Saturday, September 20, 2014
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள குளக்குடிபட்டியை சேர்ந்தவர் சங்கப்பிள்ளை(வயது 60). இவருடைய அண்ணன் பெரியசாமி(வயது 65) விவசாயி. இவர்கள் இருவருக்கும் பூர்வீக சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்தது. இந்தநிலையில் கடந்த 19.3.2013 அன்று பெரியசாமிக்கும், சங்கப்பிள்ளையின் மகன் பிரகாசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பெரியசாமி அரிவாளால் பிரகாசை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த பிரகாஷ் இறந்தார். இது குறித்து தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி, பெரியசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வக்கீல் அசோகன் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் நீதிபதி உத்திராபதி நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், "குற்றம் சாட்டப்பட்ட பெரியசாமிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும்" விதித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
0 comments:
Post a Comment