Wednesday, September 17, 2014
திருப்பூர், : திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் வரை ஏமாற்றி தலைமறைவானவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கலெக் டரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்தனர்.
மதுரை மாவட்டம் சிலுக்குவார்ப்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்ரமணி (52). இவர், தனது குடும்பத்துடன் திருப்பூர் பாளையக்காடு, சஞ்சய் நகர் பகுதியில் கடந்த 20 வருடங்களாக வசித்து வருகிறார். இவர், தனது மனைவி பரிமளா பெயரில், கடந்த 15 வருடங்களாக பலகார சீட்டு, ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இதில் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை வாரம், மாதம் என பணத்தை வசூல் செய்து ஏலச்சீட்டு நடத்தி வந்ததாக தெரிகிறது. இதில், அப்பகுதியில் உள்ள கோல் டன் நகர், சஞ்சய் நகர், சூர்யா காலனி, ஆர்.எஸ் புரம் ஆகிய பகுதிகளில் இரு ந்து 100க்கும் மேற்பட்டவர்கள் இவரிடம் ஏலச்சீட்டு மூலமாக பணம் செலுத்தி வந்தனர்.
இந்நிலையில், கடந்த வருடம் ஏலச்சீட்டு முடிவடைந்து, பலநாட்களாகியும் பாலசுப்ரமணி பணத்தை திருப்பி தராமல் இருந்துள்ளார். மேலும் சீட்டு போட்டவர்கள் பணம் கேட்கும் போதெல்லாம் ஒரு மாதத்தில் தந்து விடுவதாக கூறி காலம் கடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது குடும்பத்துடன் வீட்டைகாலி செய்து விட்டு பாலசுப்ரமணி தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்து, ஏலச் சீட்டு நடத்தி மோ சடியில் ஈடுபட்டு தலைமறைவான பாலசுப்ரமணியம் மீது நடவடிக்கை எடுத்து அவரிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment