Saturday, September 20, 2014
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள குளக்குடிபட்டியை சேர்ந்தவர் சங்கப்பிள்ளை(வயது 60). இவருடைய அண்ணன் பெரியசாமி(வயது 65) விவசாயி. இவர்கள் இருவருக்கும் பூர்வீக சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்தது. இந்தநிலையில் கடந்த 19.3.2013 அன்று பெரியசாமிக்கும், சங்கப்பிள்ளையின் மகன் பிரகாசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பெரியசாமி அரிவாளால் பிரகாசை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த பிரகாஷ் இறந்தார். இது குறித்து தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி, பெரியசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வக்கீல் அசோகன் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் நீதிபதி உத்திராபதி நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், "குற்றம் சாட்டப்பட்ட பெரியசாமிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும்" விதித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment