Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by Unknown in    


மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் கொளத்துரை சேர்ந்தவர் மேகலா. மேகலா மாடு வளர்ந்து வருகிறார். கடந்த மாதம் நிறைமாதமாக கர்ப்பிணியாக இருந்த பசு ஒன்று கன்று ஈன்றது. அந்த கன்று அதிசயமாக மூன்று கண்களுடன் பிறந்தது. இதனையடுத்து இதுதொடர்பான தகவல் சுற்றுவட்டார பகுதி முழுவதும் பரவியது. இதனையடுத்து அப்பகுதிவாசிகள் விரைந்து வந்து கன்றுகுட்டியை பார்த்து செல்கின்றனர். கன்றுகுட்டி நெற்றிக் கண் உள்ளிட்ட மூன்று கண்களுடன் உள்ளதால் அதனை இந்து கடவுள் சிவனின் அவதாரம் என்று கருதி மக்கள் வழிபாடு செய்கின்றனர்.

சிவனின் அவதாரமக கருதப்படும் அந்த கன்றுவுக்கு அப்பகுதி மக்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர். கன்றுகுட்டியின் படம் அனைத்து சமூக வலைதளங்களிலும் பரவியுள்ளது. பல்வேறு இடங்களில் இருந்துவந்து சில சிவன் அவதாரமாக கருதப்படும் கன்றுவை வழிபாடு செய்து வருகின்றனர். "நாம் இந்த கன்று வழிபாட்டால் கிராம மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்று நம்புகிறோம்." என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.


ஷர்மிளா என்ற இளம்பெண் கூறுகையில், இந்த கன்று மூன்று கண்களுடன் பிறந்துள்ளது. எனவே நாங்கள் கன்றுவை இந்து கடவுள் சிவன் என்று நம்புகிறோம். கடவுள் சிவனுக்கும் மூன்று கண்கள், அவர் இங்கே பிறந்துள்ளார் என்று நம்புகிறோம். என்று தெரிவித்துள்ளார். இது எங்களுடைய கடவுள் என்பதினாலே நாங்கள் பல்வேறு கிராமங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பயணம் செய்து கன்றுவை வழிபாடு செய்கிறோம். என்று அவர் தெரிவித்துள்ளார். 

0 comments: