Saturday, September 20, 2014

On Saturday, September 20, 2014 by farook press in ,    
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள குளக்குடிபட்டியை சேர்ந்தவர் சங்கப்பிள்ளை(வயது 60). இவருடைய அண்ணன் பெரியசாமி(வயது 65) விவசாயி. இவர்கள் இருவருக்கும் பூர்வீக சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்தது. இந்தநிலையில் கடந்த 19.3.2013 அன்று பெரியசாமிக்கும், சங்கப்பிள்ளையின் மகன் பிரகாசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பெரியசாமி அரிவாளால் பிரகாசை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த பிரகாஷ் இறந்தார். இது குறித்து தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி, பெரியசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வக்கீல் அசோகன் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் நீதிபதி உத்திராபதி நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், "குற்றம் சாட்டப்பட்ட பெரியசாமிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும்" விதித்தார்.

0 comments: