Thursday, February 11, 2016
தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த சரக்கு கப்பலில் சட்டவிரோதமாக கடத்தி வந்த 12 கிலோ தங்கக் கட்டிகளை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கேப் நிமோ என்ற சரக்கு கப்பல், கொழும்பு வழியாக நேற்று தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தது. இந்த கப்பலில் இருந்த கன்டெய்னர் பெட்டிகள் லாரி மூலம் தெர்மல் நகரில் உள்ள தனியார் யார்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், அந்த கண்டெய்னர் பெட்டிகளில் தங்கம் கடத்தி வரப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது, சுமார் மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான அந்த தங்கக் கட்டிகளை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.3.43 கோடி எனத் தெரிகிறது. மலேசியாவில் இருந்து, வீட்டு உபயோகப் பொருட்களுடன் சேர்த்து 12 கிலோ தங்கத்தை சட்ட விரோதமாக மறைத்து வைத்து தங்கத்தை கொண்டு வந்துள்ளது விசாரணையில் தெரிகிறது. கண்டெய்னர் பெட்டியின் உள்ளே வாஷிங் பவுடர் பாக்கெட்டுக்குள் இந்த தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக முகம்மது ரபீக், செல்வராஜ், ராஜூ, ரஹ்மத் அலி ஆகிய 4பேரை கைது செய்து மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி : மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேட்டி : அக்டோர் 7ம் தேதி கூடுதல் மழை பெய்யும் என்பதால் மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு எதிர்க...
-
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு...
-
திருச்சி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் வைத்துள்ள விநாயகர் சிலைகளின் விவரங்கள் பின்வருமாறு... திருச்சி மாநகர் - 203, திரு...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருப்பூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியல் நேற்று அந்தந்த ஊராட்சி அமைப்புகளில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. மாவட்ட...
-
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். தமாக...
-
திருச்சி 10.01.16 திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டு இயக்கம் கண்டன ஆர்பாட்டம் ...
-
நிலமதிப்பை குறைவாக கணக்கிட்டு பத்திரப்பதிவு செய்ததாக பல்லடம் சார்பதிவாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், ...
0 comments:
Post a Comment