Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
திருப்பூர் : மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில், திருப்பூர் வீரர் வெண்கல பதக்கம் வென்றார்.
சென்னை ரைபிள் கிளப் சார்பில், மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி, சென்னை அடுத்த அலமாதியில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமானோர் பங்கேற்றனர்.ஆண்களுக்கான சர்வதேச ட்ராப் மற்றும் டபுள் ட்ராப் பிரிவில், திருப்பூரை சேர்ந்த ரமேஷ்குமார் வெண்கல பதக்கம் வென்றார். இவருக்கு, சென்னை ரைபிள் கிளப் செயலாளர் சீதாராமராவ், இணை செயலாளர் ரவிகிருஷ்ணன் ஆகியோர், பதக்கம் வழங்கி கவுரவித்தனர்.

0 comments: