Wednesday, September 17, 2014
திருப்பூர்:திருப்பூரில் டிசம்பர் இறுதிக்குள் வியாபார கடைகள் மற்றும்
வீடுகளை நைஜீரியர்கள் காலி செய்யவேண்டும் என திருப்பூர் செகண்ட்ஸ் பனியன்
உரிமையாளர் அசோசியேஷன் சார்பில் நேற்று நடந்த செயற்குழுவில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் செகண்ட்ஸ் பனியன் உரிமையாளர் அசோசியேஷன்
சார்பில் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் திருப்பூரில்
நடைபெற்றது. கூட்டத்திற்கு செயலாளர் அப்துல் மஜீத் தலைமை தாங்கினார்.
தலைவர் சுந்தரம், துணை தலைவர் குமார், பொருளாளர் கந்தசாமி, துணை செயலாளர்
சித்திக், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில், திருப்பூரில்
வசிக்கும் நைஜீரியர்கள் மீது பல வழக்குகள் உள்ளன. எனவே டிசம்பர்
இறுதிக்குள் நைஜீரியர்கள் வியாபார கடைகள், வீடுகள் மற்றும் கம்பெனிகளை காலி
செய்ய வேண்டும், நைஜீரியர்கள் பனியன் துணிகளை வாங்கி செல்லுவது மட்டுமே
நடைபெற வேண்டும், மேலும் கடந்த ஆண்டு காதர் பேட்டையில் கடைகளை காலி செய்து
விட்டு சரக்குகளை வாங்கி செல்லும் வர்த்தகர்களாக வந்து செல்லுவதாக
உறுதியளித்து நைஜீரியர்கள் கடைகளை காலி செய்தனர். அதன் பிறகு புதிதாக வந்த
நைஜீரியர்கள் மீண்டும் கடைகளை வைத்து நடத்தி வருகின்றனர். மாநகராட்சி உரிய
நடவடிக்கை எடுத்து அவர்களை அப்புறப்படுத்த வேண்டும். அவ்வாறு நடக்காவிடில்,
காதர் பேட்டை வியாபாரிகள் சார்பில் ஒருநாள் உண்ணாவிரதம் மற்றும்
கடையடைப்பு நடத்தப்படும், தற்போது காதர் பேட்டைக்குள் சுகாதார சீர்கேடு
ஏற்பட்டுள்ளது. சாக்கடைகள் தூர்வாரப்படாமலும், தார்சாலைகள், மின் விளக்கு
சரி செய்யப்படாமலும் உள்ளது. இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
0 comments:
Post a Comment