Monday, September 15, 2014
அவிநாசி : அவிநாசி அருகே கிணற்றுக்குள் விழுந்த புள்ளி மானை, தீயணைப்பு துறையினர் நேற்று உயிருடன் மீட்டனர்.
அவிநாசி ஐயப்பன் கோவில் அருகே கரண்ட்காரர் தோட்டத்தை சேர்ந்தவர், மாரப்பன். இவரது தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில், 12ம் தேதி காலை புள்ளி மான் ஒன்று தவறி விழுந்தது. திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறை வீரர்கள், நேற்று முன்தினம் மானை மீட்க முயற்சித்தனர். வலை விரித்தோ, அல்லது மயக்க மருந்து செலுத்தினால் மட்டுமே மானை பிடிக்க முடியும் என அவர்கள் தெரிவித்தனர். அதனால், உடுமலை வனச்சரகம் அமராவதியில் இருந்து, நேற்று வலை கொண்டு வரப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மோகன், ஜெகன் ஆகியோர், 70 அடி ஆழ கிணற்றுக்குள் இறங்கி, மான் மீது வலையை வீசினர். மற்ற வீரர்கள், வலையை மேலே இழுத்து, மானை காப்பாற்றினர்.
வனவர் முருகேசன் கூறுகையில்,""கிணற்றில் விழுந்த ஆண் புள்ளி மானுக்கு, இரண்டரை வயதிருக்கும். கிணற்றுக்குள் இருந்ததால், மிகவும் பயந்துள்ளது. லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட மான், சிகிச்சைக்குபின் சத்தியமங்கலம் வனப்பகுதியில் விடப்படும்,'' என்றார்.
அப்பகுதியினர் கூறுகையில், "இரண்டு நாட்களாக, கிணற்றுக்குள் விழுந்து உயிருக்கு போராடிய மானை, தீயணைப்பு துறையினர் போராடி, பத்திரமாக மீட்டுள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது,' என்றனர்.
அவிநாசி ஐயப்பன் கோவில் அருகே கரண்ட்காரர் தோட்டத்தை சேர்ந்தவர், மாரப்பன். இவரது தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில், 12ம் தேதி காலை புள்ளி மான் ஒன்று தவறி விழுந்தது. திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறை வீரர்கள், நேற்று முன்தினம் மானை மீட்க முயற்சித்தனர். வலை விரித்தோ, அல்லது மயக்க மருந்து செலுத்தினால் மட்டுமே மானை பிடிக்க முடியும் என அவர்கள் தெரிவித்தனர். அதனால், உடுமலை வனச்சரகம் அமராவதியில் இருந்து, நேற்று வலை கொண்டு வரப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மோகன், ஜெகன் ஆகியோர், 70 அடி ஆழ கிணற்றுக்குள் இறங்கி, மான் மீது வலையை வீசினர். மற்ற வீரர்கள், வலையை மேலே இழுத்து, மானை காப்பாற்றினர்.
வனவர் முருகேசன் கூறுகையில்,""கிணற்றில் விழுந்த ஆண் புள்ளி மானுக்கு, இரண்டரை வயதிருக்கும். கிணற்றுக்குள் இருந்ததால், மிகவும் பயந்துள்ளது. லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட மான், சிகிச்சைக்குபின் சத்தியமங்கலம் வனப்பகுதியில் விடப்படும்,'' என்றார்.
அப்பகுதியினர் கூறுகையில், "இரண்டு நாட்களாக, கிணற்றுக்குள் விழுந்து உயிருக்கு போராடிய மானை, தீயணைப்பு துறையினர் போராடி, பத்திரமாக மீட்டுள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது,' என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

0 comments:
Post a Comment