Thursday, February 11, 2016

On Thursday, February 11, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். 

தூத்துக்குடி அந்தோணியார்புரத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் செந்தூர்கனி (17). நேற்று மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை குமார் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

இது போல், தூத்துக்குடி அருகே உள்ள கொல்லம்பரம்பு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் முத்துலட்சுமி (13). குளத்தூரில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து படித்து வருகிறார். நேற்று காலை பள்ளிக்கு சென்றவர் மாலையில் வீடுதிரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை சுரேஷ் அளித்த புகாரின் பேரில் குளத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தூத்துக்குடி முத்தையாபுரம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மகன் சக்திகுமார் (17). தூத்துக்குடியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று காலை பள்ளிக்கு சென்றவர் மாலையில் வீடுதிரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை நாகேந்திரன் அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  

0 comments: