டு வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நகை பாலீஷ்
சென்னையை அடுத்த தாம்பரம் ரங்கநாதபுரம் 4–வது தெருவைச் சேர்ந்தவர் பஷீரா (வயது 45). இவரது உறவினர் ரெஜினாபேகம் (48). 2 பேரும் கடப்பேரி எம்.இ.எஸ் சாலையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். அப்போது அங்கு வந்த வடநாட்டு வாலிபர்கள் 2 பேர் நகைகளுக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறினர்.
இருவரும் கொலுசுகளை கழற்றி பாலீஷ் போட கொடுத்தபோது அதை பாலீஷ் போட்டு புதிது போல மாற்றி கொடுத்தனர். உடனே அவர்கள் தங்க நகைகளுக்கும் பாலீஷ் போடுவோம் என கூறினர். இதைத் தொடர்ந்து இருவரும் 10 பவுன் தங்கச் சங்கிலிகளை பாலீஷ் போட கொடுத்தனர். நகைகளை வாங்கி பாலீஷ் போடுவது போல ஒரு சட்டியில் போட்டு நீண்ட நேரம் மஞ்சள்நிற பொடியை போட்டு கிளறினர்.
10 பவுன் நகை மோசடி
இதன் பின்னர் தங்கச்சங்கிலிகளை கண்இமைக்கும் நேரத்தில் எடுத்துக்கொண்ட அவர்கள், ‘சட்டியில் நகைகள் உள்ளன. சிறிது சூடுபடுத்தி அதன் பின்னர் குளிர்ந்தவுடன் எடுத்து விடுங்கள் நகை புதிதாக இருக்கும்’ என கூறி கூலியாக ரூ.600 வாங்கிக் கொண்டு வடநாட்டு ஆசாமிகள் கம்பி நீட்டி விட்டனர்.
அவர்கள் சென்றபின்னர் சட்டியை சூடுபடுத்தி குளிரவைத்து சட்டிக்குள் கைவிட்டு பார்த்தபோது அதில் நகைகள் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் இது தொடர்பாக தாம்பரம் போலீசில் புகார் செய்தனர். தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment