Wednesday, September 17, 2014
4 நாள் அரசு முறைப் பயணமாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வியட்நாம் சென்றுள்ள நிலையில் அங்கு 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அதில் இந்தியா - வியட்நாம் இடையே எண்ணெய், இயற்கை எரிவாயு இறக்குமதி, நேரடி விமானச் சேவை உள்ளிட்ட அம்சங்களும் அடங்கும்.
தலைநகர் ஹனோயில் வியட்நாம் அதிபர் துரூங் தன்சாங்கும், பிரணாப் முகர்ஜியும் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், தென் சீனக் கடற்பகுதியில் நடைபெற்று வரும் எண்ணெய் துரப்பணப் பணியை விரிவாக்கம் செய்வது தொடர்பான ஒப்பந்தம் இடம்பெற்றுள்ளது.
மேலும், அரசியல், ராணுவம், பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம், கலாசாரம், இரு நாட்டு மக்களுக்கும் இடையேயான தொடர்பு ஆகியவற்றில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
குறிப்பாக, வியட்நாம் ராணுவத்துக்கு தளவாடங்கள் வாங்குவதற்காக 10 கோடி டாலரை இந்தியா கடனாக வழங்குவது என்றும் முடிவானது. இந்தியா - வியட்நாம் இடையே நவம்பர் 5 ஆம் தேதி முதல் நேரடி விமானப் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி, மும்பை ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து வியட்நாமின் ஹோசிமின் நகருக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தங்கள் விமானச் சேவையைத் தொடங்கவ உள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
 
 
 
 
0 comments:
Post a Comment