Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
பல்லடம் : பல்லடம் அருகே, தனியார் டையிங் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், துணிகள் எரிந்து சேதமடைந்தன.
கரைப்புதூரில் விஜய் என்பவருக்கு சொந்தமான டையிங் நிறுவனம் செயல்படுகிறது. இப்பகுதியில் நேற்று மாலை யாரோ புகைபிடித்து விட்டு, அணைக்காமல் போட்டுச் சென்றுள்ளனர். நெருப்பு பரவி, டையிங் செட் அருகே இருந்த தென்னை ஓலை எரியத் துவங்கியது. இதைப்பார்த்த பொதுமக்கள், தீயை அணைக்க முயன்றனர். தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். அதற்குள், தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கு பரவியது. இதில், டையிங் செட் மேற்கூரை மற்றும் துணி எரிந்து சேதமாகின. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் ஒருமணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

0 comments: