Friday, May 13, 2016
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ச.ஜெயந்தி கூறியதாவது:
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்களிக்க, வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள சீட்டுகள், கடவுச் சீட்டு, ஓட்டுநர் உரிமம், பொதுத்
துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய, மாநில அரசு நிறுவனங்களால் தங்கள் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, வங்கி மற்றும் அஞ்சலகங்களில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம், வருமான வரித் துறை நிரந்தரக் கணக்கு எண் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பணிக்கான அடையாள அட்டை, தொழிலாளர் நலத் துறையால் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு மின்னணு அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், சட்டப் பேரவை உறுப்பினர், மக்களை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக ரீதியான அடையாள அட்டைகளை பயன்படுத்தலாம்.
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை பயன்படுத்த இயலாதவர்கள், மேற்கூறப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி தங்கள் வாக்கினைச் செலுத்தி, நூறு சதவீத வாக்குப் பதிவு என்ற இலக்கினை அடைவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
0 comments:
Post a Comment