Wednesday, September 17, 2014
திருப்பூர், : திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் வரை ஏமாற்றி தலைமறைவானவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கலெக் டரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்தனர்.
மதுரை மாவட்டம் சிலுக்குவார்ப்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்ரமணி (52). இவர், தனது குடும்பத்துடன் திருப்பூர் பாளையக்காடு, சஞ்சய் நகர் பகுதியில் கடந்த 20 வருடங்களாக வசித்து வருகிறார். இவர், தனது மனைவி பரிமளா பெயரில், கடந்த 15 வருடங்களாக பலகார சீட்டு, ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இதில் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை வாரம், மாதம் என பணத்தை வசூல் செய்து ஏலச்சீட்டு நடத்தி வந்ததாக தெரிகிறது. இதில், அப்பகுதியில் உள்ள கோல் டன் நகர், சஞ்சய் நகர், சூர்யா காலனி, ஆர்.எஸ் புரம் ஆகிய பகுதிகளில் இரு ந்து 100க்கும் மேற்பட்டவர்கள் இவரிடம் ஏலச்சீட்டு மூலமாக பணம் செலுத்தி வந்தனர்.
இந்நிலையில், கடந்த வருடம் ஏலச்சீட்டு முடிவடைந்து, பலநாட்களாகியும் பாலசுப்ரமணி பணத்தை திருப்பி தராமல் இருந்துள்ளார். மேலும் சீட்டு போட்டவர்கள் பணம் கேட்கும் போதெல்லாம் ஒரு மாதத்தில் தந்து விடுவதாக கூறி காலம் கடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது குடும்பத்துடன் வீட்டைகாலி செய்து விட்டு பாலசுப்ரமணி தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்து, ஏலச் சீட்டு நடத்தி மோ சடியில் ஈடுபட்டு தலைமறைவான பாலசுப்ரமணியம் மீது நடவடிக்கை எடுத்து அவரிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
0 comments:
Post a Comment