Monday, September 22, 2014

On Monday, September 22, 2014 by Unknown in ,    


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு கடந்த 18–ந் தேதி நடைபெற்றது. பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
பல்லடம் நகராட்சி 6–வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு 859 வாக்காளர்கள் வாக்களித்தனர். இதில் அ.தி.மு.க. வேட்பாளர் சிவகாமி பழனிச்சாமி 638 வாக்குகள் பெற்றார்.
இவருக்கு அடுத்தபடியாக சுயேட்சை வேட்பாளர் மல்லிகா 108 வாக்குகளும், மார்க்சிஸ்டு (சி.பி.எம்.) வேட்பாளர் சாந்தாமணி 78 வாக்குகளும், பா.ஜனதா வேட்பாளர் சந்திரா 35 வாக்குகளும் பெற்று தோல்வியடைந்தனர்.
530 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் சிவகாமி பழனிச்சாமி வெற்றி பெற்றார். அவருக்கு தேர்தல் அலுவலர் ப.நாராயணன் மற்றும் தேர்தல் பார்வையாளர் ராஜவேலு வெற்றி சான்றிதழ் வழங்கினர். அ.தி.மு.க. வேட்பாளர் தவிர மற்ற அனைவரும் டெபாசிட் இழந்தனர்.

0 comments: