Monday, September 15, 2014
திருப்பூர் மாநகராட்சியில்இடைத்தேர்தல் நடைபெற உள்ள, இரு வார்டுகளுக்கு வெளியிடப்பட்டுள்ள, புதிய வாக்காளர் துணை பட்டியலில், போட்டோக் கள் இல்லை. அதனால், கள்ள ஓட்டு போடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதற்கு தீர்வு காண, மாநில தேர்தல் கமிஷனுக்கு மாவட்ட நிர்வாகம் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி 22வது வார்டு மற்றும் 45வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் வரும் 18ல் நடக்கிறது. கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது, 22வது வார்டில் 8,538 வாக்காளர்கள் இருந்தனர்; தற்போது 12 ஆயிரத்து 290 வாக்காளர்கள் உள்ளனர். 45வது வார்டில் கடந்த தேர்தலில், 10 ஆயிரத்து 599 ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை, தற்போது 13 ஆயிரத்து 295 ஆக உயர்ந்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலுக்கு பயன்படுத்திய பட்டியல் அடிப்படையில், உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2012, 2013 மற்றும் நடப்பு ஆண்டில் மேற்கொண்ட திருத்தத்தின் அடிப்படையில், துணை பட்டியல்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 22வது வார்டில் தயாரிக்கப்பட்டுள்ள பட்டியல்களில், 2,156 ஆண்கள்; 1,939 பெண்கள் என 4,095 வாக்காளர்களின் போட்டோ இல்லாமல், பட்டியல் தயாரித்து, "பூத் சிலிப்' வழங்கப்பட்டுள்ளது.
வாக்காளர் அட்டை எண் தெளிவாக அச்சிடப்பட்டுள்ள நிலையில், பட்டியலில் போட்டோ மட்டும் இல்லாததால், எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. கள்ள ஓட்டு பதிவாக அதிக வாய்ப்பு இருப்பதால், போட்டோவுடன் கூடிய துணை பட்டியல் வெளியிட வேண்டும். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, வாக்காளர்களின் உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என மா.கம்யூ., மற்றும் இந்திய கம்யூ., கட்சிகள், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் மனு கொடுத்துள்ளன. தேர்தல் நடத்தும் அலுவலரான, மாநகராட்சி கமிஷனர் அசோகனிடம் கேட்டபோது, ""வாக்காளர் பட்டியல் போட்டோ இல்லாமல் இருப்பது தொடர்பாக, அரசியல் கட்சியினர் கொடுத்த கோரிக்கைகள், மாவட்ட நிர்வாகத்துக்கு தெரி விக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், மாநில தேர்தல் கமிஷனுடன் பேசி, வெகுவிரைவில் தீர்வு பெற்றுத்தரும்,'' என்றார்.
மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, "அரசியல் கட்சியினர் கொடுத்த கடிதங்கள் அடிப்படையில், மாவட்ட நிர்வாகம், தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக, நாளை (இன்று) அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது. தேர்தல் கமிஷன் வழிகாட்டுதலுக்கு ஏற்ப, அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,' என்றனர்.
திருப்பூர் மாநகராட்சி 22வது வார்டு மற்றும் 45வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் வரும் 18ல் நடக்கிறது. கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது, 22வது வார்டில் 8,538 வாக்காளர்கள் இருந்தனர்; தற்போது 12 ஆயிரத்து 290 வாக்காளர்கள் உள்ளனர். 45வது வார்டில் கடந்த தேர்தலில், 10 ஆயிரத்து 599 ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை, தற்போது 13 ஆயிரத்து 295 ஆக உயர்ந்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலுக்கு பயன்படுத்திய பட்டியல் அடிப்படையில், உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2012, 2013 மற்றும் நடப்பு ஆண்டில் மேற்கொண்ட திருத்தத்தின் அடிப்படையில், துணை பட்டியல்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 22வது வார்டில் தயாரிக்கப்பட்டுள்ள பட்டியல்களில், 2,156 ஆண்கள்; 1,939 பெண்கள் என 4,095 வாக்காளர்களின் போட்டோ இல்லாமல், பட்டியல் தயாரித்து, "பூத் சிலிப்' வழங்கப்பட்டுள்ளது.
வாக்காளர் அட்டை எண் தெளிவாக அச்சிடப்பட்டுள்ள நிலையில், பட்டியலில் போட்டோ மட்டும் இல்லாததால், எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. கள்ள ஓட்டு பதிவாக அதிக வாய்ப்பு இருப்பதால், போட்டோவுடன் கூடிய துணை பட்டியல் வெளியிட வேண்டும். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, வாக்காளர்களின் உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என மா.கம்யூ., மற்றும் இந்திய கம்யூ., கட்சிகள், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் மனு கொடுத்துள்ளன. தேர்தல் நடத்தும் அலுவலரான, மாநகராட்சி கமிஷனர் அசோகனிடம் கேட்டபோது, ""வாக்காளர் பட்டியல் போட்டோ இல்லாமல் இருப்பது தொடர்பாக, அரசியல் கட்சியினர் கொடுத்த கோரிக்கைகள், மாவட்ட நிர்வாகத்துக்கு தெரி விக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், மாநில தேர்தல் கமிஷனுடன் பேசி, வெகுவிரைவில் தீர்வு பெற்றுத்தரும்,'' என்றார்.
மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, "அரசியல் கட்சியினர் கொடுத்த கடிதங்கள் அடிப்படையில், மாவட்ட நிர்வாகம், தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக, நாளை (இன்று) அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது. தேர்தல் கமிஷன் வழிகாட்டுதலுக்கு ஏற்ப, அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,' என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

0 comments:
Post a Comment