Monday, September 22, 2014
அவினாசி புதிய பஸ் நிலையத்தில் அவினாசியிலிருந்து திருப்பூர் செல்லும் (வழித்தட எண் 32) டி.என்.38எண்1462 என்ற அரசு பஸ்சில் பொதுமக்கள், கல்லூரி மாணவ–மாணவிகள் உள்பட பலர் ஏறினர். கண்டக்டர் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்து வந்தார்.
அவினாசியில் இருந்து திருப்பூர் செல்வதற்கு 8 ரூபாய் டிக்கெட்டை பயணிகளுக்கு கொடுத்துள்ளார். இதில் சில பயணிகள் கூடுதலாக பயணக்கட்டணம் கேட்பதாக கூறி சீட்டை வாங்க மறுத்தனர். அவினாசியில் இருந்து திருப்பூர் செல்ல கட்டணம் 5 ரூபாய் மட்டும்தானே, எதற்காக அதிக கட்டணம் கேட்கிறீர்கள் என கண்டக்டரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே பயணிகள் அவினாசி புதிய பஸ் நிலையத்தில் பஸ்சை சிறை பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பயணி ஒருவர் கூறுகையில், ‘இவ்வழியே இயங்கும் அனைத்து பஸ்களும் சாதாரண பஸ்களே. எனவே சாதாரண கட்டணம் தான் வசூலிக்க வேண்டும். போக்குவரத்து கழகத்தினர் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக் கின்றனர்.
இவர்கள் கேட்கும் கட்ட ணத்திற்கான ஆணை எதையும் அரசு வழங்கவில்லை. இதை அறியாமல் பயணிகள் ஏமாந்து வருகின்றனர். இது தொடர்பாக தகவல் உரிமைச் சட்டத்திலிருந்து, தகவலை பெற்று போக்குவரத்து நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது எனவே அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து அறிந்த போலீசார், வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் பாலசுப் பிரமணியம் ஆகியோர் சம்பவ இடம் வந்து அதிக கட்டணம் வசூல் செய்யும் பஸ்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக பயணிகளை சமரசம் செய்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள் கலைந்து சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
0 comments:
Post a Comment