Wednesday, September 17, 2014
செங்குன்றம்,
மனைவி, மகளை கொன்ற வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற கைதி, புழல் ஜெயிலில் மர்மமான இறந்து கிடந்தார்.
ஆயுள்தண்டனை கைதி
சென்னை அடையாறு பேங்கர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் அசோக்ராஜ் (வயது 50). இவர் கடந்த 2011–ம் ஆண்டில் தனது மனைவி, மகளை எரித்துக் கொலை செய்த வழக்கில் கடந்த 10.9.2014 இரட்டை ஆயுள்தண்டனை பெற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் கைதிகளுடன் சேர்ந்து வரிசையில் நின்று இரவு உணவை வாங்கிக் கொண்டு அறைக்கு சென்றார்.
இரவு 7 மணிக்கு புழல் பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது மின்சாரம் தடைபட்டது. சிறை போலீசார் அனைத்து கைதிகளையும் சிறையில் அடைப்பதற்காக பார்த்த போது அசோக்ராஜை மட்டும் காணவில்லை.
மர்மச்சாவு
உடனே சிறைத்துறை டி.ஐ.ஜி. ராஜேந்திரன், சூப்பிரண்டு அன்பழகன், கூடுதல் சூப்பிரண்டு ருக்மணி மற்றும் சிறை போலீசார் அசோக்ராஜை தேடிப்பார்த்தனர். அவரை காணவில்லை. அப்போது சிறை அறையில் இருந்து ½ கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே மர்மமான முறையில் அசோக்ராஜ் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து புழல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடலை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நல்ல ஆரோக்கியமாக இருந்த கைதி அசோக்ராஜ் திடீரென எப்படி இறந்தார்? சக கைதிகள் சேர்ந்து தண்ணீர் தொட்டியில் அமுக்கி அவரை கொலை செய்து விட்டார்களா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment