Monday, September 15, 2014
பல்லடம் : பல்லடத்தில் நேற்று நடைபெற்ற விழிப்புணர்வு தொடர் ஓட்டப்போட்டியில், பல்வேறு பிரிவுகளில் திருப்பூர் வீரர்கள் வெற்றி பெற்றனர்.
மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு, இயற்கை நலன் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, பல்லடம் சத்ரபதி சிவாஜி ஸ்போர்ட்ஸ் கிளப், லயன்ஸ் கிளப் சார்பில், விழிப்புணர்வு தொடர் ஓட்டப்போட்டி நேற்று நடைபெற்றது. பல்லடம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை நடைபெற்ற போட்டியை, எம்.எல்.ஏ., பரமசிவம் துவக்கி வைத்தார். 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் 4 கி.மீ., போட்டியிலும்; 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் 6 கி.மீ., ஓபன் பிரிவு மற்றும் 8 கி.மீ., போட்டியிலும்; 40 வயதுக்கு மேற்பட்டோர் 6 கி.மீ., பிரிவிலும்; பெண்கள் 4 கி.மீ., பிரிவிலும் பங்கேற்றனர்.
மாணவியர் பிரிவில் கோவை சேர்ந்த அம்பிகா முதலிடம் பெற்றார். கோவை கிருஷ்ணவேணி இரண்டாமிடம், திருப்பூரை சேர்ந்த சினேகா மூன்றாமிடம் பிடித்தனர். ஆண்கள் பிரிவில், கோவை சேர்ந்த ஹரிகிருஷ்ணா முதலிடம் பெற்றார். திருப்பூரை சேர்ந்த மயில்சாமி இரண்டாமிடம், திருப்பூர் அருண்குமார் மூன்றாமிடம் பெற்றனர். 10 முதல் 12ம் வகுப்பு மாணவியர் பிரிவு தொடர் ஓட்டத்தில், பல்லடத்தை சேர்ந்த கோகிலதேவி முதலிடம், திருப்பூர் சவுந்தர்யா இரண்டாமிடம், கோவை சிவசில்வா மூன்றாமிடம் பெற்றனர். மாணவர் பிரிவில், கோவை சக்திவேல் முதலிடம், கோவை பாலன் இரண்டாமிடம், திருப்பூர் ஆனந்தராஜ் மூன்றாமிடம் பிடித்தனர்.
பொதுப்பிரிவு பெண்கள் போட்டியில், திருப்பூர் பிரேமா முதலிடம் பெற்றார். கோவை விஜயாபாண்டி இரண்டாமிடம், பல்லடம் லட்சுமி மூன்றாமிடம் பெற்றனர். ஆண்கள் பிரிவில், கோவை சேர்ந்த மயில்சாமிக்கு முதலிடம் கிடைத்தது. கோவை ராமச்சந்திரன் இரண்டாமிடம், திருப்பூர் பிரேம்குமார் மூன்றாமிடம் பிடித்தனர்.தொடர் ஓட்டத்தில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, பதக்கங்கள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும், சான்றிதழ் வழங்கப்பட்டது.
மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு, இயற்கை நலன் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, பல்லடம் சத்ரபதி சிவாஜி ஸ்போர்ட்ஸ் கிளப், லயன்ஸ் கிளப் சார்பில், விழிப்புணர்வு தொடர் ஓட்டப்போட்டி நேற்று நடைபெற்றது. பல்லடம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை நடைபெற்ற போட்டியை, எம்.எல்.ஏ., பரமசிவம் துவக்கி வைத்தார். 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் 4 கி.மீ., போட்டியிலும்; 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் 6 கி.மீ., ஓபன் பிரிவு மற்றும் 8 கி.மீ., போட்டியிலும்; 40 வயதுக்கு மேற்பட்டோர் 6 கி.மீ., பிரிவிலும்; பெண்கள் 4 கி.மீ., பிரிவிலும் பங்கேற்றனர்.
மாணவியர் பிரிவில் கோவை சேர்ந்த அம்பிகா முதலிடம் பெற்றார். கோவை கிருஷ்ணவேணி இரண்டாமிடம், திருப்பூரை சேர்ந்த சினேகா மூன்றாமிடம் பிடித்தனர். ஆண்கள் பிரிவில், கோவை சேர்ந்த ஹரிகிருஷ்ணா முதலிடம் பெற்றார். திருப்பூரை சேர்ந்த மயில்சாமி இரண்டாமிடம், திருப்பூர் அருண்குமார் மூன்றாமிடம் பெற்றனர். 10 முதல் 12ம் வகுப்பு மாணவியர் பிரிவு தொடர் ஓட்டத்தில், பல்லடத்தை சேர்ந்த கோகிலதேவி முதலிடம், திருப்பூர் சவுந்தர்யா இரண்டாமிடம், கோவை சிவசில்வா மூன்றாமிடம் பெற்றனர். மாணவர் பிரிவில், கோவை சக்திவேல் முதலிடம், கோவை பாலன் இரண்டாமிடம், திருப்பூர் ஆனந்தராஜ் மூன்றாமிடம் பிடித்தனர்.
பொதுப்பிரிவு பெண்கள் போட்டியில், திருப்பூர் பிரேமா முதலிடம் பெற்றார். கோவை விஜயாபாண்டி இரண்டாமிடம், பல்லடம் லட்சுமி மூன்றாமிடம் பெற்றனர். ஆண்கள் பிரிவில், கோவை சேர்ந்த மயில்சாமிக்கு முதலிடம் கிடைத்தது. கோவை ராமச்சந்திரன் இரண்டாமிடம், திருப்பூர் பிரேம்குமார் மூன்றாமிடம் பிடித்தனர்.தொடர் ஓட்டத்தில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, பதக்கங்கள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும், சான்றிதழ் வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

0 comments:
Post a Comment