Thursday, February 11, 2016
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி அந்தோணியார்புரத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் செந்தூர்கனி (17). நேற்று மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை குமார் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
இது போல், தூத்துக்குடி அருகே உள்ள கொல்லம்பரம்பு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் முத்துலட்சுமி (13). குளத்தூரில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து படித்து வருகிறார். நேற்று காலை பள்ளிக்கு சென்றவர் மாலையில் வீடுதிரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை சுரேஷ் அளித்த புகாரின் பேரில் குளத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மகன் சக்திகுமார் (17). தூத்துக்குடியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று காலை பள்ளிக்கு சென்றவர் மாலையில் வீடுதிரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை நாகேந்திரன் அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
0 comments:
Post a Comment