Wednesday, September 17, 2014
செங்குன்றம்,
மனைவி, மகளை கொன்ற வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற கைதி, புழல் ஜெயிலில் மர்மமான இறந்து கிடந்தார்.
ஆயுள்தண்டனை கைதி
சென்னை அடையாறு பேங்கர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் அசோக்ராஜ் (வயது 50). இவர் கடந்த 2011–ம் ஆண்டில் தனது மனைவி, மகளை எரித்துக் கொலை செய்த வழக்கில் கடந்த 10.9.2014 இரட்டை ஆயுள்தண்டனை பெற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் கைதிகளுடன் சேர்ந்து வரிசையில் நின்று இரவு உணவை வாங்கிக் கொண்டு அறைக்கு சென்றார்.
இரவு 7 மணிக்கு புழல் பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது மின்சாரம் தடைபட்டது. சிறை போலீசார் அனைத்து கைதிகளையும் சிறையில் அடைப்பதற்காக பார்த்த போது அசோக்ராஜை மட்டும் காணவில்லை.
மர்மச்சாவு
உடனே சிறைத்துறை டி.ஐ.ஜி. ராஜேந்திரன், சூப்பிரண்டு அன்பழகன், கூடுதல் சூப்பிரண்டு ருக்மணி மற்றும் சிறை போலீசார் அசோக்ராஜை தேடிப்பார்த்தனர். அவரை காணவில்லை. அப்போது சிறை அறையில் இருந்து ½ கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே மர்மமான முறையில் அசோக்ராஜ் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து புழல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடலை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நல்ல ஆரோக்கியமாக இருந்த கைதி அசோக்ராஜ் திடீரென எப்படி இறந்தார்? சக கைதிகள் சேர்ந்து தண்ணீர் தொட்டியில் அமுக்கி அவரை கொலை செய்து விட்டார்களா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment