Friday, August 29, 2014
On Friday, August 29, 2014 by Unknown in Tiruvannamalai

திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்டது ராஜாபாளையம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரது 10 ஆடுகள், கடந்த ஜூலை 13-ம் தேதி திருடு போனது. இதுகுறித்து, வேட்டவலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், கீழ்பென்னாத்தூர் அடுத்த சின்னகழிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் மகன் ஏழுமலை (23), கீழ்பென்னாத்தூர் அடுத்த கார்ணாம்பூண்டி கிராமம், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் செந்தமிழ்ச்செல்வன் (22) ஆகியோர் ஆடுகளைத் திருடியதாக தெரியவந்ததாம்.
இதையடுத்து, இருவரையும் வேட்டவலம் காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். சில நாட்கள் கழித்து இருவரும் ஜாமீனில் வெளியே வந்து, தினமும் வேட்டவலம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர்.
ரூ.10 ஆயிரம் லஞ்சம்:
ஏழுமலை, செந்தமிழ்ச்செல்வன் ஆகியோரை கைது செய்த போலீஸார், அப்போது அவர்கள் ஓட்டிவந்த பைக் ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர். ஆனால், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டபோது பைக் பறிமுதல் செய்யப்பட்டதாக வழக்கு ஆவணங்களில் பதிவு செய்யவில்லையாம்.ஜாமீனில் வந்தபிறகு தனது பைக்கை திரும்பத் தருமாறு காவல் ஆய்வாளர் சீனிவாசனிடம், ஏழுமலை கேட்டாராம். பைக்கை தராமல் தொடர்ந்து காலம் கடத்தி வந்த ஆய்வாளர் சீனிவாசன், ரூ.10 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே பைக்கை திரும்பத் தர முடியும் என்று கூறினாராம்.
இதுகுறித்து, திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புப் போலீஸில், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) ஏழுமலை புகார் கொடுத்தார். போலீஸாரின் அறிவுரையின்பேரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) மதியம் ஏழுமலை வேட்டவலம் காவல் நிலையத்துக்குச் சென்றார்.அப்போது, பணியில் இருந்த ஆய்வாளர் சீனிவாசனிடம் ரூ.10 ஆயிரத்தை ஏழுமலை கொடுத்துள்ளார். உடனே, பணியில் இருந்த நிலைய எழுத்தரும், சிறப்பு உதவி ஆய்வாளருமான கிருஷ்ணசாமியிடம் பணத்தை கொடு என்று ஆய்வாளர் சீனிவாசன் கூறினாராம்.
அதன்படி, சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணசாமி ரூ.10 ஆயிரத்தை வாங்கி, ஆய்வாளர் சீனிவாசனிடம் கொடுத்தாராம். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார், ஆய்வாளர் சீனிவாசன், சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணசாமி ஆகியோரை கைது செய்தனர்.தொடர்ந்து, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) இரவு வரை இருவரிடமும் வேட்டவலம் காவல் நிலையத்திலேயே லஞ்ச ஒழிப்புப் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச் சம்பவம் திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் ...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
*சமயபுரம் கோவிலில் தமிழக அரசு ஆணையை மீறி உள்ளே நுழைந்து தரிசனம்* தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்திலிருந்து அனைத்து திருக்க...
0 comments:
Post a Comment