Thursday, February 11, 2016
தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த சரக்கு கப்பலில் சட்டவிரோதமாக கடத்தி வந்த 12 கிலோ தங்கக் கட்டிகளை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கேப் நிமோ என்ற சரக்கு கப்பல், கொழும்பு வழியாக நேற்று தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தது. இந்த கப்பலில் இருந்த கன்டெய்னர் பெட்டிகள் லாரி மூலம் தெர்மல் நகரில் உள்ள தனியார் யார்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், அந்த கண்டெய்னர் பெட்டிகளில் தங்கம் கடத்தி வரப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது, சுமார் மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான அந்த தங்கக் கட்டிகளை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.3.43 கோடி எனத் தெரிகிறது. மலேசியாவில் இருந்து, வீட்டு உபயோகப் பொருட்களுடன் சேர்த்து 12 கிலோ தங்கத்தை சட்ட விரோதமாக மறைத்து வைத்து தங்கத்தை கொண்டு வந்துள்ளது விசாரணையில் தெரிகிறது. கண்டெய்னர் பெட்டியின் உள்ளே வாஷிங் பவுடர் பாக்கெட்டுக்குள் இந்த தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக முகம்மது ரபீக், செல்வராஜ், ராஜூ, ரஹ்மத் அலி ஆகிய 4பேரை கைது செய்து மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment