Monday, September 22, 2014
அவினாசி புதிய பஸ் நிலையத்தில் அவினாசியிலிருந்து திருப்பூர் செல்லும் (வழித்தட எண் 32) டி.என்.38எண்1462 என்ற அரசு பஸ்சில் பொதுமக்கள், கல்லூரி மாணவ–மாணவிகள் உள்பட பலர் ஏறினர். கண்டக்டர் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்து வந்தார்.
அவினாசியில் இருந்து திருப்பூர் செல்வதற்கு 8 ரூபாய் டிக்கெட்டை பயணிகளுக்கு கொடுத்துள்ளார். இதில் சில பயணிகள் கூடுதலாக பயணக்கட்டணம் கேட்பதாக கூறி சீட்டை வாங்க மறுத்தனர். அவினாசியில் இருந்து திருப்பூர் செல்ல கட்டணம் 5 ரூபாய் மட்டும்தானே, எதற்காக அதிக கட்டணம் கேட்கிறீர்கள் என கண்டக்டரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே பயணிகள் அவினாசி புதிய பஸ் நிலையத்தில் பஸ்சை சிறை பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பயணி ஒருவர் கூறுகையில், ‘இவ்வழியே இயங்கும் அனைத்து பஸ்களும் சாதாரண பஸ்களே. எனவே சாதாரண கட்டணம் தான் வசூலிக்க வேண்டும். போக்குவரத்து கழகத்தினர் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக் கின்றனர்.
இவர்கள் கேட்கும் கட்ட ணத்திற்கான ஆணை எதையும் அரசு வழங்கவில்லை. இதை அறியாமல் பயணிகள் ஏமாந்து வருகின்றனர். இது தொடர்பாக தகவல் உரிமைச் சட்டத்திலிருந்து, தகவலை பெற்று போக்குவரத்து நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது எனவே அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து அறிந்த போலீசார், வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் பாலசுப் பிரமணியம் ஆகியோர் சம்பவ இடம் வந்து அதிக கட்டணம் வசூல் செய்யும் பஸ்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக பயணிகளை சமரசம் செய்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள் கலைந்து சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
0 comments:
Post a Comment