Wednesday, September 17, 2014
4 நாள் அரசு முறைப் பயணமாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வியட்நாம் சென்றுள்ள நிலையில் அங்கு 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அதில் இந்தியா - வியட்நாம் இடையே எண்ணெய், இயற்கை எரிவாயு இறக்குமதி, நேரடி விமானச் சேவை உள்ளிட்ட அம்சங்களும் அடங்கும்.
தலைநகர் ஹனோயில் வியட்நாம் அதிபர் துரூங் தன்சாங்கும், பிரணாப் முகர்ஜியும் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், தென் சீனக் கடற்பகுதியில் நடைபெற்று வரும் எண்ணெய் துரப்பணப் பணியை விரிவாக்கம் செய்வது தொடர்பான ஒப்பந்தம் இடம்பெற்றுள்ளது.
மேலும், அரசியல், ராணுவம், பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம், கலாசாரம், இரு நாட்டு மக்களுக்கும் இடையேயான தொடர்பு ஆகியவற்றில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
குறிப்பாக, வியட்நாம் ராணுவத்துக்கு தளவாடங்கள் வாங்குவதற்காக 10 கோடி டாலரை இந்தியா கடனாக வழங்குவது என்றும் முடிவானது. இந்தியா - வியட்நாம் இடையே நவம்பர் 5 ஆம் தேதி முதல் நேரடி விமானப் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி, மும்பை ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து வியட்நாமின் ஹோசிமின் நகருக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தங்கள் விமானச் சேவையைத் தொடங்கவ உள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
0 comments:
Post a Comment