Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், விளையாட்டு பயிற்சியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கு, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
திருப்பூர் சிக்கண்ணா கலை அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ரூ.4.40 கோடி மதிப்பில், பல்நோக்கு விளையாட்டு அரங்கம் கட்டப்படுகிறது. கைப்பந்து, கூடைப்பந்து, இறகுபந்து, மேஜைபந்து, ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட போட்டிகள் நடத்தும் வகையில், மைதானம் ஏற்படுத்தப்படும்.அதேநேரத்தில், விளையாட்டுக்களை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க பயிற்சியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கூடைப்பந்து விளையாட்டுக்கு மட்டுமே, அரசு பயிற்சியாளர் உள்ளார். மற்ற விளையாட்டுகளுக்கு இல்லாததால், விளையாட்டில் சாதிக்க விரும்பும் வீரர், வீராங்கனைகள், வெளியூர் பயிற்சியாளர்களையே நம்பியுள்ளனர்.இந்நிலையில், விளையாட்டு பயிற்சியாளர்களை நியமிக்கும் வகையில், தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. பயிற்சியாளர்கள் விரைவில் நியமிக்கப்பட்டால், திறமையை வளர்த்து கொள்ள மாணவ, மாணவியருக்கு, பேருதவியாக இருக்கும்.மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமலிங்கம் கூறுகையில், ""திருப்பூரில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் கட்டுமான பணி துரிதகதியில் நடந்து வருகிறது.""இவை முடிந்ததும், விளையாட்டு பயிற்சியாளர்கள் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, மாவட்ட நிர்வாகம் வாயிலாக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்துள்ளோம்,'' என்றார்.

0 comments: